Thursday 29 October 2015

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் சென்னை பெண்

aadharavatrorin1
சினேகா மோகன்தாஸ். வயது 23 தான். காட்சி தொடர்பியல் (Visual Communication) பட்டதாரி. மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறைகள் மத்தியில் சமூகச்சேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது பார்வையில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது. ‘உணவு வங்கி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.. அவருடன் ஒரு சிறிய நேர்க்காணல்:
உணவு வங்கி’ – எப்படி உதித்தது உங்கள் சிந்தனையில்?
சினேகா மோகன்தாஸ்:இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழியின்றி கூட பலர் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலையோரங்களில் இப்படி உணவின்றி சிரமப்படும் ஊனமுற்றோர், முதியவர்கள், ஆதரவற்றவர்களை எளிதாகக் காணலாம். இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த அவலத்தை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘உணவு வங்கி’.
உணவு வங்கிசெயல்பாடுகள் என்னென்ன?

aadharavatrorin3
சினேகா மோகன்தாஸ்:நண்பர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு வங்கியின் தன்னார்வலர்களாக இணைந்து உதவி புரிந்து வருகிறார்கள். உங்கள் வீடுகள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் உணவு மீதமிருந்தால் ( https://www.facebook.com/groups/1628237724087693/ ) என்ற முகநூல் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 28 October 2015

உலகையே பாடாய்படுத்தும் உடல் உறுப்பு

tholnoi fi
மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர்.
இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ. அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல்.
siddhamaruththuvam3

அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.
தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் தோல்நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக,அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.
கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி,‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில் விளக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக் கூறவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 October 2015

ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி

autism1
இன்றைய நாட்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “செசாமீ ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் பாத்திரம் ஜூலியா” (Sesame Street’s Julia character with autism) வரை ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருந்தாலும், முதன் முதலில், கால்நூற்றாண்டிற்கு முன்னர், “ஆட்டிசம்” (Autism, மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு) என்பதைப் பற்றி பலர் அறிந்தது 1988 ஆம் ஆண்டு வெளியான “ரெயின் மேன்” (Rain Man – 1988) என்ற திரைப்படத்தின் மூலம்தான். அதில் நாயகன் ரெயின் மேன் தனக்கு தரும் நச்சரிப்பைத் தாளமுடியாமல், அவரது தம்பி அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி கேட்பார். தம்பியின் முறையீடுகளைப் பற்றிக் கேட்கும் மருத்துவரிடம் ரெயின் மேனின் தம்பி, தனது அண்ணன் எப்பொழுதும் எண்கள், தகவல்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தன்னை வெறுப்பேற்றுகிறது என்று குற்றம் சாட்டுவார்.
autism3
நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவர் சோதனையைத் துவக்குவார். ஒரு கால்குலேட்டர் கொண்டு 312 யும் 123 யும் பெருக்கினால் என்ன விடை என்று கேட்க, சற்றும் தாமதியாமல் 38,376 என்பார் நாயகன் ரெயின் மேன். அடுத்து, 4343 x 1234 எவ்வளவு என்றாலும் உடனே 5,359,262 என்று பதில் வரும். தொடர்ந்து ஒரு எண்ணைக் கொடுத்து அதன் வர்க்க மூலம் என்ன? என்றாலும் நொடிப்பொழுதில் சரியான விடை கிடைக்கும். ஆனால், அடுத்து ஒரு டாலரில் ஐம்பது சென்ட் செலவழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்றால் தவறான விடை வரும், பிறகு ஒரு மிட்டாயின் விலை நூறு டாலர் என்பார், ஒரு காரின் விலை 1,200 டாலர் என்பார் (https://www.youtube.com/watch?v=pKtPhkx4jV0&feature=youtu.be&t=1h12m45s).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18737

Monday 26 October 2015

சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல் – இறுதிப்பகுதி

mazhai neer segarippu1
தமிழ்நாட்டில் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு என்னவென்றால் ஏரிகள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களிலும் இந்த மாதிரியான ஏரிகள் இருந்திருக்கிறது. தமிழில் ஏரி என்று சொல்கிறோம், தெலுங்கில் செருவு என்று சொல்வார்கள். கர்நாடகாவில் கேரே என்று சொல்வார்கள். எல்லாமே ஒன்றுதான், பெயர்தான் வித்தியாசம். இது விவசாயத்திற்காக மழைநீரை சேமிக்கிற ஒரு கட்டமைப்பு. இந்த தண்ணீரை குடிக்கமாட்டார்கள், இதை விவசாயத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.
மழைக்காலத்தில் அந்த ஏரியில் தண்ணீரை சேமித்துவிடுவார்கள். மதகு என்று ஒன்று இருக்கும், அந்த மதகை காலையில் திறப்பார்கள், திறந்துவிட்டார்கள் என்றால் வயலுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்றுவிடும், மாலைவேளையில் மூடிவிடுவார்கள். அதேமாதிரி கலங்கள் என்று ஒன்று இருக்கும், கலங்கள் என்னவென்றால் ஏரி நிரம்பிவிட்டது என்றால் உபரிநீர் அந்த கலங்கள் வழியாகச்சென்று பக்கத்து கிராமத்தினுடைய ஏரியை நிரப்பும். ஏரிகளை சங்கிலி மாதிரி இணைத்திருந்தார்கள். மிகச்சிறப்பான கட்டமைப்பு அது. எனவே வீணாவது குறைவாகத்தான் இருக்கும். ஒன்றில் சேமிக்கவில்லை என்றால் அடுத்ததில் சேமிக்கப்படும். அடுத்தது, அடுத்தது என்று சென்றுகொண்டே இருக்கும்.
mazhai neer segarippu12
இந்த ஏரியில் இரண்டு விதமான ஏரிகள் சொல்கிறார்கள். ஒன்று நதியில் ஓடுகிற நீரை திருப்பி ஏரிகளில் சேமிப்பார்கள். அதற்கு உதாரணம் வீராணம். காவிரியில் ஓடுகிற தண்ணீரை திருப்பிவிட்டு வீராணம் ஏரியில் சேமிப்பார்கள். நதிகளே இல்லாத இடத்திலேயும் ஏரிகள் இருந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பாலாறைத் தவிர அதிகமாக ஆறுகள் கிடையாது. அந்த மாதிரி இடங்களிலேயும் பெய்கிற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு உதாரணம் செம்பரம்பாக்கம் ஏரி. தமிழ்நாட்டில் மொத்தம் 39000 ஏரிகள் இருக்கிறது. அதில் பெரிய ஏரி செம்பரம்பாக்கம்தான். அடுத்தது மதுராந்தகம், உத்திரமேரூரில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது, இப்படி பல ஏரிகள் இருக்கிறது. இவையனைத்துமே விவசாயத்திற்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

குடிநீருக்கு ஊரணிகள் என்று இருந்தது அல்லது குளங்கள் என்று இருந்தது. ஊரணி இன்றும் இராமநாதபுரத்தில் இருக்கிறது. பேராவூரணி என்ற ஊரே இருக்கிறது, அந்த ஊரணியை வைத்துத்தான் அதற்கு அந்த பெயரே. அதில் படித்துறை இருக்கும், எனவே படியில் இறங்கிச் சென்று குடத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று உபயோகப்படுத்துவார்கள். எனவே குடிப்பதற்கு ஊரணி, விவசாயத்திற்கு ஏரிகள். கிராமப்புறங்களில் மழைநீர் சேமிப்பை இவ்வாறு சிறப்பாக செய்திருந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 25 October 2015

தலையங்கம்

thalayangam2
இந்தியாவில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் தீண்டாமைக் கொடுமை நடந்துவருகிறது. ஆதிக்க சாதியினர் ஆளும் வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு இக்கொடுமைகளை செய்துவருகின்றனர். அண்மையில் அரியானா மாநிலத்தில் இரு தலித் குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துகளின் மீதான தாக்குதல் தினந்தோறும் நடந்தேறிவருகிறது. பொது மக்களும், ஊடகங்களும் இந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் தட்டி கேட்கவேண்டிய இவர்களே இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அரசு மற்றும் ஆதிக்க சாதியினருக்கு இத்துணிவைக் கொடுத்துள்ளது.  இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருந்து வருவதும், தலித்திய மக்களின் மீது நடக்கும் அடக்குமுறைகளையும் பார்க்கும் போது, இந்திய நாடு எதிலிருந்து விடுதலை அடைந்துள்ளது என்கிற கேள்வி மனிதநேயவாதிகளின் மனதில் உருவாவது நியாயம்தான். பெரியார் கூறியபடி ஆகஸ்டு 15, 1947 -ம் நாளில் இந்தியாவிற்கு கிடைத்த விடுதலை வெறும் மண்ணிற்கு மட்டும்தான், மனிதர்களுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 22 October 2015

சமணர்கள்

samanargal2
ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதியில்தான் வடநாட்டுக் கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் புகுந்திருக்க இயலும். பொதுவாகச் சங்க இலக்கியத்தின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதலாக கி.பி. முதல் நூற்றாண்டு வரை கணிக்கப்படுகிறது. சங்க இலக்கியம் இருவேறு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. குறுநில மன்னர்கள், பழங்குடி இனத்தவர்கள், நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் ஒருபுறம். மூவேந்தர்கள், நகர்ப்புற வாழ்க்கை, மருதநில வாழ்க்கை, கிழார்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் மறுபுறம். சுருங்கச் சொன்னால், மூவேந்தர்களுக்கு முந்திய வாழ்க்கை, மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கை என்ற இரு பகுதிகளைச் சங்க இலக்கியத்தில் (அகநூல்கள் உட்பட) தெளிவாகக் காண இயலும்.
மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியப் பகுதிகளில் வடமொழிக் கருத்துகள் (யாகம் போன்றவை பற்றிய செய்திகள்) விரவியுள்ளன. வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. வடமொழிக் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட சமயத்தில் அல்லது அதற்குப் பிறகு சங்க இலக்கியத்தின் இந்தப் பகுதிகள் எழுந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. வடநாட்டிலிருந்து பிராமணர்களும் பிறரும் தென்னாடு நோக்கிவந்து தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து விட்ட காலம் ஏறத்தாழ கி.மு. நான்காம்-மூன்றாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம். குறிப்பாக, ஜைன, பௌத்த மதங்களின் சிந்தனைகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால், ஏறத்தாழ மகாவீரர், புத்தர் போன்றோரின் காலத்தை ஒட்டியே இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க இயலும். ஒரு மதம் தோன்றியவுடன் அதைப் பரப்பவேண்டும் என்ற வேகம் காணப்படுவது இயற்கை ஆதலின், இப்புதிய மதங்களின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களும், தென்னாடு நோக்கி அதுவரை வராத வேதப்பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழகத்துக்கு வந்துசேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் சமணக் கவிஞர்களும் பௌத்தக் கவிஞர்களும் உள்ளனர். தமிழின் ஆதிநுலான தொல்காப்பியமும் தமிழின் தலைசிறந்த இலக்கியமான திருக்குறளும் ஜைனர்களால் (சமணர்களால்) இயற்றப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 21 October 2015

விவசாயிகள் அன்றும் – இன்றும்

vincent nerkaana10
உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும், நேர்மையின் இலக்கணமான சகாயம் என்பவர் ஒரு மேடையில் விவசாயிகள் பற்றி இவ்வாறு கூறினார், “நான் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கோவணம் கட்டியிருந்த விவசாயி ஒருவரைப் பார்த்து நான் அவரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவர் அருகில் சென்றேன். அவரோ ‘அய்யா, நான் கோவணம் கட்டி உங்க கூட நின்றால் நன்றாகவா இருக்கும்’ என்றார். அவரை அழைத்து நான் உங்களோடு புகைப்படம் எடுப்பதை மிக கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன் எனக் கூறி அவரோடு எடுத்த புகைப்படத்தை, தனது அலுவலக முகப்பில் பெரிய அளவில் மாட்டினார். காரணம் கேட்ட சக அலுவலர்களைக் கண்டு, இந்நாட்டிற்கு சோறுபோடும் விவசாயியை கௌரவப்படுத்தாமல், நான் வேறு எவர்களை கௌரவப்படுத்த?” என்றார்.
vivasaayi7
எந்தெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும் என்ற வித்தை நம் விவசாயிகளுக்குத் தெரியும்.
கரிசல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, திணை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்கு விளையும்.
வண்டல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, நெல், மிளகாய், கோதுமை, கேழ்வரகு, வாழை, மஞ்சள், பழ மரங்கள் விளையும்.
செம்மண்: இதில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, நிலக்கடலை, பழ மரங்களும் நன்கு விளையும்.
சாம்பல் நிற மண்: இதில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை விளையும்.
கருமணல் மண்: கரும்பு, சாமை, தட்டைப்பயிறு, முருங்கை என சில பயிர்கள் மட்டுமே விளையக்கூடியது.
கந்தக மண்: இம்மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, திணை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.
இவ்வாறு அறிவுமிக்க நம்முன்னோர் விவசாயிகளின் வழி வந்த, இன்றைய விவசாயிகள் படும்பாடு பெரும்பாடாக உள்ளது. மாதம் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைந்த தமிழ்மண்கள் எல்லாம், இப்போது எந்த மாரியும் பெய்யாமல், வானம் பார்த்த பூமியாக வாடிக்கிடக்கிறது விவசாயிகளின் நிலங்களும், வாழ்க்கையும்.
meeththen1
‘கடன் கொடுக்கிறோம், விவசாயம் செய்’ – எனக் கூறிவிட்டு, இன்று வெளிநாட்டுக்காரன் தந்த விதையை போடச்சொல்லி, விளைச்சலே இல்லாமல் விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். விவசாயம் செய்து பிழைக்கத்தான் வழியில்லை என்று, பணம் படைத்தவர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு, பட்டணத்து வீதிகளில் இரவுக் காவலர்களாகவும், கூலி வேலைக்காரர்களாகவும் படையெடுத்து வந்துள்ளனர் விவசாயிகள்.
கிராமத்தில் நடக்கின்ற பாதையில் மாடு சாணி போட்டுவிட்டுச் சென்றால், அதை அப்படியே அள்ளி பக்கத்து வயல்களில் வீசிவிட்டுச் செல்வார்கள் நம் விவசாயிகள். அந்த சாணியும் அந்த வயலுக்கு உரமாகும். எதைச் செய்தாலும் அடுத்தவனுக்கு நல்லது செய்ய வேண்டும், சாணி கூட உரமாகிப் போக வேண்டும் என்று நினைக்கிற படிக்காத விவசாயிகள் கிராமத்தில் இருந்தனர். ஆனால் இன்று படித்தவர்கள் விதைக்குக் கூட உரிமை கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டுக்காரனிடம் காசை வாங்கிக் கொண்டு, மண்ணை மலடாக்கி விவசாயத்தை நாசமாக்கும் விதைகளை விவசாயிகள் தலையில் கட்டுகின்றனர்.

நம் அரசு, நம் தமிழக விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறோம் என்ற பெயரில் இங்கிருக்கும் விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறது என்பதை (செ.நல்லசாமி – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) ஒரு விவசாயி கூறுவதை நீங்களே படியுங்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 19 October 2015

தொக்கணம் – நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை

மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மருத்துவமனை. மருத்துவர், அவர் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, அதைக்கொண்டு வாங்கப்படும் மருந்து மாத்திரைகள், இதைத்தாண்டினால் அறுவை சிகிச்சை, அவ்வளவுதான்.
thokkanam3
ஆனால் சில நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்கு புற சிகிச்சை முறைகளும் அவசியமாகின்றன. குறிப்பாக நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், இரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிக்கு தொக்கணம் எனப்படும் புறசிகிச்சை மிகவும் அவசியம்.
பெரும்பாலான நோய்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் ‘மருந்து’ உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எனவே மருத்துவம் என்றாலே மருந்து என்கிற நம்முடைய சிந்தனைக்கு இயல்பானதே.
ஆனால் ஒரு முழுமையான மருத்துவம் அல்லது வாழ்வியல் மருத்துவத்தில் மருந்தைத்தாண்டி அநேக விடயங்களும் உள்ளன. அவற்றுள் புற மருத்துவ சிகிச்சைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒரு சுலபமான புரிதலுக்காக சொல்லவேண்டுமானால், இப்படிப்பட்ட புற மருத்துவ சிகிச்சைகளுக்கு ‘தெரபி’ (Theraphy) என்று பெயர். ‘பிசியோதெரபி’ (இயல்முறை மருத்துவம்) என்றும் உடனே உங்களுக்குப் புரியும்.
இப்படிப்பட்ட புற சிகிச்சை முறைகள் சித்தமருத்துவத்தில் பல உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 32 வகையான புற சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் ‘மசாஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற புறசிகிச்சை முறை, இதற்கு சித்த மருத்துவத்தில் ‘தொக்கணம்’ என்று பெயர்.

அந்த 32 வகையான புற சிகிச்சை முறைகளின் பெயர்களை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 18 October 2015

சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல்

mazhai neer segarippu1
கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய பெயர் சேகர் ராகவன். நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தேன், இங்குதான் படித்தேன். அதன் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகாலமாக சென்னையில் பெசன்ட் நகர் என்கிற பகுதியில் வாழ்ந்து வருகிறேன். நான் இயற்பியல்துறையில் Phd பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக ஆறு வருடம் பணியாற்றினேன். பின் என்னை நிரந்தரமாக்காததால் அந்தப் பணியிலிருந்து வெளியில் வந்தேன்.
கேள்வி: தாங்கள் மழைநீர் சேமிப்பில் ஈடுபடக் காரணம்?
பதில்: எனக்கு சென்னை மீது ஒரு மோகம், வாழ்நாள் முழுவதும் சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னையை விட்டுப் போவதில் எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. வெளியூர்களில் எனக்கு நிறைய இடத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதை நான் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னை மக்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்பதால் இந்த மழைநீர் சேகரிப்பில் என்னுடைய ஈடுபாடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருபது வருடமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். ஆனால் என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இந்த மழைநீர் சேகரிப்பைப் பற்றி தெரிந்துகொண்டது அனைத்தும் நான் நேராகப் பார்த்தது, அனுபவப் பூர்வமாகக் கற்றுக்கொண்டதுதான்.

எப்படி ஒரு வண்டி பழுது பார்ப்பவர் பல வண்டிகளை சரிசெய்து கற்றுக்கொண்டாரோ, தச்சர் எந்த கல்லூரிக்கும் சென்று படித்திருக்க மாட்டார். அந்த மாதிரி அனுபவத்திலேயே கற்றுக்கொண்டதுதான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இதைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன், நிறையபேருக்கு ஆலோசனை செய்து வருகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 15 October 2015

சோமேசர் முதுமொழி வெண்பா

mozhipeyarppugal3
திருக்குறளின் சிறப்பைப் பழங்காலத்தில் பலவிதமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் முக்கியமான ஒரு முறை, திருக்குறளைக் கையாண்டு நீதிநூல் எழுதுவதாகும். ஒரு பெரிய கவிஞரோ, மதத்தலைவரோ திருக்குறளை வைத்து நூல் எழுதும் போது அவரைப் பின்பற்றுவோர்க்குத் திருக்குறளைத் தாமும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இரண்டாவது, திருக்குறளை நேரடியாகப் பயிலாமல், அக்கவிஞருடைய நூலையே பயிலும்போதும், அவர் தேர்ந்தெடுத்துக் கையாண்ட குறட்பாக்களை அவற்றிற்குரிய உதாரணக் கதைகளோடு நன்கு புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இதில் ஒரு குறையும் உண்டு- எழுதியவரின் சார்பும் அதில் கலந்துவிடுகிறது.
இம்மாதிரிப் பல வெண்பா நூல்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டுள்ளன. குமரேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, சினேந்திர வெண்பா, தினகர வெண்பா, முதுமொழி மேல்வைப்பு போன்ற நூல்கள் இப்படிப்பட்டவை. சில சதக நூல்களிலும் குறள் அப்படியே எடுத்தாளப் பெற்றுள்ளது. இவற்றில் சோமேசர் முதுமொழி வெண்பா பற்றிச் சிறிது காணலாம்.

somesar4
சோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவரால் இயற்றப்பெற்றது. காப்புச் செய்யுள் நீங்கலாக திருக்குறளின் அதிகாரத்துக்கு ஒரு வெண்பா வீதம் 133 வெண்பாக்கள் உள்ளன. அதிகாரத்துக்கு ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளாக அமைக்கிறார். அக்குறட்பாவின் பொருளுக்கேற்ற ஒரு கதையினை முன்னிரண்டு அடியில் அமைக்கிறார். ஒவ்வொரு பாவிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் சோமேசா என்ற விளியைக் கொண்டுள்ளது. சோமேசர் என்பது குளத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர். சோமேசர் என்பதற்கு நிலவின் (சந்திரனின்) தலைவன் என்று அர்த்தம். முதுமொழி என்ற சொல் திருக்குறளைக் குறிக்கிறது. திருக்குறளுக்குரிய கதைகளைப் பெரியபுராணம், இராமாயணம், கந்த புராணம், பாரதம், திருவிளையாடற்புராணம் போன்ற பல புராண நூல்களிலிருந்து எடுத்துக் கையாளுகிறார். மேலும் இறையனார் அகப்பொருள் கதை, விசுவாமித்திரன் கதை, போஜராஜன் கதை, கரிகாற்சோழன் இமயத்தில் புலிபொறித்த செய்தி போன்றவையும் எடுத்தாளப்பட்டுள்ளன. எவ்விதம் கதையும் பொருளும் பொருந்துகின்றன என்பதைச் சில வெண்பாக்களால் இங்குக் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 October 2015

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

ulagaththil sirandha3
“அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17849), “இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” (http://siragu.com/?p=17950) எனச் சிறகில் முன்னர் வெளிவந்த கட்டுரைகளின் வரிசையில் இம்முறை “உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?” என்பதைக் காணும் கட்டுரை இது.
செப்டம்பர் 30, 2015 அன்று “தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்” (The Times Higher Education – THE, magazine) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 70 நாடுகளில் இருந்து 800 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம் போல அமெரிக்க பல்கலைக்கழகங்களே பட்டியலை நிறைக்கின்றன. அடுத்து இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன. இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த தரவரிசைப் படுத்தும் பட்டியலை வெளியிட்டது ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை என்பதை. பட்டியலில் காணப்படும் 800 பல்கலைக்கழகங்களில் 78 இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள்.

ulagaththil sirandha2
மேலும், முதல் ஐந்து இடங்களுக்குள் இரு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. கீழே முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது: 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 13 October 2015

ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா?

Dr.Jerome -FI
இதற்கு நேரடியாக ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறேன், கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான்.
இந்தக் கட்டுரை இத்துடன் முடிந்தது.
மேலும் தகவலுக்கு மேற்கொண்டு படியுங்கள்.
ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா என்பதைப் பற்றி விளக்குவதற்காக ஒரு கட்டுரை எழுதுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்றாலும், அநேகம் பேர் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருப்பதால் இதை எழுதுகிறேன்.
இரண்டும் ஒன்றுதான் என்றால்,
ஏன் வேறுவேறு பெயர்கள்?
ஏன் வேறுவேறு படிப்புகள்?
ஏன் வேறுவேறு கல்லூரிகள்? (சித்த மருத்துவ படிப்பு- B.S.M.S(Bachelor of Siddha Medicine and Surgery
ஆயுர்வேத படிப்பு – B.A.M.S(Bachelor of Ayurvedha Medicine and Surgery)
இவை நியாயமான கேள்விகள்தான்.
ஆயுர்வேதத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே மொழிதான்.

சித்த மருத்துவத்தின் மூல நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. ஆயுர்வேதத்தின் மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 12 October 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் – இறுதிப்பகுதி

puli thevar11
புலித்தேவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் குகையில் இருந்துகொண்டு படைபலத்தினை பெருக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் தனது கோட்டையை வெள்ளையர்களிடமிருந்து கைப்பற்றிட தீவிரமாக செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார். புலித்தேவர் தனது ஒற்றர்களின் மூலம் வெள்ளையர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார். குகையில் இருந்து கொண்டே நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் அறிந்து கொண்டார்.
வெள்ளையர்கள் தென்தமிழகத்தில் புலித்தேவரை பிடித்துவிட்டால் போதும், மற்ற பாளையங்கள் அனைத்தையும் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும், நமக்கு இருக்கும் ஒரே முக்கியமான எதிரி புலித்தேவர் மட்டும்தான் என்று அவரை கைது செய்திட மிகத் தீவிரமாக முயற்சி செய்தனர்.புலித்தேவரின் கோட்டையைக் கைப்பற்றியதும், அவரது குடும்பம் எங்குள்ளது என்பதை அறியாமல் தேடிக் கொண்டிருந்தனர் வெள்ளையர்கள். பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து கொண்டதும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குடிசையில் இருக்கும்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் குடிசைக்கு தீ வைத்து விட்டனர்.

புலித்தேவரின் படைகளில் இருந்த ஒரு தளபதி, புலித்தேவரின் குடும்பத்தை ரகசியமாக பாதுகாத்துக் கொண்டிருந்தார். தீயில் குடிசை முழுவதும் எரிந்துவிட்டது. இந்தத் தீயில் புலித்தேவரின் மனைவி படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். அவரது குழந்தைகளை படைத்தளபதி தீயிலிருந்து காப்பாற்றினார். இதில் மூத்த மகனை, பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா, தன்னுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழைத்துச் சென்று வளர்த்தாகக் கூறப்படுகிறது. வெள்ளையர்கள் புலித்தேவரைக் கண்டு மட்டும் அச்சம் அடையவில்லை, அவரது பரம்பரையில் ஒருவரும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அந்த வீரத்தின் இரத்தம் மீண்டும் தங்களைத் தாக்கக் கூடும். எனவே புலித்தேவர் வாரிசு என்று எவரும் இருக்கக் கூடாது, அவரது பரம்பரை முழுவதையும் அழித்தால்தான் தென்னகத்தில் தங்கமுடியும், நிம்மதியாக வரிவசூல் செய்யமுடியும் என்று நினைத்தனர். அவரது குடும்பத்தை தீக்கு இரையாக்கிவிட்டு புலித்தேவரை மிகத் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் புலித்தேவர் எங்கு உள்ளார் என்று வெள்ளையர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 11 October 2015

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்- இறுதிப்பகுதி

Dr.S.Vincent
கேள்வி: காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
vincent nerkaanal1
பதில்: நான் முன்பு கூறியதுபோல் காட்டுயிர்கள் ஒரு குறியீடு. விலங்குகள் ஒவ்வொரு இடத்திற்கும் அதாவது தரையில் வாழுகிற விலங்குகள், நிலத்தில் வாழுகிற விலங்குகள், ஏன் ஆகாயத்தில்கூட பறந்து திரிகிற விலங்குகள் எல்லாம் குறியீடுகளாக இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் என்னவென்றால் வல்லூறு(vulture). இவை ஒரு உன்னதமான பணியை செய்கிறது. சில நேரங்களில் மக்கள் மத்தியில் இதைப்பற்றியான ஒரு தவறுதலான புரிதல் இருக்கிறது. அந்த வல்லூறுகளின் புனிதமான தன்மை என்னவென்றால், நிலத்திலோ அல்லது வனங்களிலோ இறந்து கிடக்கிற பொருட்களை விரைவாக சுத்திகரிக்கிற தன்மை இருக்கிறது. ஒரு காலத்தில், இறந்து கிடக்கிற ஒரு விலங்கை, நாம் சென்று வருவதற்குள் அதை இல்லாமல் செய்கிற ஒரு பெரிய திறன் அதாவது சுத்திகரிக்கிற திறன் வல்லூற்களுக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு அதனுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் இன்றைக்கு இறந்து கிடக்கிற விலங்குகளுடைய, மனிதர்களுடைய துர்நாற்றம் தெருக்களில் வருவதால், பல நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது.

இன்று சார்ஸ் (sars) நோய் என்று சொல்கிறோம், இந்த சார்ஸை அழிக்கமுடியாததனால் தொற்றுநோயை உருவாகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வல்லூறு(vulture) அழிந்துவிட்டதற்குக் காரணம், நம்முடைய உணவுகளில் பூச்சிகொல்லி மருந்து கலந்துவிட்டதுதான். ஏனென்றால் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து தாவரங்களிலிருந்து, உணவாக விலங்குகளுக்கும் மனிதனுக்கும் செல்லுகிறபொழுது, அதை சாப்பிடுகிற வல்லூறுகள் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறது. அந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் நஞ்சாக மாறியிருக்கிறது. இந்த மாதிரி இறந்து கிடக்கிற விலங்குகளை இயற்கையாகவே சாப்பிடுகிற, அந்த வல்லூறுகள் இன்றைக்கு மறைந்துவிட்டதனால், பெரிய தொற்று நோய்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம், இது ஒன்றே உதாரணம். அதனால்தான் இன்றும் காகங்களை இயற்கை தோட்டிகள் என்று சொல்கிறோம். ஆனால் அதற்கும் இந்த மாதிரி நிலைமை வந்துவிடுமோ என்கிற பயம் இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு உதாரணம், இதை வைத்து பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்த ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 October 2015

இரண்டாம் உலகம்.., இந்தியாவிற்கு ஒரு வேண்டுகோள் (கவிதைகள்)

இரண்டாம் உலகம்..


irandaam ulagam1

கழனி செழிக்கக் கண்டேன்
கட்டிட மரங்கள் உயர்வால்!
ஆறு நிறையக் கண்டேன்
அள்ளிய மண் சுவடால்!
மேகம் நிறையக் கண்டேன்
நச்சுப் புகை கலப்பால்!
புவி புதையக் கண்டேன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18579

Wednesday 7 October 2015

முதல் சுதந்திரப்போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-9

puli thevar4
கோட்டைச் சுவரை காத்து நின்ற மறவர் படை வீரர்கள் தங்கள் உயிரை நினைத்து அஞ்சாமல் போர் புரிந்தனர். வெள்ளையனின் பீரங்கி குண்டுகள் கோட்டைச் சுவரை துளைக்கும் போது ஏற்படும் ஓட்டையை, உடனுக்கு உடன் செப்பணிட்டு சுவரை சரி செய்தனர். சிலர் அச்சமயம் உடல் சிதறி இறந்தனர். சிலர் சுவரின் ஓட்டையை அடைக்க தங்கள் உடலைக் கொண்டு நின்றனர், அவர் இறந்ததும் மற்றொருவர் நிற்பார் இதுபோன்று கோட்டையைக் காத்து நின்றனர். இவர்களின் வீரத்தினைக் கண்டு வெள்ளையர்கள் நிலைகுலைந்தனர். பின்னர் புலித்தேவரை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அவரிடம் நட்புடன் இருக்கும் மற்ற பாளையங்களை வெற்றி பெற்று, பின்னர் இறுதியில் புலித்தேவரைத் தாக்க வெள்ளையர்கள் திட்டம் தீட்டினர்.
அதன்படி 1766ல் கொள்ளங்கொண்டான் பாளையத்தினைத் தாக்கி நீண்ட போருக்குப் பின் கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் சேத்தூர் பாளையத்தினைத் தாக்கினார்கள், இந்தப் போரிலும் வெள்ளையர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் 1767ம் ஆண்டில் நடைபெற்ற போர் புலித்தேவரின் இறுதிப்போர் எனக்கூறலாம். இந்த இறுதிப்போரில் வெள்ளையர்களின் படைக்குத் தளபதியாக இருந்தவன் டொனல்டு காம்பெல். இவன் பெரும் படையுடன் வந்து புலித்தேவர் கோட்டையைத் தாக்கினான். இந்த இறுதிப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. வெள்ளையர்கள் சக்தி வாய்ந்த பீரங்கிக் குண்டுகளை வீசியும், கோட்டைச் சுவரை ஒன்றும் செய்யமுடியாமல் திணறினர்.
pulithevar1
மறவர்கள், கோட்டைச் சுவரின் கொத்தளங்களில் இருந்து கொண்டு கோட்டையைக் காத்து நின்றார்கள். இந்தப் போரில் புலித்தேவரின் படைவீரர்கள் கோட்டைச் சுவரில் காத்து நின்றதை டொனல்டு காம்பெல் பிரிட்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு. “இந்தக் கோட்டைச் சுவர் வெறும் களிமண்ணாலும், வைக்கோலாலும் சேர்த்து கட்டப்பட்ட சுவர். ஆனால் இந்த சுவரில் நமது சக்தி வாய்ந்த பீரங்கி குண்டுகளினால் கூட சிறு விரிசலோ, அதிர்வுகளோ உண்டு பண்ண முடியவில்லை. மிக வலிமை வாய்ந்ததாக இந்தக் கோட்டைச் சுவர் உள்ளது. நாம் பல நவீன ஆயுதங்கள் கொண்டு போர் செய்கிறோம். இந்த தமிழ் மறவர்கள் ஈட்டியை மட்டும் வைத்துக்கொண்டு போர் செய்கின்றார்கள். அதுவும் சுமார் 18 அடி நீளம் உள்ள இந்த ஈட்டியை இவர்கள் உபயோகிக்கும் லாவகம். இதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. இவர்களது வீரம் உலகில் உள்ள எந்த போர்வீரர்களிடம் இருக்காது.


இவர்கள் கோட்டைச் சுவரில் சிறு வழி மட்டும் தான் உள்ளது. அந்த வழியாக கதவை உடைத்துத்தான் உள்ளே செல்ல வேண்டும். அவ்வாறு நாம் உள்ளே சென்றால் நமக்கு பல உயிர்பலி ஏற்படும். இந்தத் தமிழ் மறவர்கள் உயிரைப் பற்றி சிறிதும் அச்சம் அடையவில்லை. இவர்கள் கோட்டைச் சுவரில் துளை உண்டானது, உடனே அந்தத் துளை சரிசெய்யப்படுகிறது. வேறு இடத்தில் அது போன்ற துளையில் சிலர் தங்கள் உடலைக் கொண்டு அடைத்து நிற்கின்றனர். குண்டு வந்து வீழ்ந்ததும் உடல் சிதறுகிறது, பின்னர் மற்றொருவர் வந்து நிற்கிறார். இறந்த உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தவும் இல்லை. மனித உடல் இரத்தமும் சதையும் சிதறுவதைக் கண்டு அச்சம் கொள்ளவும் இல்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும் கவலை சிறிதும் இல்லை, இறந்த உடல்கள் மீது குண்டு வீழ்ந்து அந்த உடல் சிதறினாலும் அவர்கள் கவலை அடையவில்லை. இது போன்று கோட்டைச் சுவரை, உலகில் வேறு எந்த படையினரும் காத்து நின்றிருக்க மாட்டார்கள்”.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 6 October 2015

தற்காலக் கல்வி முறை – பகுதி 6

அரசின் கல்விக் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இதை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மூன்று தரப்பினருக்கு உள்ளது. முதலில் ஆசிரியர். அடுத்து பெற்றோர். மூன்றாவது மாணவர்.
tharkaala kalvi5
கல்வி கற்றதன் பயன் அதனை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதே. எனவேதான் அன்ன சத்திரம் வைத்தலை விட, ஆலயம் கட்டுவதை விட மிகப் புண்ணியச் செயல் கல்லாத ஒருவனை கற்றவனாக்குவதே என்கிறார் பாரதியார். எழுத்தறிவித்தவனை இறைவன் என்கிறார்கள். எழுத்து ஒருவனை முன்னேற்ற உதவும் கருவி. இறைவனுக்கு முன் அனைவரும் சமம். சாதி, மதம் என்ற பாகுபாடு இறைவனுக்குக் கிடையாது. ஆசிரியரும் இதைக் கடந்தவராகத் திகழவேண்டும். மாணவர்களுக்கும் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் சிக்காமல் வாழ கற்றுத்தரல் வேண்டும். கல்வி கற்கும் இடத்தில் மனித உறவுகள் மலர்ந்து வளர்ந்து வலுவடைய வேண்டும். ஆசிரியர்கள் சக ஆசிரியர்களோடு இணக்கமான உறவுகளை வளர்க்கும் சூழலிலிருந்தால் மாணவர்களும் சமூகத்தில் அதைப் பேண கற்றுக் கொள்வர்.

ஆசிரியர்கள் நல்ல இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள பள்ளி சூழலோ, கல்லூரிச் சூழலோ சரியாக அமைய வேண்டும். ஆசிரியர் பாடம் சொல்லித் தருவது மட்டுமின்றி பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கே பாடாய்பட வேண்டிய சூழ்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக புள்ளிவிவரங்களை கேட்கும் பொழுது அதில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மீண்டும் மீண்டும் பல வகையான புள்ளி விவரங்களைக் கேட்கும் பொழுது, மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தைப் புள்ளி விவரங்கள் சேகரித்து உரிய வடிவத்தில் தருவதில் செலவிடுகின்றனர்.மேலும் இது போன்ற வேலைகளில்  நேரத்தைச் செலவிடுவதால் பாடம் நடத்துவதற்குரிய ஈடுபாட்டை இழக்கிறார்கள். சோர்வடைந்து விடுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 5 October 2015

இந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்யமுடியாது

Dr.Jerome -FI
Tele medicine என்ற ஒன்று இப்போது காலத்தின் தேவையாகி வருகிறது. அதாவது காணொளி மருத்துவம். மருத்துவர் ஒரு இடத்தில் இருப்பார், நோயாளி வேறோர் இடத்தில் இருப்பார். காணொளி மூலமாக நோயாளியைப் பார்த்து அவர் கூறும் குறிகுணங்களைக் கேட்டு, அவரது ஆய்வக முடிவுகளைக் கேட்டு மருத்துவம் செய்வது.
இப்படி சித்த மருத்துவத்தை செய்யமுடியுமா? என யோசித்துப் பார்க்கிறேன்.
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறையை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் “நாடி”.
இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
sidda maruththuvam 1
“நாடி” பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை.

“நாடி” என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 4 October 2015

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்

Dr.S.Vincent
கேள்வி: உங்களைப் பற்றியான அறிமுகம்?
பதில்: தேனி மாவட்டத்தில் கம்பம் புதுப்பட்டிதான் நான் பிறந்த இடம். புதுப்பட்டிக்கு அருகாமையில் உள்ள ராயப்பன்பட்டியில்தான் படித்தேன். இந்த இரண்டு சூழலுமே ஒரு இயற்கையான சூழல் எப்பொழுதுமே. அப்படி ஒரு இடத்தில் பிறந்தேன். படித்தது ராயப்பன்பட்டி செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி(St. Aloysius higher secondary school). பின் மதுரையில் யாதவா கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படித்தேன். அதேமாதிரி முதுகலைப்படிப்பை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில்(St.Xavier’s college) படித்தேன். ஆராய்ச்சிப் படிப்பை லயோலா கல்லூரியில் படித்தேன். பின் கல்லூரியின் விரிவாளராக லயோலா கல்லூரியில் சேர்ந்து என்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
கேள்வி: இன்றுள்ள சுற்றுச்சூழல் எதுவாக இருக்கிறது, ஏன் இந்த சூழல்?
vincent nerkaanal1
பதில்: பொதுவாக இன்று சுற்றுச்சூழல் பற்றிய கவலை எல்லோருக்கும் அதிகமாக இருப்பதற்குக் காரணம், நாம் வாழ்கிற இடமே நம் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைவதால்தான். ஏனென்றால் இன்று சுற்றுச்சூழல் நலமாக இருந்தால்தான் மனித வாழ்வும் நலமாக இருக்கும். இதைத்தாண்டி சுற்றுச்சூழலில் ஏற்படுகிற மாற்றம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகவும் கொடியதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இன்று சுற்றுச்சூழல் மேல் உள்ள ஆர்வம், அதை பாதுகாக்கக்கூடிய ஆர்வம் மிகவும் மிகவும் குறைவு. ஏனென்றால் அதைப்பற்றியான முக்கியத்துவம் அதில் வாழ்கிற மனிதனுக்கும், மற்ற சூழலுக்கும் தெரிவதில்லை.

vincent nerkaanal2
அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் பலவாறு அழிக்கப்பட்டு பெரிய ஆபத்தான ஒரு சூழலில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு முக்கியமான பொறுப்பாக ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ளவேண்டும், ஒவ்வொரு நாடும் எடுத்துக்கொள்ளவேண்டும், இன்னும் ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால் உலகமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிதர்சனமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற உலக வெப்பமயமாக்கல் (Global warming) என்று சொல்லப்படுகிற ஒரு உலகப் பிரச்சனை பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், நம்முடைய சுற்றுச்சூழலை அழித்து, ஒழித்து, இன்றைக்கு அதை காயப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதுதான். அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேலும் அதை வளப்படுத்துகிற ஒரு சூழலை நாம் செய்தால் ஒழிய நாம் வாழுகிற இந்த இடம் நமக்கு தகுதியான இடமாக இருக்காது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Friday 2 October 2015

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2

சமூக சீர்திருத்தம் மட்டுமே பத்திரிக்கையின் குறிக்கோள்:
periyar2
ஒவ்வொரு வாரமும் 10,000 ‘குடிஅரசு’ பத்திரிகைகளை அச்சேற்றினாலும், வருவாய் கிடைக்கக் கூடிய விளம்பரங்களை அதிகம் வெளியிட பெரியார் அதிக ஆர்வம் காட்டியதில்லை. விளம்பரங்களுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கினால் கருத்துகளை அதிகம் சொல்ல இயலாது போகிறது என்பது பெரியாரின் கருத்து. அதிக பக்கங்களை விளம்பரத்திற்கு ஒதுக்க இயலாது என்ற தனது நிலையை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் வெளிப்படையாகவே பத்திரிக்கை வாயிலாகக் குறித்து கீழ்வருமாறு அறிவிப்புச் செய்தி அனுப்புகிறார். __________“கொஞ்சநாளைக்கு ‘குடிஅரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்துவிட்டு, சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்” __________ (குடி அரசு -23.12.1928), என்று தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.
“சமதர்ம அறிக்கை”(Communist Manifesto)யின் முதல்பாகம் மொழிபெயர்க்கப்பட்டு, 1931 ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் குடிஅரசில் தொடங்கி, அந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்வரை தொடர்ந்து 5 இதழ்களில் வெளிவந்துள்ளது. இது போன்றே ‘ஜாதியொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் அறிஞர் அம்பேத்கர் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘சமதர்ம அறிக்கை’, ‘ஜாதியொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடிஅரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஒன்றே குலம்’ என்பதை வலியுறுத்த குடிஅரசு இதழைத் துவக்கிய பெரியாரிடம், நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட பொழுது ‘திராவிடன்’ நாளேட்டை நடத்தும் பொறுப்பும் பெரியாரிடம் வந்து சேர்ந்தது.   கொள்கைகளின் படி ‘குடிஅரசு’ பத்திரிக்கை போலத்தான் அதே கொள்கையுடன் ‘திராவிடன்’ நாளேட்டையும் நடத்துவேன், ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒத்துழைக்காமல் விலகிவிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பெரியார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday 1 October 2015

ஆபாசப்படங்களும், அத்துமீறும் அரசும்

aabaasa inayathalam3
கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்த நிகழ்வு பலதரப்பிலும் பரந்துபட்டு விவாதிக்கப்பட்டது. ஆபாச தளங்களை ஒழிப்பதன் மூலம், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறையும் என்பது அரசின் வாதம். சீப்பை ஒளித்துவைத்துவிட்டு திருமணத்தை நிறுத்த திட்டம் போட்ட ‘போண்டா’ மணியே கூட, அரசின் இந்த வாதத்தை கேட்டு கொல்லென சிரிப்பார்.
ஒரு உடலுறவு காட்சியை கணினியின் திரையில் பார்ப்பதன் மூலம்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்வதாக அரசு நினைத்தால், அதைவிட அடிமுட்டாள்தனமான கற்பனை இருந்திடவே முடியாது. “ஆபாச தளங்கள் இருப்பது தவறில்லை” என்ற எனது வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு ஒருசில விளக்கங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சம்மந்தப்பட்ட இருவரின் ஒப்புதலோடு படமாக எடுக்கப்பட்டு, அதனை “அடல்ட் கன்டன்ட் வார்னிங்” போட்டு இணையத்தில் பதிவேற்றப்படும் உடலுறவு காட்சிகள் அடங்கிய காணொளிகளை மட்டும்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன், நியாயப்படுத்துகிறேன். மற்றபடி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையோ, சம்மந்தப்பட்ட இருவர் அறியாத வண்ணம் மறைந்திருந்து எடுக்கப்படும் உடலுறவு காட்சிகளையோ, வன்புணர்வுகளையோ எந்த தருணத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை. நிச்சயமாக அப்படிப்பட்ட குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, தடுக்கப்பட வேண்டியவையே.
ஆபாச தளங்கள் இருக்கக்கூடாது, பாலியல் கல்வி பற்றி பேசவேக்கூடாது. ஆனால் பாலியல் குற்றங்கள் மட்டும் குறைய வேண்டும் என்று நினைப்பது, ஓட்டைப்பானையில் நீர் நிரப்புவது போலத்தான். முதலில் இந்த “ஆபாசம்” என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. சாதிக்காக செய்யப்படும் கொலைகளை “கௌரவக்கொலை”ன்னு மடத்தனமாக சொல்வதைப்போல, இப்படி பாலுணர்ச்சிகளை உந்தும் படங்களை ஆபாசப்படங்கள் என்று வரையறுப்பதும்  ஏற்கத்தக்க விஷயமல்ல. உடலின் பசியை ஆபாசம் என்றா சொல்கிறோம்?, அதைப்போலத்தான் இதுவும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுப்பசி.

domesticviolence5
பாலியல் உள்ளடக்கம் கொண்ட தளங்களை இந்த அரசு தடை செய்ததற்கு காரணமாக, பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை குறிப்பிடுகிறார்கள் கலாச்சாரவாதிகள். அப்படியானால் இணையதளங்கள் வருகைக்கு முன்பு நம்ம நாடு பாலியல் குற்றங்கள் நிகழாத நாடாக இருந்ததா என்ன?. பாலியல் குற்றங்களுக்கும், இத்தகைய பாலியல் உள்ளடக்க படங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு ஒருவகையில் இந்த தளங்கள் மறைமுக வழிவகுக்கிறதென கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஒரு மனிதனின் காமப்பசிக்கு வடிகால் கிடைக்காதபோதுதான், இதைப்போல குற்றங்கள் அதிகம் நிகழ்கிறது. இத்தகைய காணொளிகள் நிறைந்த தளங்கள், அந்த மனிதனின் அப்போதைய தேடலுக்கு வடிகாலாக அமைகிறது. சுருக்கமாக சொல்வதானால், “ஐந்து நிமிடங்கள் திரைக்காட்சியை பார்த்துவிட்டு, ஆறாவது நிமிடம் சுய இன்பம் செய்துகொள்வதோடு” அந்த காமப்பசி முற்றுப்பெறுகிறது. இதன்மூலம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ என்ன இழுக்கு வந்துவிட்டது?. யாரையும் வன்புணர்ச்சி செய்யவில்லை, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, கருத்தரிக்கக்கூட வாய்ப்பில்லாத வகையிலான இந்த வடிகால் தவறானது என்று எப்படி சொல்வீர்கள்?.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.