Tuesday 28 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14


siragu-panjathandhira-kadhaigal
சக்கரம் தலையில் சுழன்று கொண்டிருந்தவனை நோக்கி, நாலாவது வேதியன் துணுக்குற்றான். “நீ யார்? உன் தலைமேல் இந்தச் சக்கரம் சுழல்வதன் காரணம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். கேட்ட அளவிலே அந்தச் சக்கரம் அவனை விட்டு இந்த வேதியன் தலைமேல்வந்து சுற்றலாயிற்று. “இதென்ன? கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே” என்று கவலையுற்றான் நாலாவது ஆள். பழைய ஆளைப் பார்த்து, “இது ஏன் இப்படி ஆயிற்று? உன் தலைமீதிருந்த சக்கரம் என் தலைமேல் சுற்றக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

பழைய ஆள்: பலப்பல ஆண்டுகளாக இப்படித்தான் என் தலையில் இச்சக்கரம் சுற்றியவாறு இருந்தது. “இந்தச் சாலையில் மற்றொருவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்போது உன் தலையில் உள்ள இந்தச் சக்கரம் அவன் தலையில் பற்றிக் கொள்ளும்” என்று குபேரன் எனக்குக் கூறினான். அதன்படி ஆயிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26073

Monday 27 February 2017

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்


Siragu Moovalur_ramamirtham2
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சில வருடங்களுக்கு முன் முன்னாள் தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். இவரின் புகழை பறைசாற்றும் விதமாகவே அந்தத் திட்டத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.
Siragu Moovalur_ramamirtham4

‘தேவதாசி’ என்னும் முறை, தமிழகத்தில் சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டு, அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பெயரால் புனிதப் போர்வை போர்த்தினர் சனாதனம் பேசும் உயர்சாதியினர். இந்த அவலம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 26 February 2017

தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்

Picture1-tamil nadu natural boundary
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்
     தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”
      “குமரி வேங்கடங் குணகுட கடலா
     மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”
என்பார் இளங்கோவடிகள். இதன் மூலம் வடக்கில் திருவேங்கடம் முதல், தெற்கில் குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு திகழ்ந்த நிலம் தமிழ் பேசும் தமிழ்நாடாக இருந்ததை அறிகிறோம். அவ்வாறே இந்த எல்லைகளுக்குட்பட்டத் தமிழ் மண்ணை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களின் எல்லைகள் குறித்தும் பாடல்கள் உள்ளன.

தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த, அவர்களது நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் என கம்பர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டு நான்கு தனிப்பாடல்கள் ‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற நூலில் (பக்கம் 124-126) இடம் பெற்றுள்ளன. தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), என்ற இந்த நூல், பல புலவர்கள் எழுதிய தனிப்பாடல்களைத் தொகுத்து, 1908 ஆம் ஆண்டு கா. இராமசாமி நாயுடு அவர்கள் வெளியிட்ட நூல். இந்நூலில் காளமேகப்புலவர் முதற்கொண்டு, கம்பர் உட்பட 29 புலவர்கள் இயற்றிய சுமார் 750 தனிப்பாடல்கள் கா. இராமசாமி நாயுடு அவர்களால் தொகுத்து உரை எழுதப்பட்டு பார்த்தசாரதி நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ‘ஒட்டக்கூத்தர்’, நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன. எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது. மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே, அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம். சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம். ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில் சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களின் நாடுகளின் எல்லைப்பகுதிகள் ‘தமிழகத்தின் இயற்கை அமைப்பு’ அடிப்படையில் இயற்கையாக அமைந்த நில எல்லைகளான ‘மலைத்தொடர்கள்,’ ‘ஆறுகள்,’ ‘கடல்கள்’ போன்றவற்றால் வரையறுக்கப்பட்டோ அல்லது ‘பெருவழிகள்,’ ‘ஊர்கள்’ ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டோ அமைந்திருப்பதை நிலவரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.


சுருக்கமாக, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 February 2017

என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1


(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா)
அகரமுதல் னகரம்வரை தமிழில்
அறிவியல் சிந்தையை தேடியவர்
மாசறத் தாம்கற்றுத் தெளிந்த
மாத்தமிழ் நுட்பம் யாவையும்
அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்
அண்ணார் அறிந்த அருந்தமிழ்
அறிவுக் களஞ்சிய மணைத்தும்
அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை
விளைத்திடவே; அல்லும் பகலும்
அயராது அண்ணைத் தமிழுக்கு
அருந்தவத் தொண்டினை ஆற்றினார்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25890

Tuesday 21 February 2017

கூடா நட்பு (சிறுகதை)


Siragu koodaa natpu

ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது. அதில்தளும்பத் தளும்பத் தண்ணீர் கட்டி கிடந்தது. தடாகத்தில் தாமரை மலர்களும் அல்லிமலர்களும் நிறையப் பூத்துக் கிடந்தன. தடாகத்தில் அன்னம் ஒன்று வசித்து வந்தது. அது பூக்களோடு உறவாடிக் கொண்டும், சுவைமிகு தடாகநீரைப் பருகிக் கொண்டும், ஆடியும் பாடியும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தது. சர்ப்பம் அன்னத்தின் வாழ்க்கையோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தது. அன்னத்திற்குத்தான் எத்தனை சொகுசான வாழ்க்கை? அன்னத்தை யாரும் எந்தத் தொந்தரவும் செய்வது இல்லை. ஆனால் சர்ப்பத்தைக் கண்டாலே கல்லெறிந்து கொல்ல வருகிறார்கள். சர்ப்பத்திற்கு அன்னத்தின் மீது பொறாமை வந்தது. அன்னத்தை காணும்போதெல்லாம் அதன் பொறாமைத் தீ வளர்ந்தது. அன்னத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என சர்ப்பம் நினைத்தது. அதற்கு ஓரேவழி உறவாடிக் கெடுப்பதுதான் என முடிவு செய்தது.

தடாகத்தில் அன்னம் வசித்து வருவது சர்ப்பத்திற்குத் தெரியும். ஆனால் குளத்தில் சர்ப்பம் இருப்பது அன்னத்திற்குத் தெரியாது. ஒருநாள் அன்னம் குளக்கரையில் வந்தமர்ந்தது. அப்போது சர்ப்பம் அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தது. சர்ப்பத்தை கண்டதும் அன்னம் அஞ்சி பின்வாங்கியது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 20 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13


இவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. அது தன் இடத்திற்குச் சென்று பார்த்தபோது வேறொரு முதலை அங்கு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் “நம் நண்பனாகிய குரங்கிடமே உபாயம் கேட்கலாம்” என்று திரும்பிவந்தது. “நண்பனே நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டது. முதலையைக் கடிந்து கொண்ட குரங்கு, “உனக்கு புத்தி சொல்வதே வீண். மூடனுக்கு உபதேசித்தால் வீடு உடையவனையும் வீடு இழக்கச் செய்வான்” என்றது.
முதலை: அது எப்படி?

Siragu pancha thandhir kadaigal 13-1

குரங்கு: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்யலானது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழையில் ஒரு குரங்கு பற்கள் கிட்டி, குளிரால் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தது. குருவிகள் அதைக் கண்டு இரக்கம் கொண்டன.
குருவி: உனக்குக் கைகால்கள் இருந்தும் குளிர்காற்று முதலிய துக்கத்தை நீ அனுபவிக்கக் காரணம் என்ன? நீ ஏன் வீடுகட்டிக் கொள்ளவில்லை?
துஷ்டக் குரங்கு: ஊசிமூஞ்சி மூடா! வல்லவர்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாயா நீ? எனக்கு வீடு கட்டுகிற சக்தி இல்லை; ஆனால் அதைப் பிரித்தெறிகின்ற சாமர்த்தியம் உண்டு.
என்று கூறி, தூக்கணாங்குருவிகளின் கூட்டைப் பிய்த்தெறிந்தது. ஆகவே உன்னைப் போன்றவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது” என்றது குரங்கு.
முதலை: நண்பனே, நான் குற்றவாளி என்பதும் மூடன் என்பதும் மெய்யே, ஆனால் பழைய சிநேகிதன் என்ற முறையில் உன்னை உதவி கேட்கிறேன்.
குரங்கு: நீ உன் இடத்திற்கே திரும்பப் போ. உன் பகைவனோடு போர் செய். இறந்தால் சொர்க்கம் அடைவாய். வென்றால் உன் வீடு உனக்குத் திரும்பக் கிடைக்கும். முன்பு ஒரு புத்திசாலி, உத்தமனுக்குக் கும்பிடும், சூரனுக்கு பேதமும், காரியக்காரனுக்கு தானமும், ஈடானவனுக்கு தண்டமும் செய்து தன் காரியத்தில் வெற்றி அடைந்தது. அதுபோல நடந்துகொள்ள வேண்டும்.

முதலை: அது எப்படி, சொல்வாயாக.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 19 February 2017

ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாடும் வள்ளலாரின் ஏழுதிரைகளின் மறைப்பும்

இந்திய மெய்ப்பொருளியல் பெரும்பரப்பு கொண்டது. பல்வேறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கியது. வேத மரபும், வேத மறுப்பு மரபும் இந்திய மெய்ப்பொருளியலின் முரண். அல்லது இணை வளர்ச்சி என்றே கொள்ளவேண்டும். ஆசீவகம், சமணம், பௌத்தம், பூதவாதம் போன்றன வேதமரபினை மறுத்த இந்திய மெய்ப்பொருளியல் தத்துவங்கள் ஆகும்.

Siragu-vallalaar6

இவற்றில் அசீவகம் தமிழகத்தின் தொன்மைச் சமயமாகக் கருதத்தக்கது. இந்திய அளவில் பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கை பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கையை வகுத்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் முடிவு. பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்டு உருவாக்கப்பெற்றது அசீவகம் ஆகும்.

ஆசீவகத்தில் நிறக் கோட்பாடு அடிப்படையானது. அறுவகையான நிறக்கோட்பாடுகளை இது கற்பிக்கிறது. ஆசீவகத்தில் ஆன்ம ஈடேற்றம் கருதி மனிதர்தம் மெய்யியல் படிநிலைக்கு ஏற்ப வண்ண உடைகள் வழங்கப்பெறும். ஞானவளர்ச்சியின் குறியீடாக வண்ணங்கள் இச்சமயத்தில் கொள்ளப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12


siragu-panjathandhira-kadhaigal

(முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது)
ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் அரசன்: எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது?
குயவன்: நான் சூளை இட்டுக்கொண்டிருந்தபோது, ஓர் ஓடு விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டது எசமான்!
அரசன்: எப்படியோ தவறு நிகழ்ந்து விட்டது. இது இரண்டாம் பேருக்குத் தெரிவதற்கு முன்னால் நீ ஓடிப்போ. பெரு வீரர்கள் எதிரில் உன் உயிர் சல்லிக்காசும் பெறாது.
குயவன்: சுவாமி, என் கைகால்களைக் கட்டி, என்னைப் போர்க்களத்தில் விட்டு என் திறமையை நீங்கள் காணுங்கள்.
அரசன்: நீ பிறந்த குலம் போர் இடும் அனுபவத்தில் வந்ததன்று. அப்படியாக, நீ நரிக்குட்டிபோல் வீணாக ஏன் துள்ளுகிறாய்? குலைக்கிற நாய் வேட்டை பிடிப்பதில்லை.
குயவன்: இந்த நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல்லுங்கள் அரசே!

அதற்கு அரசன்: ஒரு வனத்தில் ஒரு சிங்கம் தன் துணையோடு வசித்துவந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அது பல விலங்குகளைக் கொன்று தன் பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 14 February 2017

நெல்சன் மண்டேலா – நெருப்பாற்றில் விடுதலைச் சுடர் ஏற்றியவர்!!


Siragu nelson mandela1

1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் குடிசையில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு. அவரது அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர், ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா, முதலில் “கெல்ட் டவுன்” என்ற கல்லூரியிலும், பிறகு “போர்ட்ஹேர்” என்ற கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். போர்ட் ஹரே (fort hare ) பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத்தொடங்கியது. மாணவர் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய காரணத்தினால், கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் கல்வியை கைவிடவில்லை. நெல்சன் மண்டேலா மூன்று முறை வழக்கறிஞர் தேர்வில் தோற்றாலும் தன் விடாமுயற்சியால் வழக்கறிஞராகி ஆப்பிரிக்க பூர்வ குடிமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் தொன்மை. இருந்தும் தாம் தமிழர் என்ற  மேலான ஒற்றுமையைப் புறந்தள்ளிவிடுவது தமிழரின் பண்பாக இருக்கிறது.  இன்றும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பிறப்புடன் ஒட்டிக்கொண்டுவிடும் சாதிப்பிரிவினைகளில் தேடிப் பிரிவினை பேசி வருவதும் கலவரங்களில் ஈடுபடுவதும் மடமையன்றி வேறில்லை. ஆய்வாளர்கள் பலர் சாதிகள் என்ற கருத்தாக்கம் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதா அல்லது வெளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவிய ஒரு கருத்தாக்கமா என்றும்; அவ்வாறு சாதி என்ற கருத்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டிருந்தால் அது நிகழ்ந்தது  எந்தக் காலமாக இருந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் அயல் நாட்டுத் தமிழறிஞரும் அடங்குவர்.

Siragu tamilagaththin saadhi2


இந்த ஆய்வாளர்கள் தமிழின் தொல் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அக்காலச் சமூக அமைப்பை ஆராய முற்படுகிறார்கள். காலத்தால் முற்பட்டு நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என்று அறியப்படும் பத்துப்பாட்டு மற்றும்  எட்டுத்தொகை நூல்களை உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் ஆகும். இந்நூல்களின் தொன்மை காரணமாக ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் அக்காலத் தமிழ்ச் சமூகம் சாதியைக் கடைப்பிடித்துள்ளதா என்று ஆராய்வது வழக்கம். சங்கஇலக்கிய காலம் என்பது எக்காலம் என்று வரையறுப்பதில் பல்வேறு கோணங்கள் இருப்பினும் பொது ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.மு. அல்லது கி.மு.) 300 ஆண்டுகளும் பொது ஆண்டுகளுக்குப் பின்னர் (பொ.பி. அல்லது கி.பி.) 300 ஆண்டுகளும் சங்ககாலம் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது உண்டு. சங்க இலக்கிய நூல்களில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர், உயர்வு தாழ்வுகள் உள்ள மக்கள் பிரிவினரைக் குறிக்கும் சொற்களும் கருத்தாக்கங்களும் உள்ளனவா என ஆராயப்படுவதுடன் சாதியின் தொடர்ச்சியாக, தூய்மையின்மை அல்லது துப்புரவின்மை ஆகிய காரணங்களால் “தீட்டு”  “விழுப்பு” என்பதன் அடிப்படையில் ஒரு சில பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதும்  “தீண்டாமை” என்பது கடைப்பிடிக்கப்பட்டதா என்றும் ஆராயப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 12 February 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே.!


Siragu-nandhini1

இப்போது தமிழகம் சந்திக்கும் பல்வேறு அரசியல் சூழல்களில், இதுவும்கடந்து போகும் என்று நம்மால் எளிதாகக் கடக்க முடியாத ஒரு கொடுமையான மனவேதனை ஒன்று இருக்கிறதென்றால், அது குழந்தை ஹாசினியின் மன்னிக்கவே முடியாத படுகொலை.!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமி நந்தினியின் கொடூர படுகொலை நடந்த ஒருமாத காலத்திற்குள், மீண்டும் கடந்த வாரத்தில், ஒரு ஏழு வயது குழந்தைக்கு இந்தக் கொடுமை நடந்தேறி இருக்கிறது என்பது, நம் சமூகம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான சான்றாக இருக்கிறது. பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்யப்படவில்லை என்றால், நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது முன்னேற்றமாகாது… வாழ்வியலில் பின்தங்கி தான் இருக்கிறோமென்று பொருள்.!


நம்நாட்டில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை, பலாத்காரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. பெண்களைப் பற்றி சரியான புரிதலை ஆண் பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க தவறி விட்டோமென்று தான் தோன்றுகிறது. முதல் ஆசிரியர்களாக பெற்றோர்கள் தான் இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 7 February 2017

கவிதைச் சோலை (தமிழாய் எழுவோம்!, தமிழால் பிறவிப் பலன்)

தமிழாய் எழுவோம்!

- ராஜ் குணநாயகம்

Siragu Jallikattu_struggle8

எங்கள் சுதந்திர போராட்டம்
மௌனிக்கப்பட்டது
முள்ளிவாய்க்காலிலே…
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்
நசுக்கப்பட்டது
மெரீனாவிலே….
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்
எட்டப்பன்களே

நம் தமிழ் இனத்தின் சாபக்கேடு!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25572

Monday 6 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11


siragu-panjathandhira-kadhaigal

நான்காவது யுக்தி
அர்த்தநாசம் அல்லது லப்தஹானி (அதாவது, பொருளின் அழிவு, பெற்ற பேறின் அழிவு)
சோமசர்மா, அரசகுமாரர்களுக்கு, நான்காவது தந்திர உபாயத்தைக் கற்பிக்க முனைந்தான். “துன்பம் வந்தபோது, அறிவு குறையாமல் இருப்பவன், குரங்கு முதலையிடமிருந்து விடுபட்டது போலப் பெரிய துன்பத்திலிருந்தும் மீளுவான்” என்று ஒரு கதையைச் சொல்லலானான்.
அரசகுமாரர்கள்: அது எப்படி ஐயா, சொல்லுங்கள்.
(குரங்கும் முதலையும் கதை)
pancha thandhira kadhaigal2


ஆசிரியன்: ஓர் ஆற்றங்கரையில் நாவல் மரத்தின்மேல் சுமுகன் என்னும் ஒரு குரங்கு வசித்து வந்தது. அப்போது ஒரு முதலை பசியோடு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. “நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். ஆகவே உன் பசியைப் போக்கச் சில கனிகளைத் தருகிறேன்” என்று நாவற் பழங்களைக் கொய்துபோட்டது குரங்கு. அது முதலாக தினந்தோறும் முதலை அந்த இடத்திற்கு வந்து சில கனிகளைச் சாப்பிடுவது வழக்கமாயிற்று. இரண்டும் பேசிக்கொண்டு அந்நியோன்யமாக இருந்தன. ஒருநாள், முதலை, சில நாவற் பழங்களைக் கொண்டு சென்று தன் மனையாளாகிய முதலையிடம் கொடுத்தது. அது மிக இனிப்பாக இருப்பதைக் கண்ட பெண்முதலை, தன் கணவனிடம், “இதனை நீ எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டது. “சுமுகன் என்ற குரங்கு என் நண்பன். அவன் தினந்தோறும் எனக்குச் சில கனிகள் அளிப்பது வழக்கம், இன்று தின்றதுபோக மிகுந்ததை உனக்குக் கொண்டுவந்தேன்” என்றது முதலை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 5 February 2017

புதுமைப்பித்தனின் கவிதைகள்


Siragu pudhumai piththan1

தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தன் என அழைத்துக் கொண்டது, பெருமை கொண்டது.
மணிக்கொடி இதழில் எழுதியவர்கள் பலர் மேலை நாட்டு இலக்கிய அறிவினை கற்று அவற்றினை தமிழுக்குப் பழக்கிக் கொண்டு தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர். இக்குழுவினர் செய்த சோதனை முயற்சிகளை அக்கால இலக்கிய மரபியலாளர்கள் ஏற்கவில்லை என்பதும் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் “இம்முறை தமிழுக்கு ஏற்றதல்ல, இவை இலக்கண இலக்கிய மரபுகளை மீறியவை” என பல கடுமையான விமர்சனங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் கதைகள் பலவிதமான புதுமை நோக்கும் பார்வையும் கொண்டனவாக விளங்குவன. அவற்றிற்கு உதாரனமாக “செல்லம்மாள்” மற்றும் “பொன்னகரம்” ஆகிய கதைகளே சான்றாக விளங்குகின்றன என்பதை தமிழ் இலக்கிய உலகினர் யாவரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 2 February 2017

இது தொடக்கமாகவே இருக்கட்டும்! (கவிதை)


Siragu Jallikattu_struggle3

ஏறு தழுவுதல்
தரணியாண்ட தமிழனின்
பண்டைய பாரம்பரிய வீர விளையாட்டு
தமிழும்
கலை, கலாச்சாரம்
பாரம்பரியம், பண்பாடு
எங்கள் உயிர் மூச்சு!
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்
பீட்டாவோ
வீட்டோவோ

யார் இவர்கள்?
எங்கள் உயிர் மூச்சை
நிறுத்த சொல்ல………

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25397

Wednesday 1 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10


siragu-panjathandhira-kadhaigal

அரிமர்த்தனனிடம் பிரகாரநாசன் என்னும் மந்திரி சொல்கிறது:
“ஒரு வனத்தில் ஒரு வேடன், கையில் புறாக்கூடும், கண்ணியும், தடி முதலிய வேட்டைக் கருவிகளும் எடுத்துக்கொண்டு அலைந்தான். அப்போது பெருமழையும் காற்றும் வந்து பிரளயம் போல வீசலாயின. வேடன் பயந்துபோய் ஒரு மரத்தடியில் நின்றான். “கடவுளே, இந்த வேளையில் என்னைக் காப்பாற்றக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று வேண்டினான். அந்தச் சமயத்தில், அந்த மரத்தின் மேல் வசிக்கும் ஒரு ஆண்புறா, தனது பெட்டை வரவில்லை என்று மிகவும் துக்கமாக இருந்தது. “இன்றைக்கு என் மனைவி வரவில்லையே, அவளை யாரேனும் பிடித்துக் கொண்டார்களோ தெரியவில்லையே. அவள் இல்லாத இந்த வீடு எனக்குச் சுடுகாட்டைப் போலத் தோன்றுகிறது. அவள் கற்பும் கணவன் இன்புறக்கூடிய செயலும் உள்ளவள். அப்படிப்பட்டவளை அடைந்த நான் பாக்கியவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வேடனின் புறாக்கூண்டிலிருந்த பெண் புறா, மிகவும் துக்கத்துடன்: “முன்பிறப்பில் தீவினை செய்தவர்களுக்குப் பலவகைப்பட்ட துன்பங்களும் சிறையும் நோயும் வந்து நேர்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எந்தச் சமயத்தில் எது நேருமோ அதை யாராலும் தடுக்க ஆவதில்லை” என்றது. பிறகு, மரத்தின் மேலிருந்த தன் கணவனை நோக்கி, “அன்புள்ளவரே, நமது வீட்டுக்கு வந்த விருந்தாளியாகிய இந்த வேடனுக்கு உதவி செய்வது நமது கடமை. குளிர் முதலியவற்றை நீக்கி விருந்தோம்ப வேண்டும். இவன் நம் மனைவியைப்பிடித்துவிட்டானே என்று துக்கம் கொள்ளாமல் இவனுக்கு உதவுங்கள்” என்றது. பெண்புறா கூறியதைக் கேட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.