Wednesday 5 July 2017

புரட்சிக் கவிஞரின் வீரத்தாய்


Siragu veeraththaai1

வீரத்தாய் எனும் குறுங்காவியம் இயற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் திராவிடக் கருத்துகளை ஏற்கும் முன் பகுத்தறிவு வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனக சுப்புரத்தினம் புரட்சிக்கவிஞராக பரிணமித்துக் கொண்டிருக்கும் அந்த இடைப்பட்டக் காலத்தில் எழுதப்பட்ட குறுங்காவியம் என்ற காரணத்தால் குறுங்காவியத்தின் கதை மாந்தர்கள் பெயர் வடமொழிச் சாயலில் இருந்தாலும், ‘பெண் என்பவள் வெறும் அலங்காரப் பொம்மையல்ல, அவள் கைகள் வளையல்கள் அல்ல கொடுவாள் ஏந்தும் கெடுமதிக் கொண்டோரை வீழ்த்த’ என்று மிக அருமையாக அமைத்திருப்பார் இந்தக் காவியத்தை. மொத்தம் பத்து காட்சிகளைக் கொண்டது இந்தக் குறுங்காவியம்.




சேனாபதி காங்கேயன் மந்திரியோடு சேர்ந்து சதி செய்து மணிபுரி நாட்டை அடைய, மணிபுரி மன்னனுக்கு மது ஊட்டி ஒழித்தான். மன்னனின் ராணி விஜய ராணி தன் மானம் காக்க நாட்டை விட்டு வெளியேறுகிறாள். அவர்களின் இளவரசன் சுதர்மன் சூது மதி கொண்ட சேனாபதி காளிமுத்து எனும் முரடனிடம் அவனை அனுப்பி கல்வி அறிவில்லாது வளர்க்கின்றான். இந்த நிலையில், சேனாபதி மந்திரியிடம் தான் மணிபுரியின் அரசனாக வேண்டும் என்கிறான். அதற்கு மந்திரி, விஜயராணி பற்றி மறந்து விட வேண்டாம் எனக் கூற, அவள் தான் ஓடி ஒளிந்தனளே? அவள் எங்கனம் படை திரட்டி வருவது? என வினவ, மந்திரி விஜய ராணியின் அஞ்சாத நெஞ்சம் பற்றி எடுத்துக்கூறி அவளின் போர்க்கலைகளையும் பற்றி எடுத்து இயம்ப, சேனாபதியோ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment