Wednesday 18 January 2017

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா


Siragu pongal1

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.’
என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் எல்லோரும் உழவர்கள் பின்னே சென்று கொண்டிருப்பவர்கள் தான்.!

உழவு இல்லையேல் உணவு இல்லை, உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரீக வாழ்வு நோக்கி நகர்த்தியிருக்கிறது. காட்டுவாசிகளான நம் ஆதி மூதாதையர்கள் ஆற்றங்கரையோரமாய் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதினால் தான்.!


தமிழர்களாகிய நாம், நமது வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் விழா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் வெல்லத்துடன் சேர்த்து பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment