Friday, 4 November 2016

ஏகாந்த வீணை… மயக்கும் இசை… வீணை செய்வதில் கைதேர்ந்த தஞ்சை கலைஞர் ராமலிங்கம்…


siragu-egaandha-veenai5
தஞ்சாவூர்:
காணும் பொருட்களில் கலை வண்ணம் கண்ட ஒரே ஊர் தஞ்சைதான். இங்கு உருவாக்கப்படும் வீணைகளுக்கு உலக அளவில் பெரும் புகழ் உண்டு. அந்த வீணையில் அற்புதமான வேலைப்பாடுகள் அமையப்பெற்று இருக்கும்.
அப்படிப்பட்ட வீணையை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலர் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கொண்டு வருவதில் திறமை வாய்ந்தவர் தஞ்சையை சேர்ந்த ஆர்.ராமலிங்கம். இவருக்கு வயது 75.
வாருங்கள்… இவர் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோயில்கள் சூழப்பட்ட தஞ்சை கர்நாடக இசையை வளர்த்த நகரம் என்பதையும் அறிந்து கொள்ள

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Tuesday, 1 November 2016

இரயில் சிநேகிதம்


siragu-train-friends3

பயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி, எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத் தரும். தனியே செல்லும்போது இதற்கான கால அவகாசம் அதிகம். உடன் பயணிக்கும் உறவினர்கள் / நண்பர்களுடன் உரையாடினாலும் அமைதியாகச் சிந்திக்கும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் நெருக்கமானவர்களுடனும் அறிமுகமானவர்களுடனும் மட்டும் பயணம் செய்வதில்லை. முன் பின் அறிமுகமில்லா முகங்கள் பலவற்றைக் கடந்து வருகிறோம். இரயில் சிநேகிதம் என்று பொதுவில்குறிப்பிட்டாலும் பயணங்கள் ஏற்படுத்தும் நட்பையே இங்கே குறிப்பிடுகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 31 October 2016

மருத்துவத்தில் நோய் கண்டறிய உதவும் கணினியின் செயற்கை நுண்ணறிவு

siragu-artificial-intelligence1

தனக்கு நோய், உடல்நலக் குறைவு என முறையிட்டு நோய் தீர்க்க வேண்டி வருபவர்களுக்கு, எந்த ஒரு மருத்துவ அறிவியல் பின்புலமும் இன்றி வேப்பிலை அடித்து, விபூதி பூசி, மந்திரித்து, தாயத்து, கயிறு என்று கட்டிவிட்டு தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இன்னமும் உலகில் ஒருபுறமிருக்க; நோயைக் கண்டறிந்து மருத்துவர்களுக்கு உதவி செய்யும் கருவியாகப் பொறுப்பேற்றுள்ளது கணினியின் செயற்கை நுண்ணறிவுத் திறன். ஆர்ட்டிஃபிசியல் இண்ட்டலிஜென்ஸ் — Artificial Intelligence (AI) எனப் பொதுவாக அறியப்படும் கணினியின் “செயற்கை நுண்ணறிவு”என்பது முதன் முதலாக இரு மாதங்களுக்கு முன்னரே (ஆகஸ்ட் 2016) மனித மருத்துவர்களால் சரியாகக் கண்டறிய இயலாத பொழுது ஒரு பெண்மணியின் நோயைக் கண்டறிந்து சொல்லி, அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.
siragu-artificial-intelligence3


‘லுகீமியா’ எனப்படும் வெள்ளை அணு – இரத்தப் புற்று நோய் கொண்ட ஜப்பானியப் பெண்மணியின் நோய் என்னவென்று அறியாமல், அவருக்கு அளிக்கப்படும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லையே என அவரது ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, அவர்களது கணினியின் செயற்கை நுண்ணறிவு இப்பெண்மணிக்கு “லுகீமியா” என்று கண்டறிந்து உதவியது. இது மிகவும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் உலகப் புகழ்பெற்ற ஐ.பி.எம் கணினி நிறுவனம் உருவாக்கிய வாட்சன் என்ற கணினியின் செயற்கை நுண்ணறிவு (IBM’s artificial intelligence (AI) system, Watson) நோயை இரத்தப் புற்றுநோய் என்று சரியாகக் கண்டறிந்து சொல்வதற்கு முன்னர், மருத்துவக் குழுவினர் மற்றொரு வகைப் புற்றுநோயான தீவிரமடைந்த நிலையில் உள்ள ‘மைலாய்டு லுகீமியா’ (acute myeloid leukemia) என்று முடிவு செய்து, அதற்கேற்ற மருத்துவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது சிகிச்சை அந்தப் பெண்மணிக்கு உடல்நலத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பிறகு, வாட்சன் இரத்தப் புற்று நோய் என்று உறுதி செய்த காரணத்தால் மருத்துவர்கள் அதற்கேற்ற சிகிச்சை முறைக்கு மாறிவிட, அந்தப் பெண்மணியும் உயிர் பிழைத்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 27 October 2016

உலகின் துயரம் !(கவிதை)


Siragu-eelam
தூர தேசத்தவன் எதிரே
அசரீரி ஒன்று தோன்றி
“என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேள்
விடையளிக்கிறேன்” என்றது

இவ்வுலகின் செல்லாக்காசு
எதுவோ?
அவனும் கேட்டான்


“ஈழத்தமிழனின் உயிரும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21916

Tuesday, 25 October 2016

ஒரு தீக்காடு: உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்..


siragu-image2

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல் ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதான கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங்கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதெல்லாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழியவழிய ஆரத் தழுவிக்கொள்ளமாட்டோமே…?!!

உயிர்தானே? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே? கொஞ்சம் இரக்கமோ மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின் மனிதரை மனிதரிப்படி சாதியென்றும் மதமென்றும் மேலோரென்றும் கீழோரென்றும் பிரித்து மேல்கீழ் வகுத்து ஒருவரை ஒருவரிப்படி வருத்தப்பட வைப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மனப்பாங்கை மாற்றுவோம்

siragu-image1

எல்லாவற்றிலும் பிடிவாதத்தை விதைத்துவிட்டால் பல நேரங்களில் ஏமாற்றங்களை அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சில இடங்களில் வாழ்க்கை அதன் போக்கில் நம்மை இழுக்க முற்படும் போது அதற்கு இசைந்து கொடுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அதன் மூலமும் நாம் நினைத்தது நினைத்ததை விட சிறப்பாகக் கிடைத்திருக்கும். இது எல்லாருக்கும் ஏதோவொரு வகையில் நடந்திருக்கும். இப்படி இருப்பேன் என்றால் பரவாயில்லை, ஆனால் இப்படித்தான் இருப்பேன் என்று இறுமாப்போடு இருப்பது என்றுமே கூடாது.


பலமுறை ஒரு செயலைச் செய்து, அந்தச் செயலிற்குத் தேவையான முடிவு எட்டப்படவில்லை என்றால் அணுகுமுறையை மாற்றவேண்டுமே அன்றி செயலை மாற்றுதல் கூடாது. ஒரேவித அணுகுமுறையை எந்த ஒரு விசயத்திலும் கையாளுதல் கூடாது. ஒன்று சரிப்பட்டுவராது என்று தெரிந்தவுடன் அதை எதிர்கொள்ள மாற்று வழிகளைத் தான் ஆராயவேண்டுமே தவிர, மாற்று செயல்களை அல்ல. நான் என்ன கூற வருகிறேன் என்றால்  பாதையில் நடக்கும் பொழுது கால்களில் முள் குத்தினால் காலணிகளை அணிந்து நடக்க வேண்டும், அதை விட்டுவிட்டு பாதையையே மாற்ற முடியாது. இல்லாவிட்டால் திருச்சிக்குப் போகவேண்டியவன் திருப்பதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய கதையாகிவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2


siragu-manimegalai

புண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன் தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள் வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள் அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.