Wednesday, 12 July 2017

அறமரபுசார் ஆய்வுநெறியாளர் மு. வரதராசனார்


Siragu mu.varadharaasanaar1
இலக்கியத் திறனாய்வு என்பது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்த புதிய துறையாகும். இத்துறை வளர்ந்து ஒரு நூற்றாண்டு காலப்பகுதியைத் தற்போது நெருங்கியிருக்கிறது. தமிழ் கற்றோரின், கற்போரின் இலக்கியப் பயிற்சியை, இலக்கிய ஆராய்ச்சியை நெறிப்படுத்தி வழங்கும் இத்துறை தமிழ்க்கல்வியோடு பிரிக்க முடியாத இடத்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது. உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலானவற்றின் தமிழ் வளர்ப்புத் திறன் அவ்வவ் நிலையங்களில் உருவாக்கப்பெறும் ஆய்வேடுகளின் தரம், எண்ணிக்கை கொண்டே தற்போது மதிப்பிடப் பெற்று வருகின்றன.


இன்றைக்குத் தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் உலகு தழுவிய நிலையில் வரையறுக்கபட்ட நெறிகள், மொழிநடை முதலானவை நிலைபெறுத்தப்பட்டுவிட்டன. அயல்நாடுகளின் அரசியல், தத்துவஇயல், சமூகவியல், உயிரியல் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை மதிப்பிடும் உலகு தழுவிய கருத்து நிலைக்கு இன்றைய தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ந்திருக்கிறது. தமிழுக்கே உரிய மரபு சார்ந்த திறனாய்வு முறைகளும் புறம் தள்ளப்பட்டுவிடாமல் இன்றைய ஆய்வுலகில் எடுத்தாளப் பெற்றும் வருகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 11 July 2017

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும்


Siragu-Earthquakes-fi
தற்கால மனித வாழ்விற்கு இன்றியமையாத எரிபொருளான கச்சா எண்ணெய் எடுக்க கடலிலும் (Offshore Drilling), நிலத்திலும், எண்ணெய்க் கிணறுகளும், இயற்கை எரிவாயுக்கான கிணறுகளும் தோண்டப்பட்டு வருவது கடந்த 150 ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. வணிக நோக்கில் முதலில் ‘எட்வின் டிரேக்’ ( Edwin Drake) என்பவரால் 1859 ஆம் ஆண்டு பென்சில்வேனியா (Pennsylvania ) வில் தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணற்றின் ஆழம் வெறும் 69.5 அடிகள் மட்டுமே. குடிநீர் கிணறு போல சாதாரண ஒரு ஆழத்தில் துவங்கி தொழில்நுட்பம் விரிவடைந்த காரணத்தினால் சில ஆயிரம் அடிகள் எனத் தற்காலத்தில் தோண்டப்பட்டு எரிபொருட்கள் பெறப்படுகின்றன.
இந்நாட்களில், எண்ணெய் உற்பத்தி செய்பவர்களால் ‘ஹைட்ரோ ஃபிராக்கிங்’ (hydrofracking, hydraulic fracturing, hydrofracturing) என்னும் ‘நீரழுத்த பாறைத்தகர்ப்பு’ முறையாகிய ஒரு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு 10,000 அடிகளுக்கும் மேலான ஆழத்தில், படிமப்பாறைகளுக்கு இடையில் இருக்கும்   கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியன பிரித்தெடுக்கப்படுகிறது. பாறைப்படிமங்களில் இருக்கும் எரிபொருட்கள் கலவை ‘ஷேல்’ (shale) என்று குறிப்பிடப்படுகிறது. நீரும் கரிமமும் அதன் வேதிப்பண்பு என்பதால் ‘ஹைட்ரோ கார்பன்’   (hydrocarbon) அல்லது ‘நீர்க்கரிமம்’ உற்பத்தி என்றும் குறிப்பிடப்படும் வழக்கம் தோன்றியுள்ளது. ஆனால் அடிப்படை செயல்பாடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 10 July 2017

மனசுதான் காரணம் !(சிறுகதை)


Siragu reading books1

சம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க?” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள்.
“ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத்.

குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள். மனைவி பின்னால் ஓடி வந்த சம்பத்துக்கு ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது, கண்ணீர் மல்க நின்றான்.



நளினி எப்போதுமே அப்படிதான், அவளுக்குப் வாசிப்பு என்றாலே ஒரு வெறுப்பு. மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க?………………..என்பாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 7 July 2017

பெண்ணிய நோக்கில் குறிஞ்சிப்பாட்டு


Siragu kurunjippattu1
கடைச் சங்க காலத்தில் படைக்கப் பெற்ற இலக்கியங்கள்  எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.  பத்து நெடும்பாடல்கள் கொண்ட பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுகிய அடிகளை உடைய பாடல்களுள் (261  அடிகள்) ஒன்று குறிஞ்சிப்பாட்டு ஆகும். இக்குறிஞ்சிப்பாட்டு கபிலரால் பாடப் பெற்றது.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இதனை “பெருங்குறிஞ்சி”  என்றும் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களுள் இதுவே நீளமானதாகும்.


இது அகப்பொருள் (காதல்) சார்ந்தது. அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் பெருமைகளுள் ஒன்று சங்ககால தொண்ணூற்றொன்பது பூக்கள் இதனுள் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஆகும். இந்நூலில் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற சில பாத்திரங்கள் மட்டுமே இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன. இப்பனுவல் நாடகச் சாயலை உடையது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 6 July 2017

தமிழின் வசன கவிதை


Siragu chettinadu poet1
19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் மற்றும் 20-ம் நூற்றாண்டின் முதல் காலகட்டம், தமிழ் இலக்கிய உலகில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய காலமாக வரையரை செய்யலாம். சங்ககாலத்தின் மரபுசார்ந்த கவிதைகளை புனையும் போக்கு பிற்காலத்திலும் தொடர்ந்தன. குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் 19-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார்களின் கைகளில் கவிதையின் மரபு சிக்கிக் கொண்டு சல்லாபத்திற்காக மட்டுமே பயன்படக்கூடியதாக பார்க்கப்பட்ட காலமும் இதுவே.


இப்போக்குகளை மாற்றியவர் மகாகவி எனப் புகழப்பட்ட பாரதியார். மேலும் அக்காலகட்டமும் இந்திய சுதந்திர வேட்கைக்கான களம். வீச்சுடன் செயல்பட்ட காலம். அவர் கவிதையை மக்களை நோக்கி படைத்தார். அதன் விளைவு மேலைநாட்டு கவிகளின் அறிமுகம் பாரதியாருக்குக் கிட்டியது. அவ்வாறு அமெரிக்கக் கவி ஷெல்லியின் “புல்லின் இதழ்கள்” எனும் தொகுப்பு பாரதிக்கு அறிமுகம் ஆனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 5 July 2017

புரட்சிக் கவிஞரின் வீரத்தாய்


Siragu veeraththaai1

வீரத்தாய் எனும் குறுங்காவியம் இயற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் திராவிடக் கருத்துகளை ஏற்கும் முன் பகுத்தறிவு வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனக சுப்புரத்தினம் புரட்சிக்கவிஞராக பரிணமித்துக் கொண்டிருக்கும் அந்த இடைப்பட்டக் காலத்தில் எழுதப்பட்ட குறுங்காவியம் என்ற காரணத்தால் குறுங்காவியத்தின் கதை மாந்தர்கள் பெயர் வடமொழிச் சாயலில் இருந்தாலும், ‘பெண் என்பவள் வெறும் அலங்காரப் பொம்மையல்ல, அவள் கைகள் வளையல்கள் அல்ல கொடுவாள் ஏந்தும் கெடுமதிக் கொண்டோரை வீழ்த்த’ என்று மிக அருமையாக அமைத்திருப்பார் இந்தக் காவியத்தை. மொத்தம் பத்து காட்சிகளைக் கொண்டது இந்தக் குறுங்காவியம்.




சேனாபதி காங்கேயன் மந்திரியோடு சேர்ந்து சதி செய்து மணிபுரி நாட்டை அடைய, மணிபுரி மன்னனுக்கு மது ஊட்டி ஒழித்தான். மன்னனின் ராணி விஜய ராணி தன் மானம் காக்க நாட்டை விட்டு வெளியேறுகிறாள். அவர்களின் இளவரசன் சுதர்மன் சூது மதி கொண்ட சேனாபதி காளிமுத்து எனும் முரடனிடம் அவனை அனுப்பி கல்வி அறிவில்லாது வளர்க்கின்றான். இந்த நிலையில், சேனாபதி மந்திரியிடம் தான் மணிபுரியின் அரசனாக வேண்டும் என்கிறான். அதற்கு மந்திரி, விஜயராணி பற்றி மறந்து விட வேண்டாம் எனக் கூற, அவள் தான் ஓடி ஒளிந்தனளே? அவள் எங்கனம் படை திரட்டி வருவது? என வினவ, மந்திரி விஜய ராணியின் அஞ்சாத நெஞ்சம் பற்றி எடுத்துக்கூறி அவளின் போர்க்கலைகளையும் பற்றி எடுத்து இயம்ப, சேனாபதியோ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

யார் இங்கே குற்றவாளிகள்!(கவிதை)


Siragu election

வாக்கு போட்டு நொந்தவர்களா
வாக்கு கேட்டு வந்தவர்களா….?
நீதி குற்றவாளிக்கூண்டில்
அநீதியின் விசாரணையில்…..
ஊழலின் ஊழிக்கூத்துத்தாண்டவம்
தன் தலையில் தாமே
மண் அள்ளி போடும்
தமிழ் தேசிய போலிகள்!

அரசியல்
இவர்களுக்கு வியாபாரம்
அரசியல் சாணக்கியம்
தவழும் குழந்தை
கொள்கை
அப்படியொன்றுமில்லை
கொள்கை பற்று
கொள்கையேயில்லை
தமிழ் தேசியம்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/