Sunday 19 July 2015

இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் உரை

vigneshwaran urai1
அன்பார்ந்த ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை வடஅமெரிக்கவாழ் சகோதர சகோதரிகளே, என் மகன் Boston பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்த நாட்டுக்கு நான் வந்தபின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து நான் உங்கள் அமெரிக்க மண்ணில் காலடிகள் பதிக்கின்றேன். இத்தனை பெருவாரியான தமிழ் உள்ளங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் பங்குபெறுவதில் மனமகிழ்வடைகின்றேன். எங்கள் எல்லோரையும் பிணிக்கும் சக்தியாக துலங்குகின்றாள் தமிழன்னை. எமக்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான குணாம்சமாக அவள் மொழி விளங்குகின்றது. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ஒருமுறை கூறினார், இமயமலை தமிழ்நாட்டில் இல்லை என்பதற்காக ஆண்டவன் கம்பனை இங்கு பிறப்பித்தார் என்று.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவன்போல், இங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்கின்றான் பாரதியார். அதே பாடலில் தொடர்ந்து கூறுகின்றார்,
ஊமையராய், செவிடர்களாய், குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்று.

தமிழ்மொழியை எங்கும் முழங்க வைக்கவேண்டும் என்பதில் பாரதியார் கண்ணாக இருந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment