Monday 24 July 2017

செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள்


Siragu sevvandhi2
பழமைபேசி என்னும் எழுத்தாளருக்குக் கிடைத்த கொழுகொம்பு கதைசொல்வது. பழமைபேசியின்  மொழியையே கடன் வாங்கி இதை விவரித்தால்… காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம்.  உயிர்த்தோம்; இருந்தோம்; மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை கடைபிடிக்க உதவும் கொழுகொம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்றால், பழமைபேசிக்கு அது அவரது எழுத்து. அதை அவர் திறம்பட செய்துள்ளதற்குச் சான்று அவரது ‘செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு. எழுதுவதே அவருக்கான தொடுப்பு. செவ்வந்தி பழமைபேசியின் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு.

அந்தியூர் பழமைபேசியின் “செவ்வந்தி” சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளைப் படிப்பவர்கள் எவரும் அவருக்குச் சற்றும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால், அவர் ஒரு அமெரிக்கத் தமிழர் என்பதையே நம்ப மாட்டார்கள். கொங்குதமிழ் கொஞ்சுகிறது அவரது கதைகளில். வட்டார பேச்சு வழக்கு வனப்புடன் ஆட்சி செய்கிறது அவரது வரிகளில். அவரது கதை மாந்தர்கள் யாவரும் அவர் நேரில் சந்தித்த ஏதோ ஒருவரின் ஆளுமையின் தாக்கம் என்பது  நமக்குத் தெளிவாகப் புரிவதால், அவர் எழுத்தின் வழி நாமும் கொங்குமண்டலத்தின் அழகிய அமைதியான வயல் வரப்புகளிலும், ஏரிக்கரையிலும், சிற்றூர் வீதிகளிலும் மண்வாசனையை நுகர்ந்து கொண்டே அவர் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டே நடக்கும் உணர்வைப் பெறுவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment