Wednesday 31 October 2018

வாக்குப் பதிவு எந்திரம்

Siragu vaakku endhiram1
வாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர். தங்கள் எண்ணத்தை அவர்கள் சமூக வலைத் தளங்களில் பதியவும் செய்கின்றனர். அதை எதிர்த்து வாதிட முடியாத காவிகள் / பார்ப்பனர்கள் ஒரேயடியாக அடித்துப் பேசுகின்றனரே ஒழிய, முறையான கருத்துகளை முன் வைப்பது இல்லை. “வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்றால் இந்த இடத்தில் காவிகளுக்கு வாக்கு குறைந்தது ஏன்? அந்த இடத்தில் வேறு கட்சிகள் வென்றது எப்படி?” என்று பல் முளைக்காத குழந்தை கூட கைகொட்டி நகைக்கும் படியான சொத்தை வாதங்களை முன்வைக்கின்றனர். இவை போன்ற வினாக்கள் எழுந்தால் அவற்றிற்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காகவே எந்திரத்தை விட்டுப் பிடித்து இருக்கலாம், அல்லது இந்த மாதிரி முடிவுகள் தான் இப்போது தேவை என்று நினைத்து எந்திரங்களை அதற்கு ஏற்ப வடிவமைத்தும் இருக்கலாம் என்பதைப் பல் முளைக்காத பச்சைக் குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு புறம் கிடக்கட்டும்.
மக்கள் முழு மனதுடன் எதிர்க்கும் இந்த வாக்குப் பதிவு எந்திரத்தை அதே வேகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை அல்லது எதிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சிகளே பெரும்பாலும் உள்ளன. அக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள் (வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும்) காவிகளின் இன்றைய வளர்ச்சியைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவாளுடைய ஒரே அச்சம் காவிகளின் கண் மண் தெரியாத வேகம் மக்களைப் புரட்சியின் பக்கம் துரத்தி விட்டு விடக் கூடாது என்பது தான். ஆகவே தேர் ஓடும் போது அது குறித்த திசையில் செல்வதற்காக முட்டுக் கட்டைகளைப் போடுவது போல் மிகவும் கவனமாக “எதிர்க்கிறார்கள்”.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 30 October 2018

சிபிஐ -ல், மத்திய பா.ச.க ஆட்சியின் தலையீடும், உச்சநீதிமன்ற உத்தரவும்.!


Siragu avasara kaala2
பா.ச.க கட்சியின், திரு மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாகவே, பலவித ஊழல் பிரச்சனைகளில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.  பணமதிப்பிழப்பில் கறுப்புப்பணம் திரும்பி வராததை மத்திய ரிசர்வ் வங்கியே தெரிவித்துவிட்டது. இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், வியாபம் ஊழலில், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறார்கள் என்பதுவும் நமக்கு  தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் தான், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக,  ரபேல் பற்றிய ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்திருக்கிறது. இந்த ரபேல் விமான ஊழல் ஒப்பந்தத்தின் மூலம், ஒரு லட்சத்து, 71 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிலைன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அவர்களே, நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை, முன்னாள், பிரான்ஸ் அதிபர் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் முத்த அதிகாரி, லொயிக் சிகலான் ஆகியோரின் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. எதிர்க்கட்சித்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் இதனை வெளிகொண்டுவந்து, அதற்கான போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 26 October 2018

அடுத்தது என்ன? (சிறுகதை)


Siragu aduththadhu enna1
காலை மணி ஐந்து. வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை விட்டு கிளம்பி விட்டார். மழையாக இருந்தாலும், புயலாய் இருந்தாலும், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றாலும் அவருக்கே உடம்பு சரியில்லையென்றாலும் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

சம்பந்தம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. டில்லி, மும்பாய், பூனே, போபால் நாட்டின் பல பாகங்களில் பணி செய்தாலும் பணி இறுதியில் மூன்று வருடங்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணி செய்து ஒய்வு பெற்றார். மிகவும் ஜாக்கிரதையானவர். அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு அதன் பின் பக்கம் போய் பத்திரமாய் உள்ளே போய்விட்டதா அல்லது பின் பக்கம் ஏதாவது ஓட்டை வழியாக விழுந்தது விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். எப்போதும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல் பேசி அசத்துவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 25 October 2018

கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன்


siragu-naanjil naadan1
நாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத் துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.

மனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள் பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும் விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின் விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர் இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும் தொனிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 23 October 2018

முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை

Siragu muththollaayiram2
உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது.

இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந்தர்களை எண்ணி அவர்கள். உலா வரும் போது அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் பெண்களின் மொழியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையைத்தான் பின்னாளில் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார் நாயன்மார் கையாண்டு உள்ளனர், கடவுளை தலைவனாக நினைத்து உள்ளம் உருகி பாடல்கள் எழுதினர் என்பது அறிஞர்களின் கருத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 19 October 2018

தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)

அர்ச்சனைகள்

                                         
sirau maanudam1

அந்தநாள் கனிந்து வந்து கொண்டிருக்கிறது
ஆமாம், அது வெகுதொலைவில் இல்லை.

எந்தநாளில் எவரெழுதி வைத்த சாத்திரமோ
எந்தநாளில் எவருக்காக எவரெவரோ எழுதி வைத்த நீதியோ
எந்தநாளில் எவரெவர் ஒடுக்கப்பட வேண்டுமென
எவனெவனோ கடைபிடித்த சடங்குகளோ.

அந்தநாளில் அவரெழுதி வைத்த
சாத்திரத்தை, நீதியை, சடங்குகளை
குருதிக் குளியலால் இனியும் நாங்கள்

ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/

Thursday 18 October 2018

பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்

 Siragu Andy_Warhol_1975

மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும் காண்பதைக் கண்டவாரோ; அல்லது மக்களறிந்த தொன்மக் கற்பனைக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தங்களது கற்பனையில் உருவாக்கி இருபரிமாண ஓவியங்களாகவும் முப்பரிமாண சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் முறை மனித வரலாற்றில் கலை என விவரிக்கப்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒலியற்ற எழுத்துவடிவற்ற முறையில் மொழி எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து ஒரு செய்தியை வாழும்காலத்தின் மக்களுக்கும் எதிர்காலத்தின் மக்களுக்கும் சொல்லிச் செல்வது. குகை மனிதர்கள் சுவரில் தீட்டிய வெள்ளை சிவப்புவண்ணக் கீறல்களோ அல்லது கோயில்களில் காணும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படை நோக்கம் காட்சித் தொடர்பு (Visual communication). கலைஞர் ஒருவரின் தனித்தன்மை அவரது படைப்பில் மிளிர்ந்து அவரது கருத்து மக்களைக் கவர்ந்தால் அவர் புகழ் பெற்ற கலைஞர் என்ற பெயர் எடுக்கிறார். எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதினாலும் ஒருசிலரே அழகு நயத்தின் அடிப்படையில் கலைஞர் என்றும் பாவலர் என்றும் இலக்கிய உலகில் புகழ் பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
காலந்தோறும் ஊடகங்கள் மாறி வந்துள்ளன. சிற்பங்களும் ஓவியங்களும் கால எல்லை, மொழி எல்லை கடந்து அவை சொல்லும் செய்தி என்னவென்று உலகின் பல மூலைகளில் உள்ள மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தது; அதாவது படத்துடன் ஒரு சுருக்கமான பொருள் விளக்கக் கையேடு கொடுக்கத் தேவையற்ற நிலையில், இயல்பை விவரிக்கும் படைப்புகள் (representational visual communication) அவை. அதுவரை கலையின் கருத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் 19 நூற்றாண்டில் வேறு கோணத்தில் திரும்பியது. ஒரு கலைஞர் தனது கருத்தை எவ்வாறு தனது பார்வையில் விவரிக்கிறார் என்ற கோணத்தில் கலை திரும்பிய பொழுது; அந்தக் கருத்தாக்கத்தை கலைஞர் தனது படைப்பில் வெளிப்படுத்தும் உணர்வுக்கு (abstract expressionism) முக்கியத்துவம் ஏற்பட்டு, கலை மரபு என்ற எல்லை கைவிடப்பட்டு நவீனக்கலை (Modern art) என்பதன் காலம் துவங்கியது. ஐரோப்பா நவீனக்கலையின் தாயகம், 19 நூற்றாண்டின் மத்தியில் இருந்து சற்றொப்ப 1970 வரை, ஒரு நூற்றாண்டின் கால அளவிற்கு, பல கலைஞர்களாலும் பல ஊடகங்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பென்பது பார்வையாளரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிலையை கலைப்படைப்புகள் அடைந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 17 October 2018

ஆளுநரும், முன்னுக்குப் பின் முரணான செய்திகளும்!


Siragu Banwarilal purohit1
கடந்தவாரம் 6-ந்தேதி, நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில், மாண்புமிகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், உரையாற்றியபோது, “அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிதான் துணை வேந்தர்களுக்கான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த உரைக்குப்பிறகு, தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்கள் தங்கள் சந்தேகங்களை எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும், இதனை தெளிவாக வெளிக்கொண்டுவர வேண்டும். ஆளும் அதிமுக அரசு இவ்விசயத்தில், பெருமளவில் ஊழல் புரிந்திருக்கிறது. ஆளுநரே குற்றம் சாட்டுமளவிற்கு உள்ள இந்த ஊழலை மக்கள் மத்தியில் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 October 2018

இலஞ்சம் (கவிதை)


Siragu corporate5

எங்கு பிறக்கிறது
இந்த இலஞ்சம்
பிறந்த குழந்தைக்கு
கையில் பணம்
“நல்ல புடிமானம்
பெற்றோருக்கு சொத்து சேர்ப்பான்”
கோயில் உண்டியலில்
கடவுளுக்கு காணிக்கை
“நினைத்த காரியம் நிறைவேறும்”

திருமண விழாவில்
மொய் என்ற அன்பளிப்பு
“உறவினர்கள் மதிக்க வேண்டாமா?”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி


siragu keezhadi1
புதுப்புது நூல்கள் பல நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள் படைக்கின்றனர். அந்த நோக்கத்தைக் கொண்டும், அதை அந்நூலாசிரியர் வெளிப்படுத்தும் திறமையைக் கொண்டும் அந்நூலின் சிறப்பு அமைகிறது. அவ்வகையில் “கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி” எனும் இந்நூல் நோக்கத்திலும் அதை வெளிப்படுத்தும் திறமையிலும் மிக உயர்வானது.

இந்நூல் தமிழ் இனத்தின் தொன்மையை மிகத் தெளிவாகவும், அழகாகவும் அதே சமயம் எளிமையாகவும் பறை சாற்றுகிறது. ஆகவே தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் இந்நூலை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். அது மட்டுமா? மறைந்து கிடக்கும் உண்மை வெளி வருகின்றது என்றால் அதை வரவேற்க உலக மக்கள் அனைவருமே கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர முயலும் கீழடி அகழாய்வு பற்றி முழுவதுமாக விளக்குவதால் உலக மக்கள் அனைவருமே வரவேற்க வேண்டிய ஒரு நூலாகும். ஆகவே வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது மனித குலததிற்குச் செய்யும் உண்மையான வரலாற்றுத் தொண்டாக அமையும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 October 2018

மொழியாக்கம் எனும் கலை!


siragu translate 2
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்! மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை என்கிறார் The Art of Translation நூலின் ஆசிரியர் தியோடோர் சேவொரி. தமிழ் மொழியை பொறுத்தவரையில் அது இன்றளவும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு வரும் செம்மொழி, சில நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் பக்தி மொழி என்ற நிலையில் மட்டுமே சுருங்கிவிட்ட அவல நிலையில் இருந்து, மீட்டெடுத்து அறிவியல் கருத்துகள் ஒரு மொழியில் உருவாக்கப்படும்போது தான் மக்களின் மொழியாக மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறும் மொழியாக நிலைக்கும் என்பதை வலியுறுத்திய இயக்கம் திராவிடர் இயக்கம். மேட்டிமை தமிழறிஞர்களின் வீட்டுப் பரனில் உறங்கிக்கிடந்த திருக்குறளைப் பொதுமறையாக மக்களிடம் தவழ விட்ட தலைவர் தந்தை பெரியார்! அன்று மக்களின் மொழியாக தமிழை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மொழிபெயர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் மட்டுமல்ல பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுசேர்க்கின்றபோது, பல மொழி பேசும் மக்களின் அனுபவங்களை நம் மொழியில் படித்து உணர முடிகின்றது. குறிப்பாக மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அவர்களின் அரசியல் சூழல், அந்த மக்களின் வாழ்வியல் என பலவற்றை படித்தறிந்து ஒப்புநோக்கி அறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பா.ச.க ஆட்சியின் தோல்வியும், தற்போதைய ரபேல் ஊழலும்!


Siragu avasara kaala2
மத்தியில் பா.ச.க-வின், மோடி ஆட்சி வந்ததிலிருந்தே, நாட்டின் வளர்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டே வந்து, இன்று முழுவதும் தோல்வியை கண்டிருக்கிறது என்பது அனைவராலும்  ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை.  ஊழலை ஒழிக்கப்போகிறோம், கள்ளப்பணத்தை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மிகப்பெரிய ஊழலை செய்து முடித்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில்.! இறுதியில், அதன்முலம் அவர்களால் மீட்கமுடிந்தது சொற்ப அளவே.!
இதனையடுத்து, அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, ரூ. 73/- என  மிகவும் சரிந்துள்ளது.  மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அன்றாடம், சாமானிய மக்கள் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு எடுத்துக்கொண்டோமானால், தேர்தலின்போது சொன்னபடி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டமாதிரி, பாதியளவு கூட வழங்க முடியவில்லை. படித்த பட்டதாரிகளை, பகோடா வியாபாரம் செய்யுமாறு மோடி அவர்களே ஆலோசனை கூறினார். மேலும், மத்தியப்பிரதேசத்தில்,  பா.ச.க ஆட்சியில் ஏற்பட்ட வியாபம் ஊழல், அதி பயங்கரமானது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல். இதில் தொடர்புடையவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், விசாரிக்க வருபவர்கள் என பலரை மரணமடைய வைத்திருக்கிறது. பலரின் மர்மமான மரணத்திற்கு, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து,  பா.ச.க-வின் இந்த 4 ஆண்டு ஆட்சியில், வாராக்கடன் தள்ளுபடி மட்டும் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/

Thursday 4 October 2018

‘பாரதி’ கவிதை (கவிதை)


siragu bharadhiyar1

பூத்திருக்கும் பூவிற்கும்
உனக்கும்
எத்தனை ஒற்றுமை?
பூவின் வாழ்நாளும்
புவியில் நீ
வாழ்ந்த நாளும்
சிலவே.
தென்றலும் நீயும்
ஒன்றுதான்,
வாடியோர் வாட்டம்
தீர்ப்பதில்,
தீயும் நீயானாய்
சாத்திரம் பேசுவோர்
மூடத்தனம் சாடி,

நதியாய் ஓடி
நாட்டினர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 3 October 2018

பாச பேதம் (சிறுகதை)


father daughter dispute conflict
மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று சங்கரி சிந்தித்துக் கொண்டே மருத்துவமனையில் அவள் கணவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். ”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”
”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.
அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம்” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..
”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி.

மருத்துவர் சிற்றம்பலத்தின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது, ”இப்போது அவருக்கு எப்படியிருக்கு மருத்துவர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 October 2018

தமிழாக வாழ்ந்த அண்ணலுக்கு அகவை தொண்ணூறு


siragu thamizhannal 2
சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய பல இலக்கியவாணர்களைக் கொண்ட பேரூர் இவ்வூராகும். செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூலினை எழுதிய சோம.லெ, தினமணியின் ஆசிரியராக விளங்கிய சம்பந்தம் (இராம.திருஞானசம்பந்தம்), முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இயங்கு சக்தியாக விளங்கிய லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் போன்ற பலர் பிறந்த மண் நெற்குப்பையாகும்.
அங்குப் பிறந்த இராம.பெரியகருப்பன் என்ற தமிழண்ணல் தமிழ் ஆய்வுலகிலும், ஒப்பிலக்கியத்துறையிலும், சங்க இலக்கியத் தனித்திறன் ஆய்விலும் சிறந்து விளங்கியவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை அவர் வாழ்ந்த ஆண்டுகளைப் போலவே எண்பத்தெட்டினைத் தொடும்.

தமிழண்ணல் செட்டிநாட்டு வழக்கப்படி இராமசாமிச் செட்டியார் கல்யாணி ஆச்சி ஆகியோருக்குப் பிள்ளையாக வந்தவர். தமிழ் பண்டிதர் பட்டம் பெற்று அதன் பின் பொருளாதாரப் பட்டம் பெற்று அதன்பின் தமிழ் உயர்கல்வி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர். அடிப்படையில் இருந்து உயர்ந்தவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, பின்னாளில் தேசியப் பேராசிரியராக முன்நின்றவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 October 2018

புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து


siragu u.v.swaminatha iyer2
எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாக இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை.
உ.வே.சாமிநாத ஐயர்:
siragu u.v.swaminatha iyer1

புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு 1894 இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும் மறுபதிப்புக்களாக மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும் இன்றுவரை வந்துள்ளன. பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து, அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி, பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிட்டு, சரியான வரிகளைக் கண்டறிந்து அச்சுப் பதிப்பாக வெளியிட்ட உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க வழியில்லை. முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும், நான்காவது பதிப்பு 1950 அவர் மகனாலும், பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.