Tuesday, 13 June 2017

கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும்


Siraguu kanayaali1

திருமணச் சடங்கில் இந்திய மணமக்கள் பெரும்பாலும் மாலை மாற்றிக் கொள்வார்கள். பிறகு இந்திய வட்டாரங்களில் வாழும் பல்வேறு சமயங்களின், இனங்களின், குலங்களின் வழக்கப்படி தாலி கட்டுவது, மோதிரம் அணிவிப்பது, பதிவுத் திருமணங்களில் திருமணப் பதிவேட்டில் கையெழுத்திடுவது எனப் பற்பலவகைச் சடங்குகள் வழியாக மணமக்களின் திருமணம் சட்டப்படி அங்கீகாரம் செய்யப்படுகிறது.



மோதிரம் அல்லது கணையாழி அணிவிப்பது மாலை மாற்றுவதற்கு இணையான பண்டைய வழக்கங்களில் ஒன்று. பாரத நாட்டுக்கு அப்பெயர் வழங்கக் காரணம் எனக் கூறப்படும் கதைகளில் ஒன்று பரதன் என்னும் மன்னவன் பெயரால் பாரதம் அல்லது பரதவர்ஷம் எனப் பெயர் ஏற்பட்டது என்பது. இந்தப் பரதனின் தாய் தந்தையர் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் துஷ்யந்தனும், தாய் சகுந்தலையும் என்பது ஒரு தொன்மக் கதை (மற்றொன்று, சமண சமய ரிஷபதேவரின் மகனான பேரரசன் பரதன் என்பவனால் பாரதம் எனப் பெயர் பெற்றது என்ற கதை). அந்த துஷ்யந்தன்-சகுந்தலையின் கதையில் அவர்களது காந்தர்வ திருமணத்திற்கு அடையாளமாக மோதிரம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 12 June 2017

சுற்றுப்புறச்சூழல் காப்போம்


Siragu environment2

உலக சுற்றுப்புறச்சூழல் தினமாக ஜூன் 5 – ந்தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் சேர்ப்பதில் சமூக ஆர்வலர்கள் இவ்வாண்டு அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக மரம் வளர்ப்பது என்பது சில ஆண்டுகளாக நம்மிடம் குறைந்திருந்தது. அதிலும் நம் மண்சார்ந்த மரங்கள் நடுவது என்பது எல்லோருக்கும் ஒரு விருப்பமில்லா செய்கை என்ற மாயை உருவாகி இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால், நம் மரங்கள் வளர்வதற்கு தாமதமாகும், வளர்ந்து பயன் தர பலஆண்டுகள் ஆகிறது என்ற ஒரு மனநிலைதான் காரணம். வெளிநாட்டு மரங்கள் வெகு விரைவில் வளர்ந்து, பெரிய மரமாகி நிழல் தருகின்றன. அதனால் தான் நம் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, சாலை இரு மருங்கிலும் இந்த மண்சாரா மரங்களை வளர்த்து வைத்திருக்கின்றனர். சென்ற 2016 -ஆம் ஆண்டு சென்னையில் வந்த ‘வர்தா புயல்’ காரணமாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 7 June 2017

கவிக்கோ அண்ணல்(கவிதை)


Siragu Kaviko

கவிக்கோவே! அண்ணலே! –உன்
கவிதையால் இவ்வுலகை “ஆலாபனை” செய்தாய்
மரபைமீறாது இலக்கணம் துணைகொண்டு
புதுமரபின் வேர்பார்த் தாய்நீ!

புதுக்கவிதை வித்தகனே!
புதுமரபின் கவிக்கோவே! –உன்
எழுத்தால் புதுஉரம் ஊட்டி
எழுச்சியை செய்தாயே!




மேடை தோறும் மணக்கும் -உன்
செந்தமிழால் புதுக்விதை படித்து
எதிர் அமர்ந்த நெஞ்சை மீட்டாய்
கவிக்கோவே! அண்ணலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/

Tuesday, 6 June 2017

“திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம்!!”


Siragu panneerselvam1
சூன் 1 – திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்.
திருவாரூர் என்றால் தமிழர்களுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் கருணாநிதியிடம் கேட்டால், அவர் தாய், தந்தை மட்டுமல்லாமல் நண்பர்கள், தலைவர்கள் பெயரை பட்டியலிடுவார். அப்படி பட்டியலிட்டால் அதில் முதல் பெயராக இருப்பது ஏ.டி.பன்னீர்செல்வமாக இருக்கும்.


திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில் செல்வபுரத்தில் தாமரைச்செல்வன் – ரத்தினம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் பன்னீர்செல்வம். தந்தையின் உடல்நலக்குறைவால் படிப்பைத் தொடர முடியாமல் ரயில்வேயில் அலுவலக கிளர்க்காக பணியில் சேர்ந்தார். பின்னாளில் அந்த வேலையை விட்டு விவசாயம் செய்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 5 June 2017

இன்றைய உலக அறம்


இன்றைய உலக அறத்திற்கு மறுபெயர் ‘கார்ப்பரேட் அறம்’

Pointing at touchpad

“போட்ட முதலைப் பலமடங்காக எப்படித் திரும்ப எடுக்கவேண்டும்” என்பதே கார்ப்பரேட் அறத்தின் அடிப்படை. இது தெரியாதவனுக்கு இந்த உலகில் வாழத் தகுதியில்லை. குழந்தையின் கல்விக்காக நீங்கள் ஐம்பது லட்ச ரூபாய் செலவுசெய்தாலும் அதுவும் முதலீடே ஆகும்.
கார்ப்பரேட் அறம் என்பதில்:

(அ) கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அறம், (ஆ) கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளுக்கான அறம், (இ) அரசாங்கத்தின் அறம், (ஈ) தனிமனிதனின் அறம் என்ற நான்கும் அடங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 2 June 2017

“சா”ப்பறை (கவிதை)


Siragu parai1

“சா”ப்பறை
ஆதிநாதம் கனத்து ஓலிக்கிறது!
வீதியெங்கும்
ஊர்வலத்தில் அவன் கலைஞன்.
அந்தம் நாடிச் செல்லும் ஊர்வலம்
கொட்டுகிறான் ஆதிநாதத்தை “தம் தம் தம்தம்”

ஆதிக் குடியெனும் பெயரில்லை
சாதிக் குடியான் வைத்தான் ஒரு பெயரை



பாறையில் கண்ட தோலைத் தட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday, 1 June 2017

திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் நா. காமராசன்


Siragu na-kamarasan1

மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் பாடல்கள் அத்தனையும் தவறாது வெற்றிபெறும். அதற்குக் காரணம், எம்.ஜி. ஆர். அவை உருவாவதில் தனிப்பட்ட விதத்தில் அதிகக் கவனம் செலுத்துபவர் என்பதும், அவர் திரைப்படப்பாடல்களின் கலை நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதும் திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கூறும் கருத்து. கலையுலகில் திறமையாளர்களை அடையாளம் கண்டு, தக்க வகையில் வாய்ப்பளித்து அவர்களை வளர்த்துவிடுவதும் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.


பாடுவது எம்.ஜி.ஆரே தான் என அடித்துச் சொல்லும் அளவிற்கு டி.எம்.எஸ்-சின் குரல் அவர் பாடல்களுக்குப் பொருந்தியது. இருப்பினும் அவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே. ஜே. ஏசுதாஸ் போன்ற பிற பாடகர்களைத் தனது பாடல்களைப் பாட நாடவேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர்களது மென்மையான குரல் எதிர்பார்த்த அளவுக்கு அவரது குரலுடன் பொருந்தி வராத போதிலும், திரையுலக நாயகிகள் எம். ஜி. ஆரைக் கண்டு உருகி கனவு காணும் பாடல்களுக்கு அவர்களுடன் பாடுவதற்கு புதியவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியாகங்களை 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.