Thursday 19 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை-5

kurundhogai 4பாடலைப் பாடியவர்- நரிவெரூஉத் தலையார்
இக்குறுந்தொகைப் பாடலில், மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகளில் மன உணர்வுகளும் மாறுபடுகின்ற தன்மையினைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
காதலின் தன்மை இதுவென அறியாத வளரிளம் பருவத்துப் பெண். காதலன் பிரிவினால் அவளுடைய கண்கள் தூங்க மறுக்கின்றன. இதுதான் காதலின் தன்மையா என்று வியப்படைகின்றாள் அவள். இங்கே அவளின் உள்ளத்து உணர்வுகள் பாடலாகிறது. இதோ பாடல்…
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
“இனிய நிழலைத் தரும் புன்னை மரம். அதில் வந்து தங்கிய குருகு உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் மீது கடலலைகள் வந்து மோதுகின்றன. மோதும் அலைகளால் வீசப்படும் துளிகளால் புன்னையின் அரும்புகள் மலருகின்றன. இத்தகைய இனிய நீரினையுடைய மென்புலத்துத் தலைவன் என்னைப் பிரிந்தான் என்று பல இதழ்களையுடைய தாமரை போன்ற என் கண்கள் தூக்கம் இல்லாததாயின. இதுதான் காதல் நோயா? ” என்று தோழியிடம் வினா எழுப்புகின்றாள் தலைவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment