Sunday 18 October 2015

சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல்

mazhai neer segarippu1
கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய பெயர் சேகர் ராகவன். நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தேன், இங்குதான் படித்தேன். அதன் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகாலமாக சென்னையில் பெசன்ட் நகர் என்கிற பகுதியில் வாழ்ந்து வருகிறேன். நான் இயற்பியல்துறையில் Phd பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக ஆறு வருடம் பணியாற்றினேன். பின் என்னை நிரந்தரமாக்காததால் அந்தப் பணியிலிருந்து வெளியில் வந்தேன்.
கேள்வி: தாங்கள் மழைநீர் சேமிப்பில் ஈடுபடக் காரணம்?
பதில்: எனக்கு சென்னை மீது ஒரு மோகம், வாழ்நாள் முழுவதும் சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னையை விட்டுப் போவதில் எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. வெளியூர்களில் எனக்கு நிறைய இடத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதை நான் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னை மக்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்பதால் இந்த மழைநீர் சேகரிப்பில் என்னுடைய ஈடுபாடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருபது வருடமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். ஆனால் என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இந்த மழைநீர் சேகரிப்பைப் பற்றி தெரிந்துகொண்டது அனைத்தும் நான் நேராகப் பார்த்தது, அனுபவப் பூர்வமாகக் கற்றுக்கொண்டதுதான்.

எப்படி ஒரு வண்டி பழுது பார்ப்பவர் பல வண்டிகளை சரிசெய்து கற்றுக்கொண்டாரோ, தச்சர் எந்த கல்லூரிக்கும் சென்று படித்திருக்க மாட்டார். அந்த மாதிரி அனுபவத்திலேயே கற்றுக்கொண்டதுதான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இதைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன், நிறையபேருக்கு ஆலோசனை செய்து வருகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment