Wednesday 11 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7


siragu-panjathandhira-kadhaigal

இரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா? ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.

காகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment