Thursday 20 July 2017

மோனா(சிறுகதை)


Siragu mona2
மோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை யாராவது திறந்துவிட்டால் போதும். வேகமாகத் தவழ்ந்து வெளியேசெல்ல முற்படுவாள். அம்மாவிட மாட்டார். அவளைத் தூக்கி உள்ளே விட்டுவிட்டு கதவைச் சாத்திவிடுவார். மாலை வேளைகளில் அப்பா மோனாவைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்குப் போவார். கண்ணில் தென்படுகிற ஒவ்வொன்றையும் மோனா வேடிக்கை பார்த்தபடி வருவாள். வீட்டிற்கு வெளியே ஒரு சுவராசியமான உலகம் இருப்பது அவளுக்குப் புரிந்தது.


மோனாவிற்கு அவள் வீட்டில் மிகவும் பிடித்தமான இடம் பால்கனி. விசாலமான போர்டிகோவின் மேல் அமைந்த பெரியபால்கனி அது. மோனா எட்டிப்பார்க்கும் அளவில் அமைந்த குட்டையான கைப்பிடிச்சுவர். பாதுகாப்பிற்குக் கம்பிஅழிகள். அந்தக் கம்பிஅழிகளோடுவீட்டின் முகப்பில் இருக்கும் மாமரத்தின் கிளைகள் உரசிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் அம்மா அங்கிருந்தபடிதான் மோனாவிற்கு உணவு தருவார். ஒரு நண்பகல் வேளை. பால்கனியில் அமர்ந்தபடி அம்மா மோனாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது மோனா மரத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். அவள் சொன்னதை அம்மா சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் மாங்காய்களைக் கைகாட்டுவதாக எண்ணிக்கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment