Tuesday, 16 January 2018

அன்னை மீனாம்பாள்


Sirgu Annai_Meenambal1

தலித் ஆளுமை அன்னை மீனாம்பாள் பற்றிய நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அன்னை மீனாம்பாள் அவர்கள் 1904 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார்.

இரங்கூனில் இவரது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபலமானவர். ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தார் அன்னை மீனாம்பாள். அப்போதிலிருந்து தொடர்ந்து சமூகப்பணிகளை தான் இறக்கும் வரையில் செய்து வந்திருக்கின்றார். சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி 1928இல் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம், அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர்.


அவருடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை அவர்கள் கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிப்புரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவரான டாக்டர் டி. எம். நாயர் ஆற்றிய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அந்த வகையில் நீதிக்கட்சியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 11 January 2018

தொகுப்பு கவிதை (தோழமை போற்றிடுவோம்!, தீராத நதியொன்று)



தோழமை போற்றிடுவோம்!

siragu friends2

வருவாய் என்தோ ழனேநீ –எதிர்
வருங்காலம் உனதென்று உணர்வாய்
நீயன்றும் நானென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது வேற்றுமையே!
நாமென்றும் நமதென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது ஒற்றுமையே!

தனிமரம் தோப்பென்று சொல்வரோ? –வளர்த்
தமிழ்ச்ச முதாய மொன்றே தோப்பாகும்!
தானென்றும் தனதென்றும் பேசினால்

தனியுடைமை தீங்கன்றோ தோன்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1/

Monday, 8 January 2018

மரபுக் கவிதைகளில் தொன்மங்களின் தாக்கம்


Siragu kavikkuyil

தமிழ் இலக்கிய வடிவங்களி்ல், நெடுங்கால வரலாற்றையும், நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், பரந்து விரிந்த களங்களையும், அளவில் பெருமையையும் கொண்ட கவிதை வடிவம் மரபுக்கவிதை வடிவம் ஆகும். புதுக்கவிதையின் எழுச்சியினால் மரபுக்கவிதை எழுதுவது தற்கால எல்லையில் குறைவுபட்டிருப்பினும் முற்றிலும் அழிந்துவிடாமல் இவ்வடிவம் மரபுக்கவிஞர்களால் காக்கப் பெற்று வரப்பெறுகிறது. பழைய மரபிலக்கியம், மரபிலக்கணம் ஆகியவற்றின்மீது படைப்பாளர்கள், வாசகர்கள் கொண்டிருக்கும் மதிப்பு, பற்று, உயர்ச்சித்தன்மை ஆகியவற்றின் காரணமாக மரபுக்கவிதை வடிவம் தன் இருப்பைத் தக்கவைத்தே தற்காலத்தில் வளர்ந்து வருகிறது.

ஆசிரியப்பா, வெண்பா என்ற மரபுக்கவிதை வடிவங்கள் முறையே சங்கப் பழமைக்கும், நீதிநூல் பழமைக்கும் உரியன. திருத்தக்கதேவர், கம்பர் போன்றோரால் விருத்தப்பா விளக்கம் பெற்றது. பதிகம் பாடும் சிறப்பு பக்தி இலக்கியத்திற்கு வாய்த்தது. அருணகிரிநாதரால் சந்தம், வண்ணம் ஆகியன மதிப்பு பெற்றன. தாயுமானரால் கண்ணி என்னும் மரபு வளம் பெற்றது, சித்திரக்கவிகளும் மரபுக்கவிதைகளின் கட்டமைப்பு வளர்ச்சியாக அமைந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆன்மீக அரசியலும், ரஜினியும்.


Siragu aanmeega arasiyal1

கடந்த வாரத்தில் நடிகர்  ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடக்கத்தைப் பற்றி அறிவித்தது நம் அனைவருக்கும் தெரியும்.  அதனைத் தொடர்ந்து பலரால் பல்வேறு விதத்தில் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும்  விமர்சனங்கள்  வைக்கப்படுகின்றன. ஏன் இவ்வளவு விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்கின்றன என்பதை தமிழக மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்திக்கொண்டு தான் அரசியலில் நுழைகிறார் ரஜினிகாந்த். அவரின் பின்புலத்தில் யார் இயக்குகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மத்திய பா.ச.க அரசும், ஆர்.எஸ்.எஸ்.வும் இவரை முன்னிறுத்தி தமிழகத்தில் தங்கள் மத அரசியல் எனும் அறுவடை செய்ய துடித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

முதலில் மக்களும், ரஜினி ரசிகர்களும் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். திரு.ரஜினிகாந்த் மீது நமக்கு எந்த வன்மமும் கிடையாது. அவர் ஒரு நடிகர் என்பதாலோ, மராட்டியர் என்பதாலோ, கர்நாடகத்தில் வளர்ந்தவர் என்பதாலோ அல்ல இந்த நிலைப்பாடு. இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தேர்தலில் நிற்கலாம். ஆனால் இன்று  தமிழக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அரசியலுக்கு வரும் ரஜினி, இதுவரை இந்த மக்களுக்காக எதாவது செய்திருக்கிறாரா அல்லது ஏதேனும் அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா, கண்டனங்கள் தெரிவித்திருக்கிறாரா  என்பதை மக்கள் உணர வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 4 January 2018

சிந்தனைமுத்து (கவிதை)


siragu iru paadhaigalum4

இதயத்தை வலுப்படுத்த
சிங்கோனா மரப்பட்டையின்
கொய்னா……
ஆம். என்றோ படித்தது
சரியோ…..தவறோ…..
இன்று விழுந்தது
மனத் திரையில்
பிம்பமாய்…..

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு
இது அவசியம்.
அனாவிசயம் அல்ல.
வேலைதேடி எடுத்து
நடத்தும் படையெடுப்பில்
பெற்றபட்டம் சிறப்பாயினும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday, 3 January 2018

மலைபடுகடாம்- ஒரு அறிமுகம்!!


Siragu-malaipadukadam2

மலைபடுகடாம் என்னும் இலக்கிய நூல் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. நம் பழந்செந்தமிழ் நாடு இயற்கை வளஞ்சான்றது. காடும், மலையும், புள்ளினங்களும், முகிலனங்களும் கவின் பெறக் காட்சியளிப்பனவாக இருந்தது. அவ்வியற்கைச் சூழலிடையே நம் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் காண்பது இயற்கை காட்சி, கேட்பன புள்ளின் பாட்டொலி, இத்தகைய இயற்கை காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வரும் சுவை மிகுந்த இலக்கிய நூலே மலைபடுகடாம்.
இந்நூல் கூத்தாற்றுப்படை என்னும் வகைகளுள் வரும். அதாவது ஆற்றுப்படுத்தும் கூத்தன், எதிர்வரும் கூத்தனை அழைத்து, “யாம் இவ்விடத்தே சென்று இன்னவளம் பெற்று வருகின்றோம், நீயும் அவ்வள்ளல்பாற் சென்று வளம் பெற்று வாழுதி!! என்று கூறுவது.
தொல்காப்பியம் புறத்திணையியலுள்,
“ தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு”
என்று தொடங்கும் நூற்பாவின் கண்,

“ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 January 2018

சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும்


Siragu silappadhikaaram 3

பல்வகை இனக்குழுக்கள் இணைந்து வாழுகின்ற சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் தனிக்கென தனித்த அக, புற அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் வாழ்ந்துள்ளன. வாழ்ந்து வருகின்றன. இவ்வினக்குழுக்களை தமிழ் மொழி ஒன்றிணைத்துள்ளது. பல்வேறு இனக்குழுக்களுக்களுக்கான தனித்த அடையாளங்களைத் தாண்டி தமிழ்நிலம், தமிழ் மொழி என்ற இணைவு பொதுமைநிலையில் தமிழ்ச்சமுதாயத்தில் செயல்பட்டு ஒற்றுமையைக் காத்து வந்துள்ளது.


தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம் பெறுகின்றனர். காலத்தை., பொருளின் அளவை, சமயத்தை இவை போன்றவற்றைக் கணக்கீடு செய்யும் தமிழர்கணக்கீட்டு முறைமை சங்ககாலந்தொட்டு இருந்து வந்துள்ளது. ஓலைக்கணக்கர், நாழிகைக் கணக்கர், மந்திரக்கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக் கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர், ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல செம்மொழி இலக்கியங்களில் உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.