Monday 5 October 2015

இந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்யமுடியாது

Dr.Jerome -FI
Tele medicine என்ற ஒன்று இப்போது காலத்தின் தேவையாகி வருகிறது. அதாவது காணொளி மருத்துவம். மருத்துவர் ஒரு இடத்தில் இருப்பார், நோயாளி வேறோர் இடத்தில் இருப்பார். காணொளி மூலமாக நோயாளியைப் பார்த்து அவர் கூறும் குறிகுணங்களைக் கேட்டு, அவரது ஆய்வக முடிவுகளைக் கேட்டு மருத்துவம் செய்வது.
இப்படி சித்த மருத்துவத்தை செய்யமுடியுமா? என யோசித்துப் பார்க்கிறேன்.
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறையை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் “நாடி”.
இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
sidda maruththuvam 1
“நாடி” பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை.

“நாடி” என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment