Tuesday 7 July 2015

மதிப்பெண் வாங்கிக் குவிக்கும் இயந்திரமல்ல மாணவர்கள்

madhippen1
அது என்னவோ தெரியவில்லை, சில வருடங்களாகவே மாணவர்களுக்கு, பெற்றோராலும், ஆசிரியர்களாலும், உறவினர்களாலும், கூடப் பழகும் நண்பர்களாலும் அறிவுரை என்ற பெயரில், “நீ பத்தாவது படிக்கப் போகிறாய்?, நீ பன்னிரெண்டாவது படிக்கப்போகிறாய்?, இதுதான் உன் வாழ்வை முடிவு செய்யும் படிப்பு. ஆதலால் கண்டிப்பாக நீ பத்தாவதில் 500க்கு 501ம், பன்னிரெண்டாவதில் 1200க்கு 1201ம் எடுத்தால்தான் நல்ல நிலைமைக்கு (அதாவது எதிர்காலத்தில் நோகாமல் கோடி கோடியாய் உட்கார்ந்து சம்பாதிக்கும் வேலையைப் பெற முடியும்) வர முடியும். ஆதலால் படி படி படி” என்ற முழக்கத்தில் மாணவர்களின் மூளையே குழம்பி, அவர்களை மூலையில் கூட படுக்கவிடாமல் செய்துவிடுகின்றனர்.
முன்பெல்லாம் ஒருவர் 100க்கு 60, 70 மதிப்பெண் பெற்றாலே, ‘அடேயப்பா.. நீ பெரிய படிப்பாளிதான்!’ என மூக்குமேலே விரலை வைத்து, நாக்கு நோகப் பேசுவார்கள். அதன் பிறகு மதிப்பெண் ஏறுமுகமாக… இப்போதெல்லாம் மாணவர்கள் சர்வ சாதாரணமாக 95% மேல் வாங்குகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 85% எடுத்தால் இருந்த மதிப்பு, இப்போது அவ்வளவாக இல்லாமல் போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment