Tuesday, 29 May 2018

அணங்கு

முன்னுரை:
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே
          – தொல்காப்பியம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல்-8/1
அணங்கு   முதலாய   நான்கும்   பற்றி    அச்சம்   பிறக்கும் என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் சூத்திரம் (257) வரையறுக்கிறது.  அதாவது,  ‘அணங்கு’,  ‘விலங்கு’,  ‘கள்வர்’,  ‘அரசர்’ ஆகியோர்  அச்சமென்னும்   மெய்ப்பாட்டிற்குக் காரணமாகியவர் என்கிறார் தொல்காப்பியர்.
அணங்கு என்பதற்குப் பொருள் கூறுமிடத்து பேராசிரியர், “அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும்” என்பார். அவர், “கட்புலனாகாமல் தம்  ஆற்றலாற்றீண்டி  வருத்தும் சூர்முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம்”, என்று இவ்வாறு தரும் இந்த விரிவான விளக்கத்தின் வழியாக ‘அணங்கு’ எனப்படுவது, ‘வருத்தும் திறன் கொண்டு, வருத்தும் தொழிலைச் செய்யும் ஆற்றல் கொண்டவை’  என்று புரிந்து கொள்ளலாம். ஆக, அணங்கு வருத்துவது அதனால் அது மக்களுக்கு அச்சம் விளைவிக்கிறது, அது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகவும் இருக்கலாம். இது பொதுமைப்படுத்தும் ஒரு விளக்கமாக, அச்சத்தை விளைவிக்கக் கூடிய அணங்கு வகைகளைக் குறிக்கிறது.
 siragu ananku1
I. இலக்கியங்களில் அணங்கு:

பொதுவாக இலக்கியங்களில் “அணங்கு” என்ற சொல் வருத்தும்-தெய்வத்தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்கொள்ளப்படுவதைக்  காணமுடிகிறது. இங்கு எடுத்துக்காட்டுகளாகக் குறளில்  இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்தும் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 25 May 2018

அறிவை விடச் சிறந்தது அறம்


siragu friends2
மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது.  இந்தப் பகுத்தறிவினைக் கொண்டு மனிதன்  ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.
ஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான் மனித உலகம்  பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும் கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.
அறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும், விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு பாழ்.

இன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”, ”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 24 May 2018

தலையாலங்கானம் போர்!! – சிறு குறிப்பு !!


siragu thalayaalangaanam1
தமிழர் வரலாற்றில் போரும், விறலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சங்க இலக்கியப் புறப் பாடல்களில் தமிழ் மன்னர்களின் போர் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது தலையானங்கானத்து மற்றும் வெண்ணிப் போர்கள் ஆகும்.
தலையாலங்கானம் திருவாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிரையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான், என்பதாக பல குறிப்புகள் புறநானுற்றுப் பாடல்கள், மதுரைக்காஞ்சி போன்ற பாடல் வரிகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். நற்றிணை, அகநானூறு போன்று அகப் பாடல்களிலும் இந்தப் போர் பற்றியக் குறிப்புகள் உண்டு.

புறநானூறு 19 இல் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த ஏழு அரசர்களைத் தலையாலங்கானப் போரில் வென்றான் என்றும், அந்தப் போரில் என் கணவனும் புதல்வரும் மாண்டனர். இனி நமக்கு என்ன இருக்கிறது என்ற மகளிர் கசிந்து அழுவதைப் பார்த்துக் கூற்றுவனே இரங்கிய போர்க்களம் அது என்ற குறிப்புகள் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 23 May 2018

காவேரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசின் தாமதமும்.!


 siragu kauvery river2
காவேரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது என கொள்ளலாம். இந்த அடிப்படை காவேரி நதிநீர் பங்கீட்டில், நாம் கடந்துவந்த பாதையை, கடந்தகால செயல்பாடுகளை நினைவுகூர்ந்தோமானால், தமிழக விவசாயிகள், காவேரி நீருக்காக எப்படியெல்லாம் தங்கள் சுயமரியாதையை இழந்து, போராடி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களை சந்திக்கக்கூட மனமில்லாமல் இந்நாட்டின் பிரதமர் எந்தளவிற்கு காலத்தை கடத்தி வந்திருக்கிறார் என்பதுவும் நாடறிந்த செய்தி. இப்படி இருக்கையில், கடந்த மூன்று மாதங்களாக காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றிய செய்திகளை நாம் நாள்தோறும் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழகம், இந்த விடயத்தில், மத்திய அரசால், கடுமையான விரோதப்போக்கை சந்தித்து வந்திருக்கிறது என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. நம் மாநில அதிமுக அரசும், இதில் மேம்போக்காக இருந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதியே, காவிரிநதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம், தெளிவான தீர்ப்பை வழங்கியது. நாம் கேட்ட நீரின் அளவை விட குறைத்து விட்டது என்பது நம் எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் கூட, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு, இது குறித்து எவ்வித மேல் முறையீடும் கூடாது என்றும் ஆறு வாரங்கள் அதற்கான காலஅவகாசம் கூட நிர்ணயித்து, தீர்ப்பு வழங்கியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையில், கடைசி நாளன்று, மத்திய அரசு, ஸ்கீம் என்பதற்கு பொருள் விளங்கவில்லையென்று கூறி மறுபடியும் தங்களுடைய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு நான்கு வார கால அவகாசம் வேண்டுமென்று கூறியது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 21 May 2018

தொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)


மீசை பாரதி நடந்தான்

siragu meesai bharadhi1

அவன்
அந்தத் தெருவில் நடந்து சென்றான்
‘ஏய்” என்று ஒரு குரல்
மீண்டும் வலுவான குரல்கள் ‘ஏய்”

அவன் காலடித்தடத்தின் சூடு நிலைகொள்ள
மிக உறுதியாக நின்றான்.
‘யாரடா” என்று திருப்பிக் கேட்டான்
வேசி மொழிகள் பல


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 18 May 2018

செம்மொழி இலக்கியங்களில் பரத்தை அழைப்பு முறைகள்


Siragu sanga ilakkiya thirumanam3
செம்மொழி இலக்கியங்கள் பன்னூறு ஆண்டுகாலத்திற்கு முன்னால் தமிழர்தம் பண்பாடுச் செறிவு மிக்க வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. தலைவன்,தலைவி ஆகிய இருவருக்குமான இல்லறப் பாங்கினையும்,தலைவனின் வீரப்பாங்கினையும் எடுத்துரைக்கும் செம்மொழி இலக்கியங்கள்,பண்பாட்டு விலகல்களையும் சுட்டிக்காட்டாமலில்லை. குறிப்பாகத் தலைவனின் ஒழுக்கம் தலைவியைத் தாண்டி மற்றொரு பெண்ணை நோக்கிச் செல்லும் நிலையில் அதாவது கற்பு கடந்து செல்லும் நிலையில் ஏற்படும் பண்பாட்டு விலகல்களையும் செம்மொழி இலக்கியங்கள் நேர்மையுடன் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில்,பரத்தை என்ற அழகு,அன்பு,ஏக்கம்  கொண்ட பெண்ணின் அவல மிகு வாழ்வினையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.
சங்க காலத் தலைவன் என்பவன் வண்டு போன்ற இயல்பினன். பல மலர்கள் தாவும் நிலையை அவன் வண்டுகளிடம் இருந்துப் பெற்றானா அல்லது வண்டு அவனிடம் இருந்துப் பெற்றதா என்பது புரியாமல் ஒரு பரத்தை தன்னை வெறுக்கும் தலைவியைச் சாடுகிறாள்.
    ~~மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
 வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
 அன்னது ஆகலும் அறியாள்,
     எம்மொடு புலக்கும்,அவன் புதல்வன் தாயே”
(ஓரம்போகியார்,ஐங்குநூறு பாடல் எண். 90)

பூக்களாய்ப் பெண்களும் வண்டினமாய் ஆண்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருந்தனர் என்பது இப்பாடலின் வழி பெறப்படும் கருத்தாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும்


siragu puranaanooru1
சங்க இலக்கியங்களாக அறியப்படும் பாட்டும் தொகையும் ஆன பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களுள், எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய இலக்கியம் புறநானூறு. இந்த நூலில் முடியுடைக் காவலரும் முத்தமிழ்ப் பாவலராக தமிழை வளர்த்த காலத்திலும்; கற்றறிந்த புலவரும் புவியாண்ட புரவலரும் தமிழைப் போற்றிய காலத்தில் நிகழ்ந்தவையாக 400 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆண்பாற் புலவர்களும், அரசர்களும் யாத்த பாடல்கள் மட்டுமன்றி, அரசமகளிரான பெருங்கோப்பெண்டும், பாரியின் மகளிரும் பாடிய  பாடல்களுண்டு. அவ்வாறே, குறமகள் பாடியதாகவும் பாடலுண்டு.  குயவர்மகள் பாடியதாகவும் பாடலுண்டு. பாடல்கள் யாவும் சங்ககாலத் தலைவர்களின் படைத்திறத்தையும் கொடைத்திறத்தையும் நமக்கு இன்று அறியத் தருகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழ்க்காணும் இரு சிறு பாடல்களைக் காணலாம்.
கொடைத்திறமும் …
“பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறநானூறு: 107)
Siragu Purananuru1
(பொருள்: “பாரி, பாரி” என்று பாரி ஒருவனே கொடையிற் சிறந்தவனாகவும்  உலகைக் காப்பவனாகவும் புலவர் பலரும் புகழ்ந்து பாடுகிறார்கள். பாரி மட்டுமல்ல மழையும் தன் கொடையால் உலகைக் காக்கிறது.)
படைத்திறமும்…
“நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.” (புறநானூறு: 186)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.