Thursday, 29 March 2018

சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்


Siragu sundra ramasamy1
தமிழில் புதுக்கவிதையானது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற காலமாக நாம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை குறிப்பிடலாம். சி.சு.செல்லப்பா நடத்திய இதழான ‘எழுத்து’ அத்தகைய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்விதழில் புதுக்கவிதைகளை அக்கால இளைஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாங்களும் அவைகளை முயன்று பார்த்தனர். அவ்வகையில் புதுக்கவிதையின் மரபிற்கு பல குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தோன்றினர் என்பதில் மிகையல்ல.
புதுக்கவிதையானது இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதன் வளர்ச்சி 1950-60 களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது என்று நாம் முன்னோடிகளின் பதிவுகளிலிருந்து தகவல்களை பெறுகிறோம். எனினும் சோதனை என்பது பிற்காலத்தில் மட்டுப்பட்டே காணப்பட்டது என்பதை ஆய்வுகளின் தரவுகள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் தமிழுக்கு புதுக்கவிதையாளராக அறிமுகம் ஆனவர் சுந்தர ராமசாமி.
சுந்தர ராமசாமியின் கவிதைக் கூறு:

1970-80களில் தமிழ் கவிதையில் தொய்வு நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கவிதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற வகையில் சுந்தர ராமசாமியின் கவிதைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவைகளின் கூறுபாடுகள் பிற்காலத்தில் கவிதை எழுத வந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தெம்பையும் அளித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 28 March 2018

ஶ்ரீதேவிகளும், அஸ்வினிகளும் மரணித்தும் கொல்லப்படுகின்றனர்!!


Siragu-Shridevi1

அண்மையில் இரு மரணச் செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒன்று புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மரணம். அவர் மரணச் செய்தி வந்தவுடன் நாடு முழுவதும் திரைப்பட ரசிகர்கள் அவர்களுக்கு அஞ்சலியைத் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அவரின் மரணம் மாரடைப்பால் அல்ல, குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து இறந்து விட்டார் என்ற செய்தி பரவியதும் எந்த மக்கள் விழுந்து விழுந்து அவரைப் போற்றி அஞ்சலி செலுத்தினார்களோ? அவர்களே ஒரு பெண்ணுக்கு இந்த போதை தேவையா? குடி போதையில் தவறி விழுந்து இறந்தவளுக்கு என்ன அஞ்சலி வேண்டிக் கிடக்கு என்று அந்த நடிகையின் ஒழுக்கத்தை கீழ்த்தரமாக பேசி, அவரின் மரணத்தை நையாண்டி செய்தும் பதிவுகள் இட்டனர்.

இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகின்றது. இதே திரைப்படத் துறையில் இருக்கும் பல ஆண் நடிகர்கள் குடித்து அழிந்து ஒழியவில்லையா? பல கவிஞர்கள் குடிக்கு அடிமையாகி மடியவில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் பல பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு உலா வரவில்லையா?.
ஆனால் அவர்களைப் பற்றி இன்று குறிப்பிட்டாலும் அவர் போன்ற நடிகர் உண்டா? அவர் போல கவிஞர் உண்டா? மனிதர் எப்படி வாழ்ந்துள்ளார் என்று போற்றிப் பாடும் இதே சமூகம் ஒரு நடிகையை இவ்வளவு தரம் தாழ்ந்து அவர் மரணத்தில் விமர்சிக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 March 2018

ராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.!


Siragu ramrajyarathayatrai1

கடந்த மாதம்,  உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக தென்னிந்தியாவிற்குள்  நுழைந்து,  கேரளா வழியாக, இரு தினங்களுக்கு முன், தமிழ்நாட்டிற்குள் வந்ததும், அதனைத் தொடர்ந்து நம் மாநிலத்தில் நடந்த போராட்டங்களும், கைதுகளும், சிலை உடைப்பு சம்பவங்கள் போன்றவைகளும் நடந்தேறியிருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  இந்த ரதயாத்திரையின் நோக்கம் ராமராஜ்ஜியம் அமைப்பது, ராமர் கோவில் கட்டுவோம்  என்பதாகும். அயோத்தியில், 400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அத்வானி அவர்களின் ராமராஜ்ஜிய ரதயாத்திரை ஏற்படுத்திய விளைவுகளும் நாடறிந்த செய்தியாகும். உண்மை இப்படியிருக்கையில், இப்போது, மறுபடியும், விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, இந்த ரதயாத்திரை என்ற ஒரு விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்கள் வழியாக உலா வருகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

இந்த ரதயாத்திரை என்பது தேவையில்லாத ஒன்று. இன்னமும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையாத நிலையில், ராமர் கோவில் கட்டுவோம் என்பது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. பல இனங்கள், கலாச்சாரங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் என  பன்முகத்தன்மையுள்ள நாடு. அப்படியிருக்கையில், ஒரு மதத்தை சார்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்வது நேர்மையாகுமா.? வடஇந்தியாவில், மதத்தை வைத்து அரசியல் செய்து, வெற்றி பெற்ற பா.ச.க அரசு, இங்கும் அதே யுக்தியை கையாளப்பார்க்கிறது என்பது தானே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/

Wednesday, 21 March 2018

நீத்தார் பெருமை (கவிதை)


மாட்சிமை தங்கிய மகளிருக்கு
உலக மகளிர்தின வாழ்த்துகள்!
Siragu penniyam1

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(?!)
செயற்கரிய செய்கலா தார்

என்னே ஒரு பொருத்தம்?
மகளிரின் நன்நாளில்
மகளிருக்கு மாண்பு செய்த
மகத்துவரே பேசுபொருள்!

சமூகம் விழித்தெழ
சமத்துவம் மேலோங்க
சுயம்புகள் சுடர்விட
நயம்பல செய்ததொரு



பெருமகன் பெரியார்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 20 March 2018

எதிர் வீடு (சிறுகதை)


Siragu Autism1

அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய கோலம் போட்டு செம்மண் செவ்வனே போடப்பட்டிருந்தது. வீட்டைப் புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர்வீடு மிகவும் கோலாகலமாயிருந்தது.


நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா ஃபிளாட்ஸ்” கோடம்பாக்கத்தில் இருக்கிறது. கீழே நான்கு வீடுகள். முதல் மாடியில் நான்கு, இரண்டாவது மாடியில் நான்கு ஆக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் இருக்கும். குடியிருப்புக்குள் நுழைந்ததும் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணையில் குடியிருப்பிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். வயதான முதியவர்கள் மாலை நேரத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் கீழே குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனைவி பத்மா, குழந்தை காஞ்சனா ஆக மூன்று பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது. என் எதிர் வீடு நிறைய நாளாய் பூட்டியிருந்தது. போன மாதம்தான் விற்றுப் போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 19 March 2018

பெண்களுக்கான அறிவுரைகள்


Siragu pengalukkaana2

யுனிசெஃப் (United Nations Children’s Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” எனப்படும் பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது, இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும் நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send – https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000 சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.


“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10 நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை. அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர். உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப்  காணொளி, ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப் பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில் முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும் என்று காட்ட முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 15 March 2018

புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)

புரட்சி எங்கும்!

siragu periyaar1

சிலைத கர்ப்பு செய்தார் பகைவர்
செயல்ப டும்காலம் இதுவென காட்டினார்
திரிபுரா மராட்டா கேரள வங்கம்
தென்தமிழ் நாடென எங்கும் புரட்சி!
பொதுவுடமை சிலைதனை தகர்த்தார் மக்கள்
பொறுமை இழந்ததனை கண்டோம்! லெனின்
புகட்டிய பொதுவுடமை தீயாய் பரவியது!

பகுத்தறிவு மேதை பெரியார் சிலைதனை
பகைகொண்டு சிதைத்தார் சாதி மக்களின்
பகையென உணர்ந்தார் புரட்சி பரவியது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/