Tuesday, 25 October 2016

ஒரு தீக்காடு: உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்..


siragu-image2

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல் ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதான கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங்கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதெல்லாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழியவழிய ஆரத் தழுவிக்கொள்ளமாட்டோமே…?!!

உயிர்தானே? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே? கொஞ்சம் இரக்கமோ மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின் மனிதரை மனிதரிப்படி சாதியென்றும் மதமென்றும் மேலோரென்றும் கீழோரென்றும் பிரித்து மேல்கீழ் வகுத்து ஒருவரை ஒருவரிப்படி வருத்தப்பட வைப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மனப்பாங்கை மாற்றுவோம்

siragu-image1

எல்லாவற்றிலும் பிடிவாதத்தை விதைத்துவிட்டால் பல நேரங்களில் ஏமாற்றங்களை அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சில இடங்களில் வாழ்க்கை அதன் போக்கில் நம்மை இழுக்க முற்படும் போது அதற்கு இசைந்து கொடுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அதன் மூலமும் நாம் நினைத்தது நினைத்ததை விட சிறப்பாகக் கிடைத்திருக்கும். இது எல்லாருக்கும் ஏதோவொரு வகையில் நடந்திருக்கும். இப்படி இருப்பேன் என்றால் பரவாயில்லை, ஆனால் இப்படித்தான் இருப்பேன் என்று இறுமாப்போடு இருப்பது என்றுமே கூடாது.


பலமுறை ஒரு செயலைச் செய்து, அந்தச் செயலிற்குத் தேவையான முடிவு எட்டப்படவில்லை என்றால் அணுகுமுறையை மாற்றவேண்டுமே அன்றி செயலை மாற்றுதல் கூடாது. ஒரேவித அணுகுமுறையை எந்த ஒரு விசயத்திலும் கையாளுதல் கூடாது. ஒன்று சரிப்பட்டுவராது என்று தெரிந்தவுடன் அதை எதிர்கொள்ள மாற்று வழிகளைத் தான் ஆராயவேண்டுமே தவிர, மாற்று செயல்களை அல்ல. நான் என்ன கூற வருகிறேன் என்றால்  பாதையில் நடக்கும் பொழுது கால்களில் முள் குத்தினால் காலணிகளை அணிந்து நடக்க வேண்டும், அதை விட்டுவிட்டு பாதையையே மாற்ற முடியாது. இல்லாவிட்டால் திருச்சிக்குப் போகவேண்டியவன் திருப்பதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய கதையாகிவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2


siragu-manimegalai

புண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன் தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள் வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள் அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 24 October 2016

குடும்பத்தினரால் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட மனநிலை பாதித்தவர்களின் அவலம்


நுனி நாக்கு ஆங்கிலம், புரியாத மொழி பேசி சுற்றித்திரியும் மனநிலை பாதித்தவர்கள்… குடும்பத்தினரால் வாகனங்கள் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட அவலம்
தஞ்சாவூர்:
siragu-mananalam1


இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள், கொடூர கொலையை செய்தவர்களை விட மோசமானவர்கள் நாட்டில் இருக்க முடியுமா? உண்டு… உண்டு… அப்படி இருக்கின்றனர்… ஈனப்பிறவிகள் என்றுதான் கூற வேண்டியுள்ளது.
தங்களைப் பெற்ற பெற்றோர்… தங்கள் கூடப் பிறந்தவர்களை அனாதையாக விட்டுச் செல்லும் கல் மனம் கொண்டவர்கள் பற்றி தெரிய வந்த விசயமே இந்த கட்டுரையின் வடிவம் ஆகும்.

சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், ஓசூர், கோயம்புத்தூர், மதுரை என மாவட்ட தலைநகரங்களை நீங்கள் பேருந்துகளிலோ, வாகனங்களிலோ கடக்கும்போது பார்த்திருக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

விளிம்புநிலை வாழ்விலும், எழுத்துலகில் தடம் பதிக்கும் கட்டுமான தொழிலாளி


siragu-kattida-thozhilaali

மாவீரன் வாளை விடவும், மைத்தூரிகை கூர்மையானது என்பார்கள். எழுத்து அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆயுதம். எழுத்துப் பணியையே இடைவிடாது செய்து கொண்டு சாதிப்பவர்கள் ஒருபுறம் இருக்க, தனது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் எழுதிக் குவிப்பவர்களும் உண்டு. அதிலும் விளிம்பு நிலையில் நகரும் வாழ்விலும் கூட எழுத்துக்கு நேரம் ஒதுக்கி சாதிப்பவர்களும் குமரி மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கவிதைச் சோலை(நீதிக்கு இங்கு நீதியில்லை!, நீயும் வெற்றியாளனே!)


நீதிக்கு இங்கு நீதியில்லை!


Siragu-eelam

இவர்கள் கண்களுக்கு
தொடர்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகள்
தெரிவதேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
கண்களே இல்லாதவர்களிடம்!
இவர்கள் காதுகளுக்கு
எங்கள் அவலக்குரல்கள்

கேட்பதேயில்லையா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21582

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் – இறுதிப் பகுதி


(III) சித்திரபுத்திரன் விவாதங்கள் – மதங்கள் பற்றிய விளக்கம்:
siragu-angadha-writer31. சிக்கலான பிரச்சினை: ஒரு ஆத்திகனுக்கும் பகுத்தறிவாதிக்கும் இடையே  சமயங்களையும் கடவுளரையும் குறித்த ஓர் உரையாடல் நடைபெறுகிறது.   மதங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இருப்பது ஒரே கடவுள் என்று சொன்னால் இத்தனை விதமான மதங்களையும், கடவுளரையும் ஒரு  கடவுளே படைக்க வேண்டிய காரணம் என்ன? என்ற பகுத்தறிவுவாதியின் கேள்வியினால் குழப்பமடைகிறார் ஆத்திகன். கடவுளின் மகன் என்று சொல்வதற்கு, கடவுளின் தூதன் என்று சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, வேத நூல்கள் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம்?, கடவுள் வேத நூல்களைப் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?, யாரோ சொன்னார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாமா?, அப்படியானால் நான் ஒரு கடவுள் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளர் இது போல இந்து, புத்த, கிறித்துவ, முகம்மதிய, பொதுவாக என ஒவ்வொரு மதக் கோட்பாட்டையும் குறித்து பற்பலக் கேள்விகள் கேட்கும்பொழுது; பதில் சொல்லத் தெரியாதபொழுதெல்லாம், “இது ஒரு சிக்கலான பிரச்சினை, பெரியவர்களை கலந்தாலோசித்து பதில் சொல்கிறேன்” என்று பதில் சொல்லாமல் ஆத்திகன் நழுவுவது படிப்பவருக்கு புன்முறுவலை வரவழைக்கும் விதம் அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.