Wednesday 29 March 2017

மகாகவி ந.பிச்சமூர்த்தி


Siragu na_pichamoorthy1

பொதுவாக நம் இந்திய இலக்கியத் துறையில் மகாகவி என்று பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டில் வங்கத்தில் பிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பேசுவோம். பின் விடுதலை கவிகளைப் பாடிய பக்கிம் சந்திரசட்டர்ஜி பற்றிப் பேசுவோம். இது பொதுவான நம் இந்திய இலக்கியம் மீதான பார்வை.


தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மகாகவி என்று நாம் பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாணடின்; முற்பகுதியில் வாழ்ந்த சுதந்திர காலத்தில் சுதந்திர வேட்கைக்கான கவிதை பாடியசுப்ரமணிய பாரதியைப் பற்றிப் பேசுவோம். அவருக்குப் பின் பல கவிஞர்களை நம் இலக்கியம் கண்டாலும் நாம் அவர்களை பாரதியை போற்றுவது போல் போற்றுவது இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 March 2017

பெண்ணிய நோக்கில் குறுந்தொகை


Siragu kurundhogai-1

எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது” என்று குறுந்தொகையின் சிறப்பினை எடுத்துரைக்கிறார் உ.வே. சாமிநாதர். அகமனப் புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்டது குறுந்தொகையாகும். இக்குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எழுதிய குறுந்தொகைப்பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து என்ற அளவினை எட்டுகிறது. இப்பாடல்களைப் பெண்ணிய நோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகிறது.


குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களின் தொகுப்பாகும். இவ்வகப்பாடல்களில் செவ்விய நிலையில் காதல் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. செவ்விய நிலைக் காதல் என்பது ஒருவகையில் பெண்களுக்கு தடைப்படுத்தும் நிலையையும் தருகின்றது. மற்றொரு வகையில் அதுவே விடுதலையையும் தருவதாக உள்ளது. பெண்கள் தாங்களாகவே காதல் இன்பத்தில் ஈடுபடுதல், அல்லது ஆடவரால் வீழ்த்தப்படுதல் என்ற நிலைகளில் திருமணம் என்ற எல்லைக்குச் சென்று குடும்பம், பிள்ளை, இல்லறம் என்ற பிணைப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் காதலித்ததன் காரணமாக சிலவகை உரிமைகளையும் பெண்கள் பெறத் தகுதி உடையவர்களாக உள்ளனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26500

Monday 27 March 2017

நைஜீரியா பொம்மைகள்


Siragu barbie-doll1

பெண் என்றாலே அழகு, மென்மை, தாய்மை என்று இந்தச் சமுதாயம் கட்டியமைத்ததின் எச்சம் தான் ஒரு பெண் குழந்தை விளையாட பொம்மைகள் வாங்கிப் பழக்குவது. அந்த பொம்மை கூட அழகாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே இங்கு எழுதப்படாத விதி. இந்தச் சமூகத்தில் குறைபாட்டை எல்லாம் கொண்டாடும் வழக்கம் உண்டு. வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சிகப்பழகு பூச்சினை முகத்தில் பூசிக் கொள்ளும் பெண்களை நம்மால் காண முடியும்.


வெள்ளை தோல் மற்றும் சாம்பல் நிற முடி, இது அழகு அல்ல, அது ஒரு நிறமி குறைபாடு. ஒரு சில மாதங்கள் மட்டுமே கதிரவன் வெளிவரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த நிறமி குறைபாடு இருப்பதால் தான் அவர்கள் வெண்மை தோல் கொண்டு இருக்கின்றார்கள். அந்த மனிதர்களின் உருவ அடிப்படையில் உருவானவை தான் பார்பி பொம்மைகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 26 March 2017

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்


440286-suicide-representational-2

உயர் கல்வி மத்திய நிறுவனங்களில் தற்போது அதிகரித்திருக்கும் மாண்வர்களின் மரணங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை. அங்கு நிலவும் சாதீய பாகுபாடுகள் நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று. ரோகித் வெமுலாவின் மரணத்தைப் பற்றிய நீதியே இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், மேலும் மேலும் பல மரணங்கள். திருப்பூர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் மற்றும் JNU நஜிப் அஹமது காணாமல் போயிருப்பது, கன்னஹையா மீது பல பொய் வழக்குகள் என பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.!


நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கும் நாம் இம்மாதிரி படுகொலைகள் நடப்பது, அதுவும் அரசு கல்வி நிறுவனங்களிலேயே நடப்பது மிகவும் அநீதி, நாட்டிற்கு பெருத்த அவமானம். வெட்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளை படுகொலைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சாதியும், மதமும் ஒரு மனிதனின் உணர்வுகளைத் தூண்டி தற்கொலை செய்ய வைக்கிறது என்றால் அவைகள் நிச்சயம் பல்கலைக் கொலைகளாகத்தான் இருக்க முடியும்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 21 March 2017

அபத்தங்கள்


Siragu abaththangal5

சுற்றிலும் தினம் தோறும் நிகழும் நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள், நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில் இருக்கும்போது உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில் அபத்தங்களாகத் தோன்றுகிறது. இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன? உண்மையை அறிய முடியுமா?


சமூகத்தின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, அவர்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகிறார்கள். சிந்தனையின் அடிப்படையின்றி உணர்ச்சிவசப்பட வைக்கப்பட்ட சமூக மக்கள், அவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆனால் அடிப்படையில் அவர்கள் யாரை எதிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமான வழிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்பட வைத்த சமூக விரோதிகள், லாபத்தை அள்ளிச் செல்கிறார்கள். சமூகம் அடுத்த உணர்சிவசப்படுதலுக்கு தயாராக நின்று கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 20 March 2017

செவ்விலக்கியங்களில் விளையாட்டு


Siragu sevvilakkiyam4

மனிதனின் உடலை வளப்படுத்துவது விளையாட்டு. மனித மனதை மகிழ்ச்சி அடையச் செய்வதும் அதுவே. மனித வாழ்வில் ஏற்படும் வெற்றித் தோல்விகளைச் சரிசமமாக ஏற்க வைப்பதும் விளையாட்டு அனுபவமே ஆகும். ‘‘செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்று விளையாட்டால் உவகை தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்.


சங்க இலக்கியங்களிலும், தொடர்ந்து எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், காப்பியங்களிலும் பல்வகை விளையாட்டுகள் குறித்த பதிவுகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. தமிழர்தம் மரபு சார்ந்த அடையாளங்களுள், பழக்கவழக்கங்களுள் ஒன்றாக நீடித்து இருப்பது விளையாட்டுத் துறை ஆகும். செவ்விலக்கிய கால விளையாட்டுகள் இன்றைக்கு வரை தமிழர்களின் புழங்குமுறையில் இருப்பது என்பது விளையாட்டு உணர்ச்சியின் தொடர்வையும், செவ்விலக்கிய கால நீட்சியையும் அறிவிப்பதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 19 March 2017

பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்


poornachandran4

சிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது?

2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளிப்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.

தங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன?


பின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால் அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக் கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே கண்ணாயினார்’. அவ்வளவுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 14 March 2017

திடல் கண்ட இடமெல்லாம் கடல்! (கவிதை)


Siragu-thidal2

திடல் கண்ட
இடமெல்லாம் -
நம் வெற்றிப்
படை கூடும்! காணீரோ?
நெடுவாசல்
விடுக்கின்ற
அறைகூவல் கேளீரோ?
சீறி வந்த
காளைகளாய்த்
திமில் தெறிக்கும்
இளைஞர் திறள்!

பரம்பரையாய்
ஏர் உழுதுக்
கூர்அறிவு பெற்ற
வீரர்களின் போர்க்குரல்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26324

Monday 13 March 2017

அருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை


Siragu arutpa3

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப் பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.
கோயில்களில், பசனைகளில், உற்சவங்களில் இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் 1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் அருட்பா எனும் தலைப்பில் வெளிவந்தது.

ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர் பாடப்பட்ட அருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது கோயில்களில் பன்னிரண்டு திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. இது பலருக்கு வெறுப்பினைத் தந்தது. ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது. சாதிய வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 12 March 2017

கல்வியையும் அதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்


siragu-new-education4

கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எனினும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் கல்வியின் நிலை அறிந்து கொள்ள நாம் அவற்றை ஆய்வு செய்வது என்பது வேண்டியதாகிறது. மேலும் தற்காலத்தில் கல்வியின் நிலை என்ன என்பதனை நாம் அறிந்துகொள்ளவும் வேண்டியதாகிறது.
கல்வியே செல்வம்:
உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட கல்வியைத்தான் செல்வம் என்று,
“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”

என ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வம் என்று குறிப்பிடுகிறார். மேலும் பெற்றோர்களது கடமையாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 7 March 2017

கவிதைச் சோலை (சுவைத்தேன்!, எல்லோரும் வாழ்க வாழ்கவே!)


சுவைத்தேன்!

Siragu tamil1

சுவைத்தேன் ஒருதேன் சுவைத்தேன் அதில்
என்நெஞ்சும் மயங்கிடச் சுவைத்தேன்- நாளும்
அதிலொரு துளிசுவைத் தேன்மது சுவைத்தேன்
குறிஞ்சியில் செம்புலப் பெயரார் வரைந்த
அன்புடை நெஞ்சம் கலக்கும் ஓவியக்
காட்சியை சுவைத்தேன்!-கலித்தொகை நூலில்
காதலறம் அளித்திடும் இல்லறம் சுவைத்தேன்

மணக்கும் முல்லையில் இயற்கையின் ஒளியை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26207

Monday 6 March 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15


siragu-panjathandhira-kadhaigal

பின்னொரு நாள், சண்டை மூண்டதால், ஒரு பணியாளன் தன் கையிலிருந்த ஒரு தடியை சமையல்காரன்மீது வீசி எறிந்தான். சமையல்காரன், தன் கையிலிருந்த கொள்ளிக்கட்டையினால் அவனைத் திருப்பி அடித்தான். அது அருகிலிருந்த வைக்கோல் குவியல்மீது விழுந்ததால் அது தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ குதிரை லாயத்திற்கும் பரவியது. சில குதிரைகள் தீயினால் இறந்தன. பல குதிரைகளுக்குப் பலவித தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அரசன் விலங்கு மருத்துவரை வரவழைத்தான்.
அரசன்: காயம் பட்ட குதிரைகள் பிழைப்பதற்கு என்ன வழி?
மருத்துவர்கள்: குரங்குக் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தடவி வந்தால் இந்தக் காயங்கள் பூரண குணமாகும்.
அரசன்: நமது தோட்டத்திலிருக்கும் குரங்குகளைக் கொன்று இந்த வைத்தியத்தை உடனே செய்யுங்கள்.

வைத்தியர்களும் அவ்விதமே குரங்குக் கூட்டத்தை முற்றிலுமாகப் பிடித்துக் கொன்று குதிரைகளின் தீப்புண்களை ஆற்றினர். இந்தச் செய்தி அறிந்த முதுகுரங்கு, இதற்குப் பழிவாங்கவேண்டும் என்று முடிவுசெய்தது. அது காட்டிலிருந்து நகர்ப்புறம் வரும் வழியில், ஒரு ஏரியைக் கண்டது. அதில் மனிதர்கள் வந்துசெல்வதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. ஆகவே இந்த ஏரியில் ஏதாவது பேய் இருக்கலாம் என்று கருதித் தயங்கியது குரங்கு. ஆனால் தாகம் அதிகமாக இருந்ததால், ஒரு தாமரைத் தண்டினை எடுத்து அதன் தூம்புவழியாக ஏரியின் நீரை உறிஞ்சிக் குடிக்கலாயிற்று. குளத்திலிருந்த பேய் அந்தக் குரங்கின் முன் தோன்றியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 5 March 2017

மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் தனியார் பள்ளி நிறுவனங்கள்.!


Siragu moodanambikkai3
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், இந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில், சில குறிப்பிட்ட மதத் தொடர்பான மூடநம்பிக்கைகளை மாணவர்களிடம் திணிக்கிறது என்றே சொல்லலாம். இது ஒரு ஆபத்தான செயலாகும். நம் வருங்கால சமூகம் இம்மாணவர்களையே நம்பியிருக்கும் நடைமுறையில், இம்மாதிரி சமூக சீர்கேடுகளை நாம் உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பல தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பொதுத் தேர்வு சமயத்தில், பெற்றோர்களுக்கு பாதபூசை செய்ய நிர்பந்திக்கிறது, மென்மேலும், ஆசிரியர்களும் பாதப்பூசை செய்ய வேண்டும், கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வத்திற்குச் சமம் என்ற ஒரு தோற்றத்தை மாணவர்களிடம் அறிமுகம் செய்கிறது. இதற்கெல்லாம் மிகப்பெரிய உச்சகட்டமாய், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது எனலாம். சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று, பத்தாம் வகுப்பில் படிக்கும் நாற்பத்தியெட்டு மாணவர்களை மொட்டை அடிக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணமாம். தேர்வில், தேர்ச்சிப்பெற வேண்டுமென்பதால் தான் இந்த மொட்டை அடிக்கும் சம்பவமாம்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 2 March 2017

போக்கத்தப் பயல்களும் பொறுப்பற்ற அரசியலும் (கவிதை)


Siragu-chair

நாற்காலிப் போருக்காய்
‘நா’காலி ஆன
வீண் வெற்று
வாய்ச்சொல் வீரர்கள்-
மண்ணின் மைந்தர்களை
மன்னராக்கிய ஏழைகளை
வாழவழி ஏதுமின்றி
மாளும் விவசாயிகளை-
பொங்கிவந்த காளையரை-
போர் தொடுத்த இளைஞர்களை என
என்னடா நினைத்தீர்கள்
என்னரும் மக்களை?

ஓடு காலிகளாய்ப் பேருந்து ஏறி
தன்னறிவுச் சிந்தையுன்றி
தாய்நாடு பற்று இன்றி
அடுத்தது தாண்டும்
செம்மறி ஆடுகளாய்
அடிமையுற்று அடைபட்டீர்
நூற்றுக்கும் மேல் பட்டியிலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26074

Wednesday 1 March 2017

சிறகை விரித்தப் பறவை (சிறுகதை)


siragu-natural-guardian5

பேருந்து,   அண்ணாசாலை வழியே சென்று  கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன்  குழந்தையை தூக்கியபடி  வேகமாக நடந்து கொண்டிருக்கிறார். எங்கோ மெலிதாக, ‘நான் தேடும் செவ்வந்திபூவிது’ என்ற இளையராஜாவின் மெலடி பாடல் கேட்கிறது… இவைகளை  எல்லாம் கடந்து, பேருந்து சென்று கொண்டிருக்கிறது. இத்தனையும் தாண்டி, தனக்கு பிடித்த சன்னலோர இருக்கையில்  அமர்ந்திருந்தாலும், பூங்குழலிக்கு மனம் சாலையில் லயிக்கவில்லை. கண்களில் கண்ணீர் வருவதற்குத் தயாராக உள்ளது… காலையில் வீட்டில் நடந்த சம்பவமே மீண்டும், மீண்டும் மனதில் வந்து தொல்லைப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அவளுடைய நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.