Tuesday 25 July 2017

திருமுருகாற்றுப்படையின் அமைப்பு


Siragu tamil2

தமிழ் நிலை பெற்ற மதுரையில் மூன்றாம் சங்கமான கடைச் சங்கம் அமைந்திருந்தது. இச்சங்கத்தில் புலவர்கள் பலர் இருந்துத் தமிழ் வளர்த்தனர். இக்கடைச் சங்ககாலத்து நூல்களுள் தற்போது கிடைத்திருப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சங்க இலக்கியங்கள் என்கிறோம். இந்தச் சங்க நூல்கள் செம்மொழிக் கால நூல்கள் ஆகும். செம்மொழிப் பண்புடைய நூல்கள் ஆகும். செம்மொழி வயப்பட்டதான இந்தப் பதினெட்டு நூல்களில் திருமுருகாற்றுப்படையும் ஒன்று.


பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையானதாகவும், இறைவணக்கப் பாடலாகவும் அமைந்திருப்பது திருமுருகாற்றுப்படையாகும். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் ஆவார். எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் முருகன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனை தெய்வமாக வணங்கி அவனுக்கு வெறியாட்டு என்னும் வணக்கம் செய்யும் முறை சங்க காலத்தில் இருந்துள்ளது. பரிபாடல் என்னும் எட்டுத்தொகை நூலில் செவ்வேள் பற்றிப் பாடப் பெற்ற எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களில் முருகனின் பிறப்பு, அவனின் வெற்றிச் சிறப்பு போன்ற பல செய்திகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வழிபடும் வழிபாடு மெல்ல வளர்ந்து வந்துள்ளதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment