Tuesday 28 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14


siragu-panjathandhira-kadhaigal
சக்கரம் தலையில் சுழன்று கொண்டிருந்தவனை நோக்கி, நாலாவது வேதியன் துணுக்குற்றான். “நீ யார்? உன் தலைமேல் இந்தச் சக்கரம் சுழல்வதன் காரணம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். கேட்ட அளவிலே அந்தச் சக்கரம் அவனை விட்டு இந்த வேதியன் தலைமேல்வந்து சுற்றலாயிற்று. “இதென்ன? கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே” என்று கவலையுற்றான் நாலாவது ஆள். பழைய ஆளைப் பார்த்து, “இது ஏன் இப்படி ஆயிற்று? உன் தலைமீதிருந்த சக்கரம் என் தலைமேல் சுற்றக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

பழைய ஆள்: பலப்பல ஆண்டுகளாக இப்படித்தான் என் தலையில் இச்சக்கரம் சுற்றியவாறு இருந்தது. “இந்தச் சாலையில் மற்றொருவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்போது உன் தலையில் உள்ள இந்தச் சக்கரம் அவன் தலையில் பற்றிக் கொள்ளும்” என்று குபேரன் எனக்குக் கூறினான். அதன்படி ஆயிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26073

No comments:

Post a Comment