Thursday, 31 January 2019

தொகுப்பு கவிதை (அன்பு.. மனிதம்.. சமத்துவம்.., இறந்துகொண்டிருக்கும் இயற்கை!!)


அன்பு.. மனிதம்.. சமத்துவம்..

- மகேந்திரன் பெரியசாமி
sirau maanudam1
உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும் வீரத் துரும்பே!
இயற்கை நடத்தும் இலவசப் பாடம்
தயக்கம் தவிர்த்துப் பயின்றிட வாராய்!
வானும் புவியும் வலம்வரும் கதிரும்
தண்மை பரப்பும் வெண்மை நிலவும்
விண்ணில் வரபிட்டு மோதி நாம் பார்த்ததுண்டா?
மண்ணில் மனதில் மட்டும் வரப்புகள் ஏனோ?

மேற்புவி மண்ணுக்காய் மாய்ந்திடும் மானிடர்
உட்புவியைப் பாதியாய் உடைத்திட முடியுமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 30 January 2019

கலப்புத் திருமணமும் பார்ப்பனர்களும்


iragu kalappu thirumanam2
பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் துடிப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்த காலங்களில் கலப்புத் திருமணம் என்ற பேச்சைக் கேட்டாலே உயர்சாதிக் கும்பலினருக்குச் சினம் பொங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று கலப்புத் திருமணங்கள் அந்த அளவிற்கு எதிர்க்கப்படுவது இல்லை. உயர்சாதியினருக்கும் இடை நிலை சாதியினருக்கும் இடையே ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இது சாதிக் கருத்தியலுக்கு எதிரான பெரும் முன்னேற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது.
ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் கலப்பு ஏற்படும் போது, அதுவும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆணுக்கும் ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் திருமணம் என்றால் அதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றுகிறது. அது மட்டும் அல்ல, சில / பல சமயங்களில் அது ஆணவக் கொலைகளிலும் முடிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று நடக்கும் கலப்புத் திருமணங்கள் வளர்ச்சியா? வீக்கமா?. வளர்ச்சி என்றால் அதை மேற்கொண்டு தொடரவும், வீக்கம் என்றால் அதை வளர்ச்சியாக மாற்றவும் நாம் என்ன செய்ய வேண்டும்?

சாதி / வருணக் கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று இருந்து அல்ல, அது தோன்றிய காலம் தொட்டே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில், ஒரு பார்ப்பனன் நான்கு வருணத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொள்வது ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. அது போல் ஒரு சத்திரியன் பார்ப்பனர் அல்லாத மூன்று வருணப் பெண்களையும், ஒரு வைஷ்யன் பார்ப்பனர், சத்திரியர் தவிர்த்த இரண்டு வருணப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். சூத்திரனோ சூத்திரப் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 28 January 2019

உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி!


Siragu ida odhukkeedu1
இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி, சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று, இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. 1928 – ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி, 15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை, இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும் சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார். அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பெண்ணிய பாதை


Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.
சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 24 January 2019

நன்முறை


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
வன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். அங்கு மாணவர்களுடன், ஆசிரியர்களுடன் சில நாட்கள் தங்கிக் கலந்து பழக வேண்டிய வாய்ப்பு வந்தது. அப்போது அவர் மாணவர்களுக்கான உணவு மற்றவர்களால் சமைக்கப்பட்டு வருவதை அறிந்தார். நமக்கான நமது உணவை நாமே சமைத்து உண்டால் நலமாக இருக்குமே என்று அவர்களிடம் கூறினார் காந்தியடிகள். நமக்கான உணவை நாமே சமைத்து உண்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஒன்று நாமும் சமைக்கக் கற்றுக்கொள்கிறோம். நம் இயல்புக்குத் தேவையான, மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பற்ற வகையில் சமைத்துக்கொள்ள இயலும். இவை போன்ற பல நன்மைகள் நாமே சமைத்து உண்பதில் கிடைக்கின்றன.
இதனை மகாத்மா சொன்னதும் அந்த மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தமக்கான உணவைத் தாமே சமைத்து உண்ணத் தொடங்கினார்கள். அவர்களின் குணங்களில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. உணவிற்கும் எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அறியப்பட வேண்டிய உண்மையாகும்.

வன்முறையற்ற வாழ்க்கை வாழ வன்முறையற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவைத் தயாரித்து உண்ண வேண்டும். காந்தியடிகள் அக்கால ஆங்கில அரசிற்கு, அதன் கடுமையான போக்கிற்கு எதிராக பல கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக இவரை எந்நேரமும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது. தன்னைச் சிறையில் அடைத்தால் என்ன நடைபெறவேண்டும் என்பதையும் காந்தியடிகள் சிந்தித்து அதனை ஒரு கட்டுரையாக எழுதினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை

siragu marayon1
பூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் கரையோரமாக நடந்து உறையூரை அடைந்து அங்கு தங்குகிறார்கள். பிறகு வைகறையில் உறையூரை விட்டு நீங்கி தென்திசை நோக்கிப் பயணமாகிறார்கள். வழியில் மதுரையில் இருந்து திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் செல்ல விரும்பிப் பயணிக்கும் மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப்போக்கன் ஒருவனை எதிர் கொள்கிறார்கள். அவன் மாங்காட்டில் வாழும் பாண்டிய நாட்டுக் குடிமகன். அவன் மதுரையில் இருந்து வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கோவலன், ‘மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறு’ (58-59) என மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி கூறுவாயாக என்று மறையவனிடம் வினவுகிறான்.
மாங்காட்டு மாமுது மறையோன்,
“….. வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் …..” (63-67)

என வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், முல்லை நிலப்பகுதியும், குறிஞ்சி நிலப்பகுதியும் தம் இயல்பை விட்டொழித்து, பசுமை குன்றி பாலை நிலமாக மாறும் இக்காலத்தில் பயணிக்கிறீர்களே எனக் கூறுகிறான். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 23 January 2019

காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !!


siragu aanavakolai1
உலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல்!! இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.

நாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.