Wednesday 26 July 2017

விதியின் விளையாட்டு(சிறுகதை)


Siragu kanavanaal1
சிலருடைய வாழ்க்கை முரண் நிறைந்தது. நகை முறன் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும். என்னுடைய அக்கா பெண் கிருத்திகாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னால் உங்களுக்கு நன்றாக விளங்கும்.


கிருத்திகா மிகவும் நல்ல பெண். படிப்பில் கெட்டிக்காரி. நல்ல அழகும், அழகுக்கேற்ற படிப்பும் படிப்புக்கேற்ற குணமும் உடையவள். நாவல்களில் வர்ணனை வரும் பொற்சிலை போல் இருப்பாள். அது மாதிரி மிகவும் அழகாயிருப்பாள்.தாமரையை விட மென்மையானவள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். சாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து திலீப்பைக் கல்யாணம் செய்ஒரு வருடம்தான் ஆகிவிட்டது. கணவன் கொடுமை தாங்க முடியாமல் கிருத்திகா குடும்பம் என்னும் வட்டத்தில் அடங்காமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். திரும்பிப் போக மாட்டேன் என்று திட்ட வட்டமாக சொல்லி இருக்காள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 25 July 2017

திருமுருகாற்றுப்படையின் அமைப்பு


Siragu tamil2

தமிழ் நிலை பெற்ற மதுரையில் மூன்றாம் சங்கமான கடைச் சங்கம் அமைந்திருந்தது. இச்சங்கத்தில் புலவர்கள் பலர் இருந்துத் தமிழ் வளர்த்தனர். இக்கடைச் சங்ககாலத்து நூல்களுள் தற்போது கிடைத்திருப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சங்க இலக்கியங்கள் என்கிறோம். இந்தச் சங்க நூல்கள் செம்மொழிக் கால நூல்கள் ஆகும். செம்மொழிப் பண்புடைய நூல்கள் ஆகும். செம்மொழி வயப்பட்டதான இந்தப் பதினெட்டு நூல்களில் திருமுருகாற்றுப்படையும் ஒன்று.


பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையானதாகவும், இறைவணக்கப் பாடலாகவும் அமைந்திருப்பது திருமுருகாற்றுப்படையாகும். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் ஆவார். எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் முருகன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனை தெய்வமாக வணங்கி அவனுக்கு வெறியாட்டு என்னும் வணக்கம் செய்யும் முறை சங்க காலத்தில் இருந்துள்ளது. பரிபாடல் என்னும் எட்டுத்தொகை நூலில் செவ்வேள் பற்றிப் பாடப் பெற்ற எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களில் முருகனின் பிறப்பு, அவனின் வெற்றிச் சிறப்பு போன்ற பல செய்திகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வழிபடும் வழிபாடு மெல்ல வளர்ந்து வந்துள்ளதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 24 July 2017

செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள்


Siragu sevvandhi2
பழமைபேசி என்னும் எழுத்தாளருக்குக் கிடைத்த கொழுகொம்பு கதைசொல்வது. பழமைபேசியின்  மொழியையே கடன் வாங்கி இதை விவரித்தால்… காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம்.  உயிர்த்தோம்; இருந்தோம்; மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை கடைபிடிக்க உதவும் கொழுகொம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்றால், பழமைபேசிக்கு அது அவரது எழுத்து. அதை அவர் திறம்பட செய்துள்ளதற்குச் சான்று அவரது ‘செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு. எழுதுவதே அவருக்கான தொடுப்பு. செவ்வந்தி பழமைபேசியின் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு.

அந்தியூர் பழமைபேசியின் “செவ்வந்தி” சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளைப் படிப்பவர்கள் எவரும் அவருக்குச் சற்றும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால், அவர் ஒரு அமெரிக்கத் தமிழர் என்பதையே நம்ப மாட்டார்கள். கொங்குதமிழ் கொஞ்சுகிறது அவரது கதைகளில். வட்டார பேச்சு வழக்கு வனப்புடன் ஆட்சி செய்கிறது அவரது வரிகளில். அவரது கதை மாந்தர்கள் யாவரும் அவர் நேரில் சந்தித்த ஏதோ ஒருவரின் ஆளுமையின் தாக்கம் என்பது  நமக்குத் தெளிவாகப் புரிவதால், அவர் எழுத்தின் வழி நாமும் கொங்குமண்டலத்தின் அழகிய அமைதியான வயல் வரப்புகளிலும், ஏரிக்கரையிலும், சிற்றூர் வீதிகளிலும் மண்வாசனையை நுகர்ந்து கொண்டே அவர் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டே நடக்கும் உணர்வைப் பெறுவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 21 July 2017

வாழிய எம்தமிழ்ச் சமுதாயம் (கவிதை)


tamil-mozhi-fi
வாழிய வாழியவே! –தமிழ்மக்கள்
நீடூழி வாழிய வாழியவே!

சீராளும் புகழ்வைய மீதிலே –தமிழ்ச்
சீரர்பெற்று வாழிய வாழியவே!
காவிரிப் பொய்கை புகழ்போல –தமிழ்
காக்கும் அடியோர் நல்புகழ் வாழியவே!
(வாழிய வாழியவே)
திராவிட தேசிய கீத மெங்கும்
பொங்கொலி சங்க நாதத்தோடு –எங்கும்
மங்கல நாதமாக எங்குமிசைத் திடுகவே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/

Thursday 20 July 2017

மோனா(சிறுகதை)


Siragu mona2
மோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை யாராவது திறந்துவிட்டால் போதும். வேகமாகத் தவழ்ந்து வெளியேசெல்ல முற்படுவாள். அம்மாவிட மாட்டார். அவளைத் தூக்கி உள்ளே விட்டுவிட்டு கதவைச் சாத்திவிடுவார். மாலை வேளைகளில் அப்பா மோனாவைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்குப் போவார். கண்ணில் தென்படுகிற ஒவ்வொன்றையும் மோனா வேடிக்கை பார்த்தபடி வருவாள். வீட்டிற்கு வெளியே ஒரு சுவராசியமான உலகம் இருப்பது அவளுக்குப் புரிந்தது.


மோனாவிற்கு அவள் வீட்டில் மிகவும் பிடித்தமான இடம் பால்கனி. விசாலமான போர்டிகோவின் மேல் அமைந்த பெரியபால்கனி அது. மோனா எட்டிப்பார்க்கும் அளவில் அமைந்த குட்டையான கைப்பிடிச்சுவர். பாதுகாப்பிற்குக் கம்பிஅழிகள். அந்தக் கம்பிஅழிகளோடுவீட்டின் முகப்பில் இருக்கும் மாமரத்தின் கிளைகள் உரசிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் அம்மா அங்கிருந்தபடிதான் மோனாவிற்கு உணவு தருவார். ஒரு நண்பகல் வேளை. பால்கனியில் அமர்ந்தபடி அம்மா மோனாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது மோனா மரத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். அவள் சொன்னதை அம்மா சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் மாங்காய்களைக் கைகாட்டுவதாக எண்ணிக்கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 July 2017

தகர்க்கப்படும் தமிழக மாணவர்களின் மருத்துவ இலக்குகள்

Siragu-state-govt3
மத்திய பா.ச.க அரசின் இந்த நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு, இலக்குகள் தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. நாட்டிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளைப் பெற்றிருப்பதும், அதிக திறமையான மருத்துவ மாணவர்களைக் கொடுப்பதும் நம் மாநிலமே. அப்படி இருக்கையில், 2017 ஆம் ஆண்டான இவ்வாண்டு கடைசி இடத்திற்கு சென்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீட் தேர்வு தான்.!

பொதுத்தேர்வு தேவையில்லாத ஒன்று என்பது தான் நம் நிலைப்பாடு. இதன் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிப்படைவார்கள், மேலும் சமூகநீதிக்கு எதிரான, அதாவது இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு செயல் தான் இந்த பொதுத்தேர்வு என்ற நீட் தேர்வு. பொதுத்தேர்வு என்ற போர்வையில், கேள்வித்தாள்கள் மாநிலத்திற்கு மாநிலம், குறிப்பாக பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் மாறுப்பட்டிருந்தன. கடினமான கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. மறுத்தேர்வு வேண்டும் என்று கேட்டிருந்தும், அது உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மாநில அரசு கொண்டுவந்த, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடமும் கொடுக்கப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 17 July 2017

தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே – பேரவையின் தமிழ் விழா 2017


Siragu fetna1
 கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா முதன் முறையாக மினசோட்டா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழான “இயல், இசை, நாடகத்தையும்” போற்றும் வகையில் இவ்வாண்டு விழா அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண்ணும் இசைக்க மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் விழா எழுச்சியுடன் தொடங்கியது. அதனையடுத்து, மங்கள பறை, தவில் இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான தவில் கலைஞர்  சிலம்பரசன் கசேந்திரன், நாதசுரக்கலைஞர் இராமச்சந்திரன், வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் குழுவின் பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகள் விழா மேடையை அலங்கரித்தன.
Siragu fetna4
நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் 
மேடையேறி பெருமுரசை அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

Siragu fetna9

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 14 July 2017

ஊடகம்! (கவிதை)


Siragu oodagam1

நாளும் புதுப்புது கருத்தைத் தரிப்பாள்
நடப்பவை யாவையும் “தன்”மையால் தீட்டுவாள்
நகையணி மொழிபோல் பலசொற் கட்டுடன்
உரைநடையாய் நவின்றே நல்மொழி இயம்புவாள்

உலகம் விளைத்த புதுமைகள் யாவையும்
உயிர்ப்புடன் விளங்க எழுத்தால் எழுவாள்
பலமொழி நவின்ற பழமொழிச் சுவைகளை



பலநாட்டு மக்கள் சுவைக்கச் சமைவாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday 13 July 2017

உணர்வுகள் (சிறுகதை)


Siragu-unarvugal1
“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக
” இதோ வரேன்ங்க” என்றாள்.
‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை நேரத்துல போய் அங்கே நின்னுகிறே. அப்படி என்னத்தான் பாக்குறே, நேரமாச்சுல. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு.. இன்னும் உனக்கு மண்டையில ஏற மாட்டேங்குது. அம்மாவுக்கு மாத்திரை கொடுத்தியா. ‘
‘ கொடுத்துட்டேன் ‘
‘கொடுத்து அரைமணி நேரத்துல சாப்பாடு கொடுக்கணும்.. தெரியும்ல, என்ன சொன்னாலும் முழிக்கிறே. உனக்கு ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே, என் அம்மாவுக்காகத் தான், புரியுதா. இன்னொரு தடவை சொல்ற மாதிரி வச்சுக்காதே. சரியா. ஒகே, போய் சாப்பாடு எடுத்து வை .’


தன் பள்ளிப்பருவ நாட்களை நினைத்துக்கொண்டே, அடுக்களைக்குள் நுழைந்தாள் கவிதா. பத்தொன்பது வயதுடைய சிறிய பெண். மாதவனுக்கோ முப்பத்திநான்கு வயது. பதினைந்து வயது வித்தியாசம். மாதவனின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். பி.காம் படித்து முடித்த இரு மாதங்களிலேயே இந்த கோர நிகழ்ச்சி அவர்களின் வீட்டில். உடனே அவருடைய வங்கிப்பணி இவனுக்கு கிடைத்துவிட்டது. இவனுக்கு மூன்று தங்கைகள். மூவரையும் நன்கு படிக்கவைத்து, கல்யாணம் செய்து கொடுத்தப்பிறகு தான், தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்து, அனைத்தையும் முடித்தப்பிறகே கவிதாவை கைப்பிடித்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 12 July 2017

அறமரபுசார் ஆய்வுநெறியாளர் மு. வரதராசனார்


Siragu mu.varadharaasanaar1
இலக்கியத் திறனாய்வு என்பது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்த புதிய துறையாகும். இத்துறை வளர்ந்து ஒரு நூற்றாண்டு காலப்பகுதியைத் தற்போது நெருங்கியிருக்கிறது. தமிழ் கற்றோரின், கற்போரின் இலக்கியப் பயிற்சியை, இலக்கிய ஆராய்ச்சியை நெறிப்படுத்தி வழங்கும் இத்துறை தமிழ்க்கல்வியோடு பிரிக்க முடியாத இடத்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது. உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலானவற்றின் தமிழ் வளர்ப்புத் திறன் அவ்வவ் நிலையங்களில் உருவாக்கப்பெறும் ஆய்வேடுகளின் தரம், எண்ணிக்கை கொண்டே தற்போது மதிப்பிடப் பெற்று வருகின்றன.


இன்றைக்குத் தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் உலகு தழுவிய நிலையில் வரையறுக்கபட்ட நெறிகள், மொழிநடை முதலானவை நிலைபெறுத்தப்பட்டுவிட்டன. அயல்நாடுகளின் அரசியல், தத்துவஇயல், சமூகவியல், உயிரியல் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை மதிப்பிடும் உலகு தழுவிய கருத்து நிலைக்கு இன்றைய தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ந்திருக்கிறது. தமிழுக்கே உரிய மரபு சார்ந்த திறனாய்வு முறைகளும் புறம் தள்ளப்பட்டுவிடாமல் இன்றைய ஆய்வுலகில் எடுத்தாளப் பெற்றும் வருகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 11 July 2017

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும்


Siragu-Earthquakes-fi
தற்கால மனித வாழ்விற்கு இன்றியமையாத எரிபொருளான கச்சா எண்ணெய் எடுக்க கடலிலும் (Offshore Drilling), நிலத்திலும், எண்ணெய்க் கிணறுகளும், இயற்கை எரிவாயுக்கான கிணறுகளும் தோண்டப்பட்டு வருவது கடந்த 150 ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. வணிக நோக்கில் முதலில் ‘எட்வின் டிரேக்’ ( Edwin Drake) என்பவரால் 1859 ஆம் ஆண்டு பென்சில்வேனியா (Pennsylvania ) வில் தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணற்றின் ஆழம் வெறும் 69.5 அடிகள் மட்டுமே. குடிநீர் கிணறு போல சாதாரண ஒரு ஆழத்தில் துவங்கி தொழில்நுட்பம் விரிவடைந்த காரணத்தினால் சில ஆயிரம் அடிகள் எனத் தற்காலத்தில் தோண்டப்பட்டு எரிபொருட்கள் பெறப்படுகின்றன.
இந்நாட்களில், எண்ணெய் உற்பத்தி செய்பவர்களால் ‘ஹைட்ரோ ஃபிராக்கிங்’ (hydrofracking, hydraulic fracturing, hydrofracturing) என்னும் ‘நீரழுத்த பாறைத்தகர்ப்பு’ முறையாகிய ஒரு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு 10,000 அடிகளுக்கும் மேலான ஆழத்தில், படிமப்பாறைகளுக்கு இடையில் இருக்கும்   கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியன பிரித்தெடுக்கப்படுகிறது. பாறைப்படிமங்களில் இருக்கும் எரிபொருட்கள் கலவை ‘ஷேல்’ (shale) என்று குறிப்பிடப்படுகிறது. நீரும் கரிமமும் அதன் வேதிப்பண்பு என்பதால் ‘ஹைட்ரோ கார்பன்’   (hydrocarbon) அல்லது ‘நீர்க்கரிமம்’ உற்பத்தி என்றும் குறிப்பிடப்படும் வழக்கம் தோன்றியுள்ளது. ஆனால் அடிப்படை செயல்பாடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 10 July 2017

மனசுதான் காரணம் !(சிறுகதை)


Siragu reading books1

சம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க?” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள்.
“ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத்.

குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள். மனைவி பின்னால் ஓடி வந்த சம்பத்துக்கு ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது, கண்ணீர் மல்க நின்றான்.



நளினி எப்போதுமே அப்படிதான், அவளுக்குப் வாசிப்பு என்றாலே ஒரு வெறுப்பு. மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க?………………..என்பாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 7 July 2017

பெண்ணிய நோக்கில் குறிஞ்சிப்பாட்டு


Siragu kurunjippattu1
கடைச் சங்க காலத்தில் படைக்கப் பெற்ற இலக்கியங்கள்  எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.  பத்து நெடும்பாடல்கள் கொண்ட பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுகிய அடிகளை உடைய பாடல்களுள் (261  அடிகள்) ஒன்று குறிஞ்சிப்பாட்டு ஆகும். இக்குறிஞ்சிப்பாட்டு கபிலரால் பாடப் பெற்றது.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இதனை “பெருங்குறிஞ்சி”  என்றும் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களுள் இதுவே நீளமானதாகும்.


இது அகப்பொருள் (காதல்) சார்ந்தது. அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் பெருமைகளுள் ஒன்று சங்ககால தொண்ணூற்றொன்பது பூக்கள் இதனுள் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஆகும். இந்நூலில் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற சில பாத்திரங்கள் மட்டுமே இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன. இப்பனுவல் நாடகச் சாயலை உடையது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 6 July 2017

தமிழின் வசன கவிதை


Siragu chettinadu poet1
19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் மற்றும் 20-ம் நூற்றாண்டின் முதல் காலகட்டம், தமிழ் இலக்கிய உலகில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய காலமாக வரையரை செய்யலாம். சங்ககாலத்தின் மரபுசார்ந்த கவிதைகளை புனையும் போக்கு பிற்காலத்திலும் தொடர்ந்தன. குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் 19-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார்களின் கைகளில் கவிதையின் மரபு சிக்கிக் கொண்டு சல்லாபத்திற்காக மட்டுமே பயன்படக்கூடியதாக பார்க்கப்பட்ட காலமும் இதுவே.


இப்போக்குகளை மாற்றியவர் மகாகவி எனப் புகழப்பட்ட பாரதியார். மேலும் அக்காலகட்டமும் இந்திய சுதந்திர வேட்கைக்கான களம். வீச்சுடன் செயல்பட்ட காலம். அவர் கவிதையை மக்களை நோக்கி படைத்தார். அதன் விளைவு மேலைநாட்டு கவிகளின் அறிமுகம் பாரதியாருக்குக் கிட்டியது. அவ்வாறு அமெரிக்கக் கவி ஷெல்லியின் “புல்லின் இதழ்கள்” எனும் தொகுப்பு பாரதிக்கு அறிமுகம் ஆனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 5 July 2017

புரட்சிக் கவிஞரின் வீரத்தாய்


Siragu veeraththaai1

வீரத்தாய் எனும் குறுங்காவியம் இயற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் திராவிடக் கருத்துகளை ஏற்கும் முன் பகுத்தறிவு வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனக சுப்புரத்தினம் புரட்சிக்கவிஞராக பரிணமித்துக் கொண்டிருக்கும் அந்த இடைப்பட்டக் காலத்தில் எழுதப்பட்ட குறுங்காவியம் என்ற காரணத்தால் குறுங்காவியத்தின் கதை மாந்தர்கள் பெயர் வடமொழிச் சாயலில் இருந்தாலும், ‘பெண் என்பவள் வெறும் அலங்காரப் பொம்மையல்ல, அவள் கைகள் வளையல்கள் அல்ல கொடுவாள் ஏந்தும் கெடுமதிக் கொண்டோரை வீழ்த்த’ என்று மிக அருமையாக அமைத்திருப்பார் இந்தக் காவியத்தை. மொத்தம் பத்து காட்சிகளைக் கொண்டது இந்தக் குறுங்காவியம்.




சேனாபதி காங்கேயன் மந்திரியோடு சேர்ந்து சதி செய்து மணிபுரி நாட்டை அடைய, மணிபுரி மன்னனுக்கு மது ஊட்டி ஒழித்தான். மன்னனின் ராணி விஜய ராணி தன் மானம் காக்க நாட்டை விட்டு வெளியேறுகிறாள். அவர்களின் இளவரசன் சுதர்மன் சூது மதி கொண்ட சேனாபதி காளிமுத்து எனும் முரடனிடம் அவனை அனுப்பி கல்வி அறிவில்லாது வளர்க்கின்றான். இந்த நிலையில், சேனாபதி மந்திரியிடம் தான் மணிபுரியின் அரசனாக வேண்டும் என்கிறான். அதற்கு மந்திரி, விஜயராணி பற்றி மறந்து விட வேண்டாம் எனக் கூற, அவள் தான் ஓடி ஒளிந்தனளே? அவள் எங்கனம் படை திரட்டி வருவது? என வினவ, மந்திரி விஜய ராணியின் அஞ்சாத நெஞ்சம் பற்றி எடுத்துக்கூறி அவளின் போர்க்கலைகளையும் பற்றி எடுத்து இயம்ப, சேனாபதியோ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

யார் இங்கே குற்றவாளிகள்!(கவிதை)


Siragu election

வாக்கு போட்டு நொந்தவர்களா
வாக்கு கேட்டு வந்தவர்களா….?
நீதி குற்றவாளிக்கூண்டில்
அநீதியின் விசாரணையில்…..
ஊழலின் ஊழிக்கூத்துத்தாண்டவம்
தன் தலையில் தாமே
மண் அள்ளி போடும்
தமிழ் தேசிய போலிகள்!

அரசியல்
இவர்களுக்கு வியாபாரம்
அரசியல் சாணக்கியம்
தவழும் குழந்தை
கொள்கை
அப்படியொன்றுமில்லை
கொள்கை பற்று
கொள்கையேயில்லை
தமிழ் தேசியம்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/