Monday 15 October 2018

மொழியாக்கம் எனும் கலை!


siragu translate 2
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்! மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை என்கிறார் The Art of Translation நூலின் ஆசிரியர் தியோடோர் சேவொரி. தமிழ் மொழியை பொறுத்தவரையில் அது இன்றளவும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு வரும் செம்மொழி, சில நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் பக்தி மொழி என்ற நிலையில் மட்டுமே சுருங்கிவிட்ட அவல நிலையில் இருந்து, மீட்டெடுத்து அறிவியல் கருத்துகள் ஒரு மொழியில் உருவாக்கப்படும்போது தான் மக்களின் மொழியாக மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறும் மொழியாக நிலைக்கும் என்பதை வலியுறுத்திய இயக்கம் திராவிடர் இயக்கம். மேட்டிமை தமிழறிஞர்களின் வீட்டுப் பரனில் உறங்கிக்கிடந்த திருக்குறளைப் பொதுமறையாக மக்களிடம் தவழ விட்ட தலைவர் தந்தை பெரியார்! அன்று மக்களின் மொழியாக தமிழை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மொழிபெயர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் மட்டுமல்ல பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுசேர்க்கின்றபோது, பல மொழி பேசும் மக்களின் அனுபவங்களை நம் மொழியில் படித்து உணர முடிகின்றது. குறிப்பாக மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அவர்களின் அரசியல் சூழல், அந்த மக்களின் வாழ்வியல் என பலவற்றை படித்தறிந்து ஒப்புநோக்கி அறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment