Thursday, 29 August 2019

மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்


siragu mayilai sivamuththu1
குழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின் சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும் ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும். சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச் சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின் கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள், சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர்  மயிலை சிவ முத்து ஆவார். இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள், இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன் இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர் மயிலை சிவ முத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 August 2019

இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை


siragu innaa naarpadhu1
சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னா நாற்பது’ என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும். இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு. அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது. இப்பாடல் தவிர்த்து இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து, அறம் வலியுறுத்தும் நோக்கம் கொண்ட மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை. இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை துன்பம் தருவன என்பவற்றை ‘இன்னாதவை’ எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை’ எனவோ அல்லது ‘தகுதியற்றவை’ எனவோ அல்லது ‘பயனற்றவை’ எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் ‘இனியவை’ எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது. இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய ‘அகம்’ ‘புறம்’ என்ற திணைகளைக் கருப்பொருளாகக் கொண்டவை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 26 August 2019

தமிழ்நாடு முதன்மை மாநிலம்


Siragu tamilnadu1
தமிழ்நாட்டை தனியாகப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி என்ன என்று நம்மால் அறிய முடியாது. ஒட்டு மொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும். தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் எஸ். நாராயணன். அவர் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனர். மத்திய அமைச்சரவையின் செயலாளராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற பின்னால், உலக நாடுகளுக்குச் சென்று பொருளாதார ஆய்வாளராகவும் ஆலோசகராவும் இருக்கிறார். அவர் 6 மாதத்திற்கு முன்னால் dravidian year என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் திராவிட இயக்க ஆட்சியில் துணை ஆட்சியராக, மாவட்ட ஆட்சியராக, அரசு செயலாளராக பணியாற்றியபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த முன்பும் அவர் பதவியில் இருந்தார், ஆட்சிக்கு வந்த பின்பும் இருந்தார்.

“முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு குறை இருக்கும், அதை அரசால் தீர்க்க முடியுமென்றால், அரசு அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள், எங்களுக்கு அறிக்கை வரும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பின்னால்தான் கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சனைகளை எங்களிடம் எடுத்துவந்து பேசத் தொடங்கினார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்ற குறைகளை விட, கட்சியின் பிரதிநிதிகள் எடுத்து வைத்ததுதான் மிக அதிகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பில் இருப்பவர்களும் வந்து எளிய மக்களின் கோரிக்கையை அன்றாடம் எங்களிடம் பேசியதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர்தான் என்று பதிவு செய்திருக்கின்றார். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனபின்புதான் தமிழ்நாட்டை அவர் புரிந்து கொள்கின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 22 August 2019

நீரியல்


siragu neeriyal5
இலக்கியங்கள் காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாற்றையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியலாம். குறிப்பாக பண்டைக்கால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே மேற்கொண்டான். இவ்வுலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகிய மனிதனும் இவற்றின் துணைகொண்டே செயல்படுகிறான். உலகமக்களின் உயிர் வாழ்விற்கு மட்டுமின்றி அனைத்துப் பயன்பாட்டிற்கும் நீர் உதவுகிறது. நீர் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. அத்தகைய நீரின் இன்றியமையாமையை விளக்குவதே இக்கட்டுரையாம்.
நீரின்றி அமையாது உலகம்

மனிதனை மகிழ்விப்பதும் வாழ்விப்பதும் இயற்கையாகும். இயற்கையின் இயக்கத்தில் தான் மனிதனின் வாழ்க்கையும் இயங்குகிறது. இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனிதவாழ்வினைப் போதித்தன. சங்ககாலப் புலவர்கள் மாந்தர்களை வருணிப்பதற்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் நிலத்தின் வகைப்பாட்டினைச் சுட்டுவதற்கும் இயற்கைக்காட்சிகளைப் பயன்படுத்தினர் என்றால் மிகையாகாது. இயற்கைக்கும் மனிதன் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தண்ணீர் தான். பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் நீருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தந்து வருகின்றனர். மக்கள் வாழ்வு நீரையே நம்பி இருந்துள்ளமையையும் அதனைப் போற்றியும் பாதுகாத்தும் வந்துள்ளமையும் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றுவதனை அறிந்துணரலாம். இலக்கண நூல்கள் உணர்த்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் கருப்பொருள்கள் பதினான்கனுள் ஒன்றாகக் கருதப்படுவது நீர்நிலையாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 21 August 2019

வணிக மேலாண்மை


siragu vanigam1
பொருள் ஈட்டும் நோக்குடன் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து தொழில் செய்யும் முறைமையே வணிகமாகும் என்பர். சிறந்த வணிகத்திற்கான மேலாண்மை நடவடிக்கைகளை திருக்குறள் வழி ஒப்பிட்டறிவதே இக்கட்டுரையாகும்.

வரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் “மேலாண்மை என்பது நிருவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள் வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று எறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மை தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில் இலக்கியங்களில் பழ மேலாண்மை கூறுகள் அமைந்து கிடைப்பதை இன்றைக்கு அறிய முடிகிறது. குறிப்பாக திருக்கயளில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிடக்கிடக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 20 August 2019

சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்

Siragu ovvoru nodiyilum
பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல மனிதன் என்று சிந்திக்கத் தொடங்னானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன.அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனா சக்தியின் விழைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு.இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 16 August 2019

போரியல்


siragu thalayaalangaanam1
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு. ஒரு இனத்தின் அழிவு. போரினால் பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளையும், குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும் இழப்பதே உச்சகட்ட கொடுமை. அதனால்தான் இன்று உலகமெங்கும் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் இவையனைத்தும் தெரிந்தும்கூட உலகின் சில மூலைகளில் இன்றும் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் கனரகப் பீரங்கிகள் இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகள், வான்வழிப் போர்முறைகள் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத கால காட்டமான சங்க காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் போர்கள் பல புரிந்து பல நாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் வெற்றிப்பெற்றதையும் பாடியிருக்கின்றனர். சில புலவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகளை பாடியிருக்கிறார்கள். இன்னும் சில ரோம மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் வாழ பாடுபட்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் நடந்த போர்களை பற்றி புலவர்கள் பாடிய சில பாடல்களைப் பற்றியும் போரை விரும்பாத சில புலவர்களை பற்றியும் விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.