Thursday, 19 January 2017

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி


Siragu-culture5

மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு, அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். 

ஆனால் அத்தகைய புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுவனவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால் தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம் முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 18 January 2017

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்


Siragu manusangadaa1

21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த சூழ்நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது தன் கவிதையை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக ஏந்தத் தந்தவர். அவர் கவிதைகள் வெறும் சொற்கோர்வை அன்று தீப்பிழம்புகள். தன் தொடக்க காலக் கவிதைகளை கவிஞர் இளவேனில் நடாத்திய கார்க்கி இதழில் எழுதினார் இன்குலாப்.

இசுலாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளின் இறுதி வரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். அதனால் தான்,
” சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் ” என்ற சமயம் கடந்து அவரால் கவி புனைய முடிந்தது.

தன் கவிதைகளைப் பற்றி இன்குலாப் அவர்கள் இப்படித்தான் கூறுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!


newsletter-nov-26-3

மார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் எழுப்பும் மரபு பக்தி மரபு. பாரத மாதாவைத் துயில் எழுப்பிய மரபு பாரதியின் மரபு. உறங்கும் தமிழரை தமிழ்த்தாய் கொண்டு எழுப்பும் நன்மரபு ஒன்றினைத் தோற்றுவிக்கிறார் மயிலம் ஆ.சிவலிங்கனார். தமிழ்த்தாய்க்கு அவர்  திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பத்துப் பாடல்களை உடைய இத்திருப்பள்ளி எழுச்சி  திறம் இன்றைக்குத் தமிழைத் தமிழரை விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டது.


தொல்காப்பிய உரைவளம் கண்டவர் ஆ.சிவலிங்கனார். தமிழிலணக்கதின் தன்னிகரற்ற கணக்கர் அவர். அவர் மயிலம் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர். அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலா வந்தவர். அவர் மென்மையானத் தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரின் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆராய்ச்சி முக்கியமானது. அவரின் தமிழ் இலக்கணச் சிந்தனைகள் தமிழ் கற்போருக்கு எளிய வழிகாட்டிகள். தமிழ் இலக்கணத்தையும், தமிழ் உயர்வையும் எண்ணிய அவரின் உள்ளம் மேன்மையானது. அவர் பாடிய தமிழ்த்தாய்த் திருப்பள்ளி எழுச்சி தமிழர் உறங்கும் நேரமெல்லாம் பாடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா


Siragu pongal1

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.’
என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் எல்லோரும் உழவர்கள் பின்னே சென்று கொண்டிருப்பவர்கள் தான்.!

உழவு இல்லையேல் உணவு இல்லை, உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரீக வாழ்வு நோக்கி நகர்த்தியிருக்கிறது. காட்டுவாசிகளான நம் ஆதி மூதாதையர்கள் ஆற்றங்கரையோரமாய் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதினால் தான்.!


தமிழர்களாகிய நாம், நமது வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் விழா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் வெல்லத்துடன் சேர்த்து பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 12 January 2017

உடல்நலத்திற்கு நன்மையளிப்பதும் தொடர்வதற்கு எளிதானதுமான உணவுமுறையே சிறந்த உணவுமுறை


siragu-diet2

ஒவ்வொரு புத்தாண்டும் உடல் எடையைக் குறைப்பதற்கான செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், உடல்நலத்திற்குக் கேடான தீய பழக்கவழக்கங்களை கைவிடுவதற்கும் உறுதி மொழிகளை எடுத்துக் கொள்வது பலருக்கு வழக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மாறிப்போனாலும், தொடர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது மிகச் சிலரே.


படிப்படியாகத் திட்டங்களை செயல்படுத்தாமல் அதிக உடற்பயிற்சி, அடியோடு உணவைக் குறைப்பது போன்ற யாவற்றையும் ஒரேநாளில் செய்ய நினைத்து, உடலும் மனமும் அயர்ச்சியுற்று தளர்ந்து போவதே இத்தோல்விக்குக் காரணம். இப்பிழையைத் தவிர்க்க மருத்துவர்களும், பயிற்சியாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆர்வக் கோளாறால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதும், பிறகு திட்டங்களைக் கைவிடுவதும், மீண்டும் அடுத்த ஆண்டு திட்டமிடுவதும் வாடிக்கையாக இருப்பதே சராசரி மக்களின் வாழ்க்கை. அமெரிக்காவில் 50% அதிகமானவர்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறார்கள் என்றும், உடல் பருமன் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் “காலப் கருத்தாய்வு” (Gallup Poll) தெரிவிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 11 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7


siragu-panjathandhira-kadhaigal

இரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா? ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.

காகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 10 January 2017

பெண் விடுதலையும், அதன் அரசியலும்


siragu-pennukku-edhiraana1

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், பெண்களின் நிலைமை முழுதும் சீரடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாமும் பல ஆண்டுகளாக பெண் விடுதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்னே, பெண்களை மேலே வரவிடாமல், அழுத்தி, மண்ணுக்குள் புதைக்கும் ஆணாதிக்க அரசியல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.!


அதுவும் சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலில் பலியாவது பெண்கள் தான். பெண்களுக்கு படிப்பு ஒரு அரண் என்று சொல்லி படிக்க வைக்கிறோம். ஆனால் அந்த படிப்பு கூட பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பது தான் ஒப்புக்கொள்ள வேண்டிய வருந்தத்தக்க உண்மை.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.