Monday 6 March 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15


siragu-panjathandhira-kadhaigal

பின்னொரு நாள், சண்டை மூண்டதால், ஒரு பணியாளன் தன் கையிலிருந்த ஒரு தடியை சமையல்காரன்மீது வீசி எறிந்தான். சமையல்காரன், தன் கையிலிருந்த கொள்ளிக்கட்டையினால் அவனைத் திருப்பி அடித்தான். அது அருகிலிருந்த வைக்கோல் குவியல்மீது விழுந்ததால் அது தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ குதிரை லாயத்திற்கும் பரவியது. சில குதிரைகள் தீயினால் இறந்தன. பல குதிரைகளுக்குப் பலவித தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அரசன் விலங்கு மருத்துவரை வரவழைத்தான்.
அரசன்: காயம் பட்ட குதிரைகள் பிழைப்பதற்கு என்ன வழி?
மருத்துவர்கள்: குரங்குக் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தடவி வந்தால் இந்தக் காயங்கள் பூரண குணமாகும்.
அரசன்: நமது தோட்டத்திலிருக்கும் குரங்குகளைக் கொன்று இந்த வைத்தியத்தை உடனே செய்யுங்கள்.

வைத்தியர்களும் அவ்விதமே குரங்குக் கூட்டத்தை முற்றிலுமாகப் பிடித்துக் கொன்று குதிரைகளின் தீப்புண்களை ஆற்றினர். இந்தச் செய்தி அறிந்த முதுகுரங்கு, இதற்குப் பழிவாங்கவேண்டும் என்று முடிவுசெய்தது. அது காட்டிலிருந்து நகர்ப்புறம் வரும் வழியில், ஒரு ஏரியைக் கண்டது. அதில் மனிதர்கள் வந்துசெல்வதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. ஆகவே இந்த ஏரியில் ஏதாவது பேய் இருக்கலாம் என்று கருதித் தயங்கியது குரங்கு. ஆனால் தாகம் அதிகமாக இருந்ததால், ஒரு தாமரைத் தண்டினை எடுத்து அதன் தூம்புவழியாக ஏரியின் நீரை உறிஞ்சிக் குடிக்கலாயிற்று. குளத்திலிருந்த பேய் அந்தக் குரங்கின் முன் தோன்றியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment