நமது நாட்டில் கல்வியை வியாபாரமாக மாற்றிய மாபெரும் பெருமை நமது அரசியல் கட்சிகளையும், அதில் இருப்பவர்களை மட்டும் சேர்வதில்லை, மக்களையும் சேரும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று சமுதாயத்தில நல்ல நிலையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் இவர்கள் எந்தப் பள்ளி மற்றும் கல்லூரி சிறந்தது என்று தேடுகிறார்கள். இவர்கள் தேடலை பயன்படுத்தும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், கல்வியை வியாபாரமாக மாற்றுகிறார்கள்.
![kalvi1](https://lh3-testonly.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vMU9vPF9-pK5zug1HRJsNHZDZ5Q6iAkY5Qt42IIRx5cxtwXTfoPAMiQv2lDHIyBxzB_vn5rUsloeKP1hu516tjgql9xTKiOPOiqJ3a7J2W5OgbNv_k1autEco=s0-d)
பெற்றோர்களைக் கவர்வதற்கு தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இத்தனை சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர், இந்த ஆண்டு எங்கள் கல்விக் குழுமம் இத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த கவர்ச்சியினைப் பார்க்கும் பெற்றோர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை, நாம் பிள்ளைகளை சேர்க்க இருக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்களை அறிய Regional Office of Education என்ற அரசு அலுவலகம் ஒன்று இருப்பதை மறந்துவிடுகின்றனர். அந்த அலுவலகம் சென்று கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பெறாமல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செய்யும் விளம்பரங்களை மட்டும் பார்த்துவிட்டு பிள்ளைகளைக் கொண்டுச்சென்று படிப்பதற்குச் சேர்க்கின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment