Wednesday 18 January 2017

தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!


newsletter-nov-26-3

மார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் எழுப்பும் மரபு பக்தி மரபு. பாரத மாதாவைத் துயில் எழுப்பிய மரபு பாரதியின் மரபு. உறங்கும் தமிழரை தமிழ்த்தாய் கொண்டு எழுப்பும் நன்மரபு ஒன்றினைத் தோற்றுவிக்கிறார் மயிலம் ஆ.சிவலிங்கனார். தமிழ்த்தாய்க்கு அவர்  திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பத்துப் பாடல்களை உடைய இத்திருப்பள்ளி எழுச்சி  திறம் இன்றைக்குத் தமிழைத் தமிழரை விழிப்படையச் செய்யும் வல்லமை கொண்டது.


தொல்காப்பிய உரைவளம் கண்டவர் ஆ.சிவலிங்கனார். தமிழிலணக்கதின் தன்னிகரற்ற கணக்கர் அவர். அவர் மயிலம் கல்லூரியில் தமிழ் கற்பித்தவர். அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலா வந்தவர். அவர் மென்மையானத் தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரின் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆராய்ச்சி முக்கியமானது. அவரின் தமிழ் இலக்கணச் சிந்தனைகள் தமிழ் கற்போருக்கு எளிய வழிகாட்டிகள். தமிழ் இலக்கணத்தையும், தமிழ் உயர்வையும் எண்ணிய அவரின் உள்ளம் மேன்மையானது. அவர் பாடிய தமிழ்த்தாய்த் திருப்பள்ளி எழுச்சி தமிழர் உறங்கும் நேரமெல்லாம் பாடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment