Wednesday 17 May 2017

தமிழறிஞர்களில் கால்டுவெல்

தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்டக் காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவுகொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. யவனரைத் தொடர்ந்து இசுலாமியர் அரபு நாடுகளிலிருந்து வந்து வாணிபம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வாணிபத்தோடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். இப்பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்துத் தமிழுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்வளர்ச்சி

Siragu tamil1


கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்ட தமிழ்மொழி இம்மேலைநாட்டவர்களால் அச்சு இயந்திரத்தில் அச்சேறியது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அச்சு இயந்திரங்கள் பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனிகளிடத்தும் மட்டுமே இருந்தது. பொதுமக்களின் கைக்கு வரவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment