Sunday 29 November 2015

நீரின்றி அமையாது உலகு


neerindri3
நீரின்றி அமையாது உலகு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருவள்ளுவரின் குறளை மட்டும் மாணவர்களுக்குப் பாடமாக வைத்துவிட்டு, அதை உணரவில்லை நமது அரசு. எனவேதான், இயற்கை தமிழக அரசுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. மழையின் சிறப்பினை திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை, மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என மழையைப் போற்றி வணங்கித் தம் காப்பியத்தைத் தொடங்கினார் இளங்கோவடிகள். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் மழையின் அருமைபெருமைகளை உணர்ந்துள்ளோம். இந்த ஆண்டில் நமக்கு இயற்கை கொடுத்த மழைநீரை வீணாக்கியதுதான் நாம் செய்த சாதனை. ஆய்வாளர்கள் நிலத்தடி நீர் குறைந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை, அரசும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
neerindri7
நமது தமிழகத்தில் 13 ஆயிரத்து 799 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 10 ஆயிரத்து 64 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தனது ஆவண அறிக்கையில், சென்னையில் முன்பு இருந்த ஏரிகள் இன்று காணவில்லை. ஆம், நுங்கம்பாக்கம் ஏரி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில் சில பகுதிகள், பனகல் மாளிகை, மாம்பலம் ஏரி, மாம்பலம் பகுதியின் சில பகுதிகள், வேளச்சேரி ஏரி, 100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால், அல்லிக்குளம், நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், கோயம்பேடு ஏரி, கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு சந்தை, மெட்ரோ ரயில் நிலையம், முகப்பேர் ஏரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விருகம்பாக்கம் ஏரி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு மற்றும் இன்று கல்வித்துறையில் உயர்ந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் ஏரி, பொத்தேரி முதலான பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 November 2015

வாயுத்தொல்லை நீங்க குறிப்புகள்


vaayuththollai1
  1. வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.
  2. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  3. சுக்கு மல்லி கசாயம் வாயுக்கு நல்லது.
  4. பசும்பாலில் பத்து பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால்வாயு சேராது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்

Wednesday 25 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு- 218


sanga paadalgal2
கண்ணகனார் என்ற புலவர் பாடியது.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டபோது அவரோடு பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரும் உயிர் துறந்தார். அதனைக் கண்ட புலவர்கள் வியந்து நின்றனர்.  வியப்பில் இருந்த புலவர்களுக்கு விடை தந்தார், புலவர் கண்ணகனார்.

தங்கமானது, நிலத்தின் அடியிலிருந்து கிடைப்பது; பவளம், காட்டிலே கிடைப்பது; முத்து, கடலிலே பிறப்பது. மணி, மலையிலிருந்து பெறுவது. இவை அனைத்தும் தோன்றுமிடம் ஓரிடமல்ல… என்றாலும், அணிகலனாக அமைக்கின்றபோது ஒன்றிணைகின்றன. அதைப்போல்தான் மன்னனாக இருந்தால் என்ன, புலவனாக இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன, இவையெல்லாம் காரணங்கள் அல்ல… இங்கே, வேறோரு முக்கியமான பந்தம் இருக்கிறது. உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரோடுதான் இணைவர். அந்த இணைப்புத்தான் மன்னனையும் புலவனையும் இணைத்தது என்கின்றார் புலவர்.  இதோ அவரின் புறநானூற்றுப் பாடல்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 November 2015

சிறுமியும் காண்டாவிலங்கும்


rhinoceros3
அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில் இருந்தது. பக்கத்து வீட்டுக்கு நகரத்திலிருந்து தனது அம்மாவைப் பார்க்க அவரது மகன் வருவார். வரும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் அவர் வருவார். என்மேல் தனது அக்கறையைக் காட்டுவதற்காக என் அப்பா முன்னிலையில் எதையாவது ஒன்றைச் சொல்லி அதற்கு இங்கிலீஸில் என்ன? இதற்கு இங்கிலீஸில் என்ன? என்று கேட்பார். வாட் இஸ் யுவர் நேம்? என்ற கேள்வியைத் தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது.
அழைத்துக்கொண்டு எங்களது வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல அன்றும் நான் மாட்டிக்கொண்டேன். அவரது புதல்வி முன்னிலையில் ‘காண்டாமிருகத்திற்கு’ இங்கிலீஸில் பெயர் என்ன? என்று கேட்டார். நான் திருதிருவென விழித்தேன். உடனே, நீர்யானைக்கு இங்கிலீஸில் என்ன? என்று அடுத்து கேட்டார். அதற்கும் நான் விழித்தேன். அதே கேள்வியைத் தனது மகளிடம் கேட்டார். அவர் மகள் உடனே அதற்கு பதில் சொன்னாள். இவனை இதுக்குத்தான் இங்கிலீஸ் டியூசன் அனுப்புங்கிறேன் என்றால் கேட்க மாட்டிங்கிறீங்களே அண்ணே’ என்று படிக்காத என் தந்தையிடம் அலுத்துக் கொண்டார். என் வயதுடைய பெண்பிள்ளை முன் அவமானப்பட நேர்ந்ததை எண்ணி நான் கூனிக் குறுகி அழுதே விட்டேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

இதற்கு முன் காண்டாமிருகத்திற்கு ரைனோசரஸ் என்பதும் நீர் யானைக்கு ஹிப்போபொடமஸ் என்பதும் எனக்குத் தெரியாது. அந்த வார்த்தையையே நான் கேட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் காண்டாமிருகம் என்ற சொல் கூட எனக்குப் புதிது தான். இந்த சம்பவம் நடந்து முப்பது வருடத்திற்கும் மேலாகி விட்டது. சரி. அதை எதற்கு உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன்? என்று கேட்கிறீர்களா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை


438 days1
(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
நிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில், பசிபிக் பெருங்கடலின் மையத்தில், மார்ஷல் தீவுகளின் (Marshall Islands) கடற்காயலில் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் இருந்த கடலோரக் காவல்படையினர் தமது படகின் மேல்தளத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த உருவத்தை வெறித்துப் பார்த்தனர். அவர் பலநாட்கள் கடலில் தனித்துவிடப்பட்டவர் என்ற மறைக்கமுடியாத உண்மையை அவரது தோற்றம் காட்டியது. சிக்குப்பிடித்துப் புதர் போல மேல்நோக்கி மண்டியிருந்த தலைமுடியும், சீரற்று வளைந்த முடிக்கற்றையுடன், பலநாட்களாகச் சவரம் செய்யப்படாத ஒழுங்கற்ற தாடியும் கொண்டிருந்தார் அந்த மனிதர். மணிக்கட்டுகள் சிறுத்துப்போய், கணுக்கால்களும் வீங்கியிருந்த நிலையில் கொஞ்சமும் நடமாடாத முடியாதவராக அவர் இருந்தார். யாருடைய கண்களையும் சந்திக்க விருப்பமின்றிப் பார்வையைத் தவிர்த்து அவ்வப்பொழுது முகத்தையும் மூடிக் கொண்டார்.

எல் சல்வடோர் (El Salvador) நாட்டைச் சேர்ந்த 36 வயதான ‘ஹோஸே சல்வடோர் ஆல்வரெங்கா’ (José Salvador Alvarenga) என்ற மீனவர் தனது உதவியாளரான இளைஞருடன் பதினான்கு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகில் தனது பயணத்தைத் துவக்கினார். இப்பொழுது அவர் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மார்ஷல் தீவுகளின் தென்முனையில் இருக்கும் ஏபான் ஆட்டல் (Ebon Atoll) என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். புயலில் சிக்கி, தான் புறப்பட்ட இடத்திலிருந்து 6,700 மைல்களுக்கு அப்பால், கடலில் 438 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 23 November 2015

சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம்

chennai thaththalikkiradhu5
உங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.
இவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா?
திடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.

இருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின்  மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை-5

kurundhogai 4பாடலைப் பாடியவர்- நரிவெரூஉத் தலையார்
இக்குறுந்தொகைப் பாடலில், மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகளில் மன உணர்வுகளும் மாறுபடுகின்ற தன்மையினைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
காதலின் தன்மை இதுவென அறியாத வளரிளம் பருவத்துப் பெண். காதலன் பிரிவினால் அவளுடைய கண்கள் தூங்க மறுக்கின்றன. இதுதான் காதலின் தன்மையா என்று வியப்படைகின்றாள் அவள். இங்கே அவளின் உள்ளத்து உணர்வுகள் பாடலாகிறது. இதோ பாடல்…
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
“இனிய நிழலைத் தரும் புன்னை மரம். அதில் வந்து தங்கிய குருகு உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் மீது கடலலைகள் வந்து மோதுகின்றன. மோதும் அலைகளால் வீசப்படும் துளிகளால் புன்னையின் அரும்புகள் மலருகின்றன. இத்தகைய இனிய நீரினையுடைய மென்புலத்துத் தலைவன் என்னைப் பிரிந்தான் என்று பல இதழ்களையுடைய தாமரை போன்ற என் கண்கள் தூக்கம் இல்லாததாயின. இதுதான் காதல் நோயா? ” என்று தோழியிடம் வினா எழுப்புகின்றாள் தலைவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி தமிழகத்தில் நியமனம்!

prithika_yashiniசேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினி ஓர் திருநங்கை. பி.சி.ஏ பட்டதாரி. தனது இருபதாவது வயதில் பெண்ணாக மாறினார். வீட்டை விட்டும் வெளியேறினார். தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதிக் காப்பாளர், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப் படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.
தன் தளராத முயற்சியினால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தல் முதல் நியமன ஆணை பெற்றது வரை ஒவ்வொரு கட்டமாக போராடி தடைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற வரலாற்றையும் படைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த கடினமான பாதைகளைக் காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை பிரித்திகா தான். ஆனால் பிரித்திகாவின் விண்ணப்பத்தை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்தது. காரணம் அவரது கல்விச் சான்றிதழ்களில் ஆண் பெயர் இருந்தது. பின்னர் அவர் தனது பெயரை சட்டப்படி சான்றிதழ்களில் மாற்றினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 17 November 2015

உடல் பருமனும் நோய்களும்

udal paruman4பழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான எல்லாத் தீவனங்களையும் கொடுத்து வளர்ப்பார்கள். அதை வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள் அதுவும் நன்கு ‘கொழு கொழு’ என்று வளரும். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் சிலர் இதேபோல் செய்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு பதிலாக அதேபோல பிள்ளைகளை வளர்க்கிறார்கள், பலி கொடுப்பதற்கு.
ஆம், உடல் பருமனால் அநேக நோய்கள் உண்டாகின்றன. ஆயுள்காலத்தை வெகுவாக குறைக்கும் காரணிகளில் உடல் பருமன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சிறுவயதில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அப்படியே வாலிப வயதிலும் வளர்கிறார்கள், நடுத்தர வயதிலும் வாழ்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் நூலகத்தை விட உணவகத்திலேயே இவர்களை அடிக்கடி பார்க்க முடியும்.
உடல் பருமன் கிட்டத்தட்ட எல்லா நோய்களோடும் தொடர்புடையது.
udal paruman6இப்படிச் சொன்ன உடனேயே, உங்கள் மனதில் எழுகின்றவைகள். “டாக்டர், என் மகன்/மகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?” இப்போது இருக்கும் எடை சரிதானா, அதிகமா? என்பதுதான். இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு பதில் காண்பதற்கு முன்பாக, சில வாழ்வியல் புரிதல்கள் நமக்கு வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 16 November 2015

தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015

USTPAC_Panel
அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி, கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.
ThamilThaiVaazhthu

காலை எட்டு மணியளவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழர் சங்கம விழா இனிதாகத் துவங்கியது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஒருங்கிணைத்த ‘அரசியல் சீரமைப்பும் அரசியலமைப்பு மாற்றமும்’ எனும் தலைப்பில் குழுவிவாதம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் கார்டியன், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆகியவற்றின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 12 November 2015

பாரதியின் பார்வையில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகள்

bharathi1
பாரதி வறுமையில் வாடிய போதிலும் வீட்டை மறந்து நாட்டையே நினைத்து வாழ்ந்தவர். இவரது ஆற்றல் கவிதையில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், பெண்கள் முன்னேற்றம், கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு, தொழில்முறை, மருத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். இப்பாரதியின் பல்நோக்குப் பார்வைகளில் நாம் பாரதியின் அறிவியல் நோக்கையும் அதன்மீது அவரது பார்வையின் பிரசுரங்களையும் கண்டுணரலாம்.
பாரதியின் குழந்தைப் பற்று
குழந்தைகளை ‘ராஜா’ வென்றே கூப்பிடுவார். நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். சொல்வதையே செய்யுங்கள் என்பார் பாரதி. அதாவது தாம் செய்வதில் ஏதாவது கெடுதலிருக்கும். சொல்வதில் இராது என்பதே அர்த்தம். குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது, குழந்தைகளுக்குப் பருவத்திலேயே பயமுறுத்தி விட்டால் பிறகு அடிமை உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும் என்பார்.

பூனை என்று யாராவது குழந்தைகளைப் பயமுறுத்தினால் அவர்களைக் கோபிப்பார். குழந்தைகளைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ‘பூனையும் இல்லை, பயமும் இல்லை’ என்று சொல்லித் தருவார். பாரதி ராத்திரி வேளையில் குழந்தைகள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் துணையில்லாமல் தனியாகப் போகும்படிச் சொல்வார். தாம் கூடவே இருப்பதாக நினைத்துத் தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றும், இருளைக் கண்டு பயப்படக்கூடாது என்றும் சொல்லித் தருவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வேர்க்கடலை கொழுப்பு அல்ல.. ஒரு மூலிகை

Peanuts
வேர்க்கடலை மனித வளர்ச்சிக்கு உதவும் ஒரு சத்தான தாவரம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் சாதாரணமாக நாம் வேர்க்கடலைக்கு, இல்லை கடலை என்ற வார்த்தையை வேறு ஒன்றுக்கு பயன்படுத்தும் காலத்தில் இருக்கிறோம். இரு ஆண்கள் பேசிக்கொண்டால் பேசுகிறார்கள் என்போம், ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தால் கடலை போடுகிறார்கள் என்கிறோம். மகாத்மா காந்தி ஆட்டுப்பாலும், கடலையும் உண்டே அதிக நாள் வாழ்ந்தார் என்ற வரலாறும் படித்திருக்கிறோம். இந்த வேர்க்கடலையில் அப்படி என்னதான் உள்ளது என இனி காண்போம்.
தமிழகத்தில் நிலக்கடலை கோடை பருவத்தில் சூன், சூலை மாதங்களிலும், கார்த்திகை பட்டத்திலும், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதி உடைய நிலமுள்ள இடத்தில் தான் கடலை நன்கு வளரும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் களிமண் பகுதிகளிலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. கடலை விதையை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். நிலக்கடலைத் தாவரத்தில் பக்கக்கிளைகள் தோன்றும் போது 2 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
verkadalai5
இக்கடலையை இலைச் சுருட்டுப்புழு தாக்கும். இதன் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்க வேப்பங்கொட்டைச் சாற்றினை 5 சதவிகிதம் தயாரித்து தெளித்தால் இலைச்சுருட்டுப் புழு மடிவதோடு, பயிறுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இதற்காக தமிழக அரசு ஜிப்சம் உரங்களை மானிய விலையில் கொடுத்து வருவது கூடுதல் தகவலாகும்.

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை

brain1ஆணும் பெண்ணும் சிந்திப்பதில் மாறுபட்டவர்கள், ஒரு நிலைமையைக் கையாளுவதிலும் அவர்களிடம் வேறுபாடுகள் உண்டு என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆணுக்குத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ, தனது உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்கவோ பெண்களைப் போல இயலுவதில்லை; தகவல்களை நினைவு கூர்வதிலும் பெண்கள் வல்லவர்கள் எனப் பெண்களின் குணநலன்களும், பழக்க வழக்கங்களும் பொதுமைப்படுத்தப்படுகிறது. பெண்ணின் இத்தகைய பண்புகளுக்குக் காரணம் அவர்களது மூளையில் நினைவுகளைத் தொகுக்கும் “ஹிப்போகேம்பஸ்” பகுதியின் அளவு ஆண்களைவிட அளவில் பெரிதாக இருக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆண் பெண் மூளைகளின் “வடிவமைப்பில்” வேறுபாடுகள் உள்ளனவா என்றும் ஆய்வுகள் பல நடத்தப்பட்டதுண்டு.
brain4இது போன்றே, ஆண்களும் பெண்களும் அடிப்படையில் ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாற்றுவதில் வேறுபட்டவர்கள் என்றும், “உளவியல் அடிப்படையில்” அவர்கள் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள் போன்று நடந்து கொள்வதாகவும் குறிப்பிடப்படுவதுண்டு. ஜான் க்ரே என்பவர் எழுதிய, ‘மென் ஆர் ஃப்ரம் மார்ஸ், விமென் ஆர் ஃப்ரம் வீனஸ்’ (Men Are From Mars, Women Are From Venus, John Gray) என்ற நூல் ஆண் பெண் இருபாலரது செயல்பாடுகளையும் விளக்க முற்பட்டது. தங்கள் துணைகளின் சிந்தனைப் போக்கை அறிய விரும்பியவர்களும், அவர்களது மனதில் இடம்பிடிக்க விரும்பிய இருபாலரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நூலைப் படிக்க விரும்பியதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இந்த நூல் விற்பனையானது. இந்த முயற்சியின் விளைவாக எத்தனை மணவிலக்குகள் தவிர்க்கப்பட்டன என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சிறுநீரகக் கற்களை மருந்தினால் கரைக்க முடியும்

siruneeraga karkal fi
சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அறுவை சிகிச்சை செய்யாமல் சித்தா மருந்துகள் சாப்பிடுவதாலேயே கரைக்க முடியும். எனவே அறுவை சிகிச்சையும் தேவையில்லை அதிக பணமும் தேவையில்லை.
சிறுநீரகத்தில் உருவாகின்ற கற்களைப் பொறுத்தவரையில்(kidney stones) மருந்துகள் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிற முடிவுக்கு அலோபதி மருத்துவம் வந்துவிட்டது.
ஆனால் சிறுநீரகக் கற்களை சித்த மருத்துவத்தில் மிகச் சாதாரணமாக மருந்துகளால் கரைத்து விட முடியும் என்கிற நற்செய்திதான் இந்த கட்டுரை.
“Attempts to develop drugs that dissolve stones have so far been unsuccessful ” அதாவது, சிறுநீரகங்களில் உருவாகும் கற்களை கரைப்பதற்கான மருந்துகளை கண்டறியும் முயற்சிகள் வெற்றியடையவில்லை என்கிறது அலோபதி மருத்துவம். எனவே சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையை (ESWL) பரிந்துரைக்கின்றனர் .
அலோபதி மருத்துவத்தின் மருந்தியல் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருப்பது. அதன் வளர்ச்சியை கழுத்து வலிக்க அண்ணார்ந்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்க அதனால் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு மருந்து தயாரிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சிறுநீரகக் கற்கள் எனும் பிரச்சினையை ‘கல்லடைப்பு நோய்’ என சித்த மருத்துவம் நோய் கணிப்பு செய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 5 November 2015

தமிழக மீனவப் பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது

tamil meenavap pen1
கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவப் பெண்கள் வாழ்வு உயர்வுக்கும் பாடுபட்ட, தமிழக மீனவப் பெண் லட்சுமிக்கு, அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீகாலஜி’ சர்வதேசத் தொண்டு நிறுவனம் சிறந்த தனிநபருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ‘சீகாலஜி’ விருது பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருடன் ஒரு நேர்காணல்:

உங்களைப்பற்றி?
லெட்சுமி: ராமேசுவரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பாலம் மீனவக் கிராமம், சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறேன். வங்கக்கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரணைப் பகுதியில், ‘மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு’ இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். பாம்பன் ஊராட்சி, 14-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறேன்.

கூட்டமைப்பு மூலம் தாங்கள் ஆற்றிய சேவைகள் என்னென்ன?

லெட்சுமி: நான் எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளேன். எங்கள் பகுதி மீனவப் பெண்கள் பெரும்பாலானோருக்கு கடற்பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடலை விட்டால் வேறு தொழிலுக்கும் போக முடியாது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண்களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் எங்களது வாழ்வாதாரத்தை சுரண்டி வந்தனர். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 November 2015

பழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்

palangaala india 4
ஏறத்தாழ கிறித்துவ சகாப்தம் தோன்றிய காலத்தை ஒட்டி இந்தியாவில் (அக்காலத்தில் இன்றுபோன்ற ஒரு ‘இந்தியா’ இல்லை, இருந்தாலும் கருத்து எளிமை கருதி இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நாவலந்தீவு என்றோ பரத கண்டம் என்றோ வேறு பல பெயர்கள் உள்ளன, பிடிக்காதவர்கள் அவற்றில் ஒரு சொல்லைப் பயன்படுத்திக்கொள்ளலாம்). வாழ்க்கையின் இலட்சியங்கள் (இவற்றிற்குப் புருஷார்த்தங்கள் என்று பெயர்) மூன்று என்ற சிந்தனை உருவாகியது. ‘தர்மார்த்தகாமம்’ என்று வடமொழியில் இதைக் குறித்தார்கள். தமிழில் அறம் பொருள் இன்பம் என்றார்கள். திருக்குறள் இந்த அமைப்பில்தான் முப்பாலாக அமைந்துள்ளது. வீடு அல்லது மோட்சம் என்ற கருத்து பின்னர் இவற்றுடன் இணைக்கப்பட்டது. இதை ஒட்டித் தமிழிலும் அறம்பொருள்இன்பம்வீடு என்ற தொடர் உருவாகியது. தண்டியலங்காரம், “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்று சொல்லுகிறது.
palangaala india aram2
தர்மம் என்ற சொல்லின் பொருளும் அறம் என்பதன் பொருளும் சமமல்ல என்றாலும் ஏறத்தாழச் சமம் என்று வைத்துக் கொள்ளலாம். தர்மம் என்ற சொல்லின் மூலம் த்ரு- என்பது. இதற்கு இறுகப்பிடித்துக்கொள், பத்திரமாய்க் காப்பாற்று என்று பொருள். தர்மம் பிரபஞ்சத்தைப் பிடித்திணைக்கிறது. அன்பைவிட தர்மம் தான் உலகைச் சுற்றும்படி செய்கிறது. பொருள்கள் எப்படி இருக்கின்றன எப்படி இருக்க வேண்டும் என்ற இரண்டும் தர்மத்திற்குள் அடங்கியிருக்கின்றன.
அர்த்தம் என்பது பொருள்: பணம், அரசியல் அதிகாரம், வெற்றி, வார்த்தையின் பொருள், ஒன்றின் நோக்கம் என்பன இதற்குள்ள பல அர்த்தங்கள்.
காமம் என்பது இன்பமும் ஆசையும். வெறும் காம இன்பம் மட்டுமல்ல, புலன் சார்ந்த இன்பம்-இசை, நல்ல உணவு, வாசனை, ஓவியம்-யாவும் காமம் என்பதற்குள் அடங்குகின்றன.

முழு வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இவற்றில் பாத்தியதையும் கடமையும் உண்டு. பழங்கால சமஸ்கிருதப் பனுவல்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை மையப்படுத்தியே அமைந்தன. அவற்றில் புகழ்பெற்றவை, மனுவின் தர்மசாத்திரம், கௌடில்யரின் அர்த்தசாத்திரம், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் ஆகிய மூன்றுமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 November 2015

உங்கள் பழையவீட்டை புதியதாக்குங்கள்

pazhaya veettai1
சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர், தனது சொந்த ஊரிலுள்ள வீட்டின் நிமித்தம் என்னை சந்தித்தார். அந்த வீடு ஏராளமான பிரச்சினைகளுடன் இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது மனைவியும் இணைந்து முதன் முதலாக கட்டிய வீடாகும். அந்த சொத்தின் மீது அவர்கள் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் மேற்கூரை பூச்சுகளையெல்லாம் இழந்து, கம்பிகள் எல்லாம் துருப்பிடித்துக் கிடந்தது. எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்துவிழுமோ என்ற பயத்துடன் உள்ளே செல்லவேண்டியிருந்தது. பூச்சுகளை மட்டும் சரிசெய்து விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு வரமுடியாதபடி பிரச்சினை வேர்விட்டிருந்தது. கூரையை மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை.
அதுமட்டுமின்றி அனைத்து சுவர்களும் வெடிப்புகளுடன் காணப்பட்டன, கண்ட இடமெல்லாம் கரையான் தென்பட்டது. என் நண்பரின் பெற்றோர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த வீட்டின் பிரச்சனைகளினால் அவர்களின் தினசரி வாழ்வே போராட்டமாக இருந்தது.

pazhaya veettai3
என்னை நண்பர் அந்த வீட்டிற்கு அழைத்தபோது, நான் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டேன். உடனடியாக எனக்கு என்ன தோன்றியது என்றால், தண்டமாக வீட்டிற்கு செலவு செய்வதைக் காட்டிலும் வீட்டை விற்றுத் தொலைத்துவிடுவதே மேல் என்பதாகும். ஆனால் வீட்டை வாங்குபவரின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது இதுபோன்ற பாழான வீட்டை மேற்பூச்சுகள் செய்து, அவரின் தலையில் கட்டுவது முற்றிலும் நியாயமில்லை என்று பட்டது, நண்பரும் அதே எண்ணத்தைக் கொண்டிருந்தார். மேற்கூரையை முற்றிலும் தகர்த்து எறிந்துவிட்டு, அவ்விடத்தில் புதிய கூரையை அமைப்பதே சரியானதாக இருந்தாலும், அதை செய்ய எனக்கு மனமில்லை. எனது நண்பர் மேற்கூரையை இழந்து தனது வீடு எலும்புக்கூடுபோல் நிற்பதைக் காண சக்தி அற்றவராக இருந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 November 2015

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காதீர்கள்

Dr.Jerome -FI

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
Deepawalikku9

“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18805

தற்காலக் கல்வி முறை பகுதி -7

velai5
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து ‘கல்வி’ என்பதால்தான், கல்வியை ‘மம்மர் அறுக்கும் மருந்து’ என்கிறது ஒரு பழம்பாடல். ‘கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது; வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிகஎளிது’ என்கிறது கொன்றை வேந்தன்.
‘ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரியபொருள் கல்வி  ஒன்றுதான். அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும். ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும்’ என்கிறது குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ‘பிச்சை எடுத்தாவது கற்பது நல்லது’ என்கிறது நாலடியார்.
இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து அதை எப்படியாவது பெறவேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம். இப்படி காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கல்வி கற்பதென்பது ஞானம் பெறுவதற்கும், தன்னிலை உணர்வதற்கும் என்ற நிலையிலிருந்து மாறி பின்னர் இறைவனையடைவதற்கு என்ற நிலையடைந்து, தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

சரி, கல்வி பெற்றதினால் கிடைக்கும் இது போன்ற பயன்களை இச்சமூகமும், நாடும், மக்களும் பெற்று முழுப்பயன்களையும் பெற்றுள்ளார்களா? தன் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கல்வி கற்றவனின் உயிர்ப்பிணி முழுமையாக நீங்கியுள்ளதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.