Tuesday, 29 August 2017

பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்


Siragu lady writer1

தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில் முகிழ்த்த காலம் தொட்டே இவ்வெண்ணிக்கை குறைவு இருந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கட்டுரைகளை எழுதுவதற்கு என்று ஒரு தகுதி இருக்கவேண்டும் என்ற எண்ணம், கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் குறைவு, கட்டுரையின் கருப்பொருள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் என்று பல தடைகள் காரணமாக இவ்வெண்ணிக்கைக் குறைவு நிகழ்ந்திருக்கலாம், தொடர்ந்து வரலாம்.


தமிழில் மூத்த பெண் கட்டுரையாளர் என்று நீலாம்பிகை என்ற அம்மையாரைக் குறிப்பிடலாம். இவர் மறைமலை அடிகளாரின் மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர்.  இவர் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு(1928), பட்டினத்தார் போற்றிய மூவர்(1934), தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952)” ஆகிய நூல்களைப் படைத்தவராக அறியப் பெறுகிறார். அகராதித் துறையில் நுழைந்த பெண் இவர் என்றும் பெருமை கொள்ள முடிகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 25 August 2017

ஒரு வாசகனின் கேள்வி! (கவிதை)


Siragu kavikkuyil

ஒரு வாசகன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டான்
நான் சொன்னேன். அது
“அறிவியலின் வரையறைக்கு உட்படாதது
அறிவியலின் கருத்துக்களை கேலிக்குள்ளாக்குவது” என்றேன்
“அறிவியலுக்கும் அதற்குமான தொடர்பென்ன?”

எழுத்தாளனின் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்கும்
சுதந்திர விமர்சகனின் சுதந்திரமான
ஆராய்ச்சியின் தொணி குரலில் வழுத்தது!



அறிவியல் சந்தேகங்களை எழுப்பவது
அறிவியலுக்கு உட்படாத கேலிக் கற்பனையை வடிப்பதில்
அலாதியான சுகம் காண்பது! இது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல்


Siragu autism5

‘காந்த ஒத்திசைவு படமெடுக்கும் முறை’ என அறியப்படும் ‘எம்.ஆர்.ஐ.’ யைப் பயன்படுத்தி (MRI-Magnetic resonance imaging) மூளையைப் படம்பிடித்து, அப்படங்களை ஆராய்ந்த பொழுது, மரபியல் காரணிகளில் காணும் பாதிப்பினால் ‘மனஇறுக்கக் குறைபாடு’ என அழைக்கப்படும் ‘ஆட்டிசம்’ என்ற வளர்ச்சிக் குறைபாடுடையவர்களின் (genetic causes of autism-developmental disorder) மூளையின் கட்டமைப்பில் வழக்கத்திற்கு மாறான மாறுதல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மரபணு அடிப்படையில் மேற்கொண்ட ஆட்டிசம் ஆய்வுகளில் இதுவே முதல் பெரிய ஆய்வு என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாக்கியவர்களின் புரிந்துகொள்ளும் திறன், மற்றும் பழக்க வழக்கங்களில் (behavioral and cognitive outcomes) காணப்படும் குறைபாடுகளுக்கான காரணமாக அமைகிறது.


இவ்வாறு ‘எம்.ஆர்.ஐ.’ படங்கள் உதவியுடன் குறைபாட்டைக் கண்டறியும் முறையால், ஆட்டிசம் பாதிப்பை துவக்கத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ற தக்க சிகிச்சையை அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை ஒன்றரை வயதிலிருந்து இரண்டு வயதிற்குள், குழந்தையின் கற்றல், பேசுதல் ஆகியவற்றில் வளரும் குழந்தையின் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத பொழுது மட்டுமே குறைபாடு இருப்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியும் நிலையுள்ளது. அத்துடன், பெற்றோர் அல்லது குழந்தையை வளர்ப்பவர் குழந்தையின் வளர்ச்சி நிலைகளைக் குறித்துக் கொடுக்கும் தகவல்கள் மட்டுமே குறையைக் கண்டறிவதில் பெருமளவு உதவுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 23 August 2017

கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..


Siragu kadai arisi1
“கடை அரிசி வாங்கி சாப்பிடுறவன்லாம் பேச வந்துட்டான்” என்னும் சொலவடை எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்த மிகப்பெரிய அவமான சுட்டு வாக்கியம்..
தன் உழைப்பில் ஈட்டாமல், அந்த உழைப்பில் விளைவித்ததோ அல்லது வேலைசெய்து நெல் கூலி வாங்கியோ உழைக்காமல் சமைத்து உண்ணும் சோறு என்பது மிகப்பெரிய அவமானமாக வாக்கியமாக எடுத்தாளப்பட்டது, நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில்..

இப்போது, நாங்கள் அரிசியை கடையில் மட்டுமே வாங்கி உணவை உண்ணும் ஒவ்வொரு வேளையின் போதும் உணர்கிறேன்.. நாமே விளைவித்த ஒரு தக்காளியாவது அந்த உணவில் சேர்த்து அந்த அவமானத்தை ஈடுகட்டவேண்டும் என்று.. நமக்காக காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்ய வேண்டும்..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 22 August 2017

விழிப்புணர்வை ஏற்படுத்தும் “கக்கூஸ்” ஆவணப்படம்


siragu 02-Kakkoos-screening-in-california

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13ஆம் தேதி, 2017 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் உள்ள மில்பிடாஸ் நகர நூலக அரங்கத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் “கக்கூஸ்” ஆவணப்படம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு திரையிடப்பட்டது. சமூக ஆர்வலர் திவ்யா பாரதி இப்படத்தை இயக்கி உள்ளார். இந்திய சமூகத்தில் தவிர்க்கப்பட்டு மிகவும் ஒடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் அவலங்களை நம் கண்முன்னே நிறுத்தி, நம் கன்னத்தில் ஓங்கி அறையும் ஒரு ஆவணப்படம்.


உலகின் பண்பட்ட நாடுகள் எதிலும் இல்லாத “மனிதக்கழிவை மனிதன் கையால் அள்ளும்” கொடுமை 21-ம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சமூகநீதியில் ஓரளவு முன்னேறியுள்ள மாநிலமான தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது என்ற கசப்பான உண்மையை கக்கூஸ் ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மனிதக் கழிவை மனிதன் கையால் அள்ளுவதைத் தடுக்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்திய நடுவண் அரசும், தமிழக மாநில அரசும் தங்கள் மெத்தனப்போக்கால் இந்த இழிவழக்கை ஒழிக்க எவ்விதச் சிறப்பு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எனவே, பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த அவலத்தின் கொடுமையை உணரமுடியாமல் வாழ்கின்றனர். அதன் பொருட்டு திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தைக் காண்பதற்கு கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்கள், அமெரிக்கர்கள், பிற தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தண்டு ஆதரித்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 17 August 2017

கவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)


புத்தரின் மலர்

Siragu puttar

பெருவெள்ள மழைக் காலத்திற்கு பின்
அமைதியின் உருவாய்
ஒரு மெல்லிய பூ மிதந்து வருகிறது!
வெள்ள நதியோட்டத்தில்
மெல்லிய புன்னகை வீசிய மலரொன்று
மறுமலர்ச்சியின் நம்பிக்கை!



நதியின் பயணத்தில்
மெல்லிய இதழ்களை வருடிச் செல்லும்
நீரோட்டங்களை தன் வாழ்வின்
வழிகாட்டியாக கொண்டது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

Wednesday, 16 August 2017

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்


Siragu raamaanujar1

நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர் திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் அமுதனார் என்பதே இவர் பெயராக அமைந்தது. திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து திருவரங்க அமுதனார் ஆனார்.


இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில் நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார் இராமானுஜர். இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத் தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.