Wednesday 15 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12


siragu-panjathandhira-kadhaigal

(முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது)
ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் அரசன்: எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது?
குயவன்: நான் சூளை இட்டுக்கொண்டிருந்தபோது, ஓர் ஓடு விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டது எசமான்!
அரசன்: எப்படியோ தவறு நிகழ்ந்து விட்டது. இது இரண்டாம் பேருக்குத் தெரிவதற்கு முன்னால் நீ ஓடிப்போ. பெரு வீரர்கள் எதிரில் உன் உயிர் சல்லிக்காசும் பெறாது.
குயவன்: சுவாமி, என் கைகால்களைக் கட்டி, என்னைப் போர்க்களத்தில் விட்டு என் திறமையை நீங்கள் காணுங்கள்.
அரசன்: நீ பிறந்த குலம் போர் இடும் அனுபவத்தில் வந்ததன்று. அப்படியாக, நீ நரிக்குட்டிபோல் வீணாக ஏன் துள்ளுகிறாய்? குலைக்கிற நாய் வேட்டை பிடிப்பதில்லை.
குயவன்: இந்த நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல்லுங்கள் அரசே!

அதற்கு அரசன்: ஒரு வனத்தில் ஒரு சிங்கம் தன் துணையோடு வசித்துவந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அது பல விலங்குகளைக் கொன்று தன் பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment