Wednesday 31 October 2018

வாக்குப் பதிவு எந்திரம்

Siragu vaakku endhiram1
வாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர். தங்கள் எண்ணத்தை அவர்கள் சமூக வலைத் தளங்களில் பதியவும் செய்கின்றனர். அதை எதிர்த்து வாதிட முடியாத காவிகள் / பார்ப்பனர்கள் ஒரேயடியாக அடித்துப் பேசுகின்றனரே ஒழிய, முறையான கருத்துகளை முன் வைப்பது இல்லை. “வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்றால் இந்த இடத்தில் காவிகளுக்கு வாக்கு குறைந்தது ஏன்? அந்த இடத்தில் வேறு கட்சிகள் வென்றது எப்படி?” என்று பல் முளைக்காத குழந்தை கூட கைகொட்டி நகைக்கும் படியான சொத்தை வாதங்களை முன்வைக்கின்றனர். இவை போன்ற வினாக்கள் எழுந்தால் அவற்றிற்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காகவே எந்திரத்தை விட்டுப் பிடித்து இருக்கலாம், அல்லது இந்த மாதிரி முடிவுகள் தான் இப்போது தேவை என்று நினைத்து எந்திரங்களை அதற்கு ஏற்ப வடிவமைத்தும் இருக்கலாம் என்பதைப் பல் முளைக்காத பச்சைக் குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு புறம் கிடக்கட்டும்.
மக்கள் முழு மனதுடன் எதிர்க்கும் இந்த வாக்குப் பதிவு எந்திரத்தை அதே வேகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை அல்லது எதிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சிகளே பெரும்பாலும் உள்ளன. அக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள் (வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும்) காவிகளின் இன்றைய வளர்ச்சியைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவாளுடைய ஒரே அச்சம் காவிகளின் கண் மண் தெரியாத வேகம் மக்களைப் புரட்சியின் பக்கம் துரத்தி விட்டு விடக் கூடாது என்பது தான். ஆகவே தேர் ஓடும் போது அது குறித்த திசையில் செல்வதற்காக முட்டுக் கட்டைகளைப் போடுவது போல் மிகவும் கவனமாக “எதிர்க்கிறார்கள்”.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment