Wednesday 18 January 2017

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்


Siragu manusangadaa1

21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த சூழ்நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது தன் கவிதையை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக ஏந்தத் தந்தவர். அவர் கவிதைகள் வெறும் சொற்கோர்வை அன்று தீப்பிழம்புகள். தன் தொடக்க காலக் கவிதைகளை கவிஞர் இளவேனில் நடாத்திய கார்க்கி இதழில் எழுதினார் இன்குலாப்.

இசுலாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளின் இறுதி வரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். அதனால் தான்,
” சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் ” என்ற சமயம் கடந்து அவரால் கவி புனைய முடிந்தது.

தன் கவிதைகளைப் பற்றி இன்குலாப் அவர்கள் இப்படித்தான் கூறுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment