Sunday 26 March 2017

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்


440286-suicide-representational-2

உயர் கல்வி மத்திய நிறுவனங்களில் தற்போது அதிகரித்திருக்கும் மாண்வர்களின் மரணங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை. அங்கு நிலவும் சாதீய பாகுபாடுகள் நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று. ரோகித் வெமுலாவின் மரணத்தைப் பற்றிய நீதியே இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், மேலும் மேலும் பல மரணங்கள். திருப்பூர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் மற்றும் JNU நஜிப் அஹமது காணாமல் போயிருப்பது, கன்னஹையா மீது பல பொய் வழக்குகள் என பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.!


நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கும் நாம் இம்மாதிரி படுகொலைகள் நடப்பது, அதுவும் அரசு கல்வி நிறுவனங்களிலேயே நடப்பது மிகவும் அநீதி, நாட்டிற்கு பெருத்த அவமானம். வெட்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளை படுகொலைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சாதியும், மதமும் ஒரு மனிதனின் உணர்வுகளைத் தூண்டி தற்கொலை செய்ய வைக்கிறது என்றால் அவைகள் நிச்சயம் பல்கலைக் கொலைகளாகத்தான் இருக்க முடியும்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment