Thursday 5 November 2015

தமிழக மீனவப் பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது

tamil meenavap pen1
கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவப் பெண்கள் வாழ்வு உயர்வுக்கும் பாடுபட்ட, தமிழக மீனவப் பெண் லட்சுமிக்கு, அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீகாலஜி’ சர்வதேசத் தொண்டு நிறுவனம் சிறந்த தனிநபருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ‘சீகாலஜி’ விருது பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருடன் ஒரு நேர்காணல்:

உங்களைப்பற்றி?
லெட்சுமி: ராமேசுவரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பாலம் மீனவக் கிராமம், சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறேன். வங்கக்கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரணைப் பகுதியில், ‘மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு’ இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். பாம்பன் ஊராட்சி, 14-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறேன்.

கூட்டமைப்பு மூலம் தாங்கள் ஆற்றிய சேவைகள் என்னென்ன?

லெட்சுமி: நான் எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளேன். எங்கள் பகுதி மீனவப் பெண்கள் பெரும்பாலானோருக்கு கடற்பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடலை விட்டால் வேறு தொழிலுக்கும் போக முடியாது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண்களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் எங்களது வாழ்வாதாரத்தை சுரண்டி வந்தனர். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment