Thursday, 15 February 2018

சங்க இலக்கியத்தில் வெறியாட்டம்


siragu veriyaattam1

தலைவனும் தலைவியும் காதல் மொழி பேசி மகிழ்ந்து இருக்கின்றனர். அப்படி இல்லாத காலங்களில், தலைவனின் பிரிவை எண்ணி தலைவி வருந்தி வாடுகின்றாள். அதன் காரணமாக பசலை கொண்டு உடல் இளைத்து, தோல் வெளுத்து விடுகின்றாள். அவள் கைகள் மெலிந்து வளையல்கள் அணிய முடியாது கழன்றுவிடுகின்றன. அவளின் களவொழுக்கத்தை அறியாத தலைவியின் தாயும், செவிலித் தாயும், கட்டுவிச்சியை அழைத்து குறிச் சொல்ல வேண்டுகின்றனர்.
கட்டுவிச்சி என்பவள் குறிஞ்சி மலையில் வாழும் அகவன் மகள். அவள் அரிசியைத் தூவி அந்த அரிசிகள் விழும் அமைப்பைக் கொண்டு குறி சொல்கின்றாள். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் அணங்கினால் தலைவிக்கு பாதிப்பு என கூறுகிறாள். முருகனின் கோபம் தணிய வேலனை அழைத்து வந்து வெறியாட்டம் ஆட வேண்டும் எனச் சொல்கிறாள் வேலன் என்பவன் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு வழிபாட்டுக்கு தேவையானவற்றை செய்பவன்.

தொல்காப்பியம் கட்டுவிச்சி, வேலனை பற்றிக் கூறும்போது, ‘களவு அலர் ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’ (தொலகாப்பியம், பொருளதிகாரம் 115). என்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 14 February 2018

நசுக்கப்படும் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள்

தமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை திட்டமிட்டே அழிக்கும் செயலில், மத்திய அரசாங்கம்  ஈடுபடுகிறது என்பதில் எல்லோருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  அதிலும் கடந்த ஓராண்டாக, தமிழகத்தின் ஆட்சி, மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மக்கள் அனைவருக்கும் இந்த அச்சவுணர்வு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டிற்கு எவ்வித வளர்ச்சித்திட்டங்களும் போடப்படவில்லை, அமல்படுத்தபபடவில்லை. அது மட்டுமல்லாமல், அனைத்து ஆதாரங்களையும் சுரண்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
Siragu-farmers


முதலில் விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போம். விவசாயத்திற்கான முக்கிய ஆதாரமே நீர் தான். அதனை தேவையான சமயத்தில் வழங்குவதில் முனைப்பு காட்டவில்லை இந்த மத்திய பா.ச.க அரசும், மாநில அ.தி.மு.க  அரசும். மழை பொய்த்துவிட்டது. நமக்கு முறையாக, கர்நாடகத்திலிருந்து  வழங்கப்படவேண்டிய தண்ணீர் வழங்கப்படவில்லை. கர்நாடகத்திலிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய நீரை பெற்றுத் தர மத்திய, மாநில  அரசுகள் தவறி விட்டன. காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு, அதனை மறுத்துவிட்டது. தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயம் பொய்த்துவிட்டதால், வறுமையில் வாடும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையினை இந்த இரு அரசுகளும் ஏற்படுத்தி விட்டன. கடன் தள்ளுபடி கேட்டு இன்னமும், விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் உணவிடும் விவசாயிகள், இன்று உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மீத்தேன் எடுத்தல்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

விழித்திரு (கவிதை)


Siragu penniyam2

ஏடெடுத்துப் படித்துவிட்டு
எழுதுகோலைத் தூக்கிவந்து
பெண்ணினமேபேதமின்றி
மனிதப் பிறப்பாகஉருவெடுக்க
எழுந்திடுக…. எழுந்திடுக….
வீறுகொண்டேஎழுந்திடுக
எனக்கூற ஆசைகொண்டு – இங்கு
அவசரமாய் ஓடிவந்தேன்
பெண் இனமே–நீ



கண்ணினைக் கயலாக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday, 9 February 2018

மறந்த மருத்துவம்


siragu iyarkai maruththuvam

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பழமொழிக்கேற்ப வாழ்வின் சிறந்த செல்வமாகக் கருதப்படும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வெதென்பது இன்றைய சூழலில் எட்டாக் கனியாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். நமது உணவு முறையும், மருத்துவ முறையும் நாகரிகத்தை நோக்கிச் செல்ல செல்ல நமது ஆரோக்கியம் இழிநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையையும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் நம்மை விட ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். நமது இன்றைய நிலைக்கான சில காரணங்களையும், சில எளிய மருத்துவ முறைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
சமையல் அறை மாற்றங்கள்

விளம்பர வாழ்க்கை வாழ விரும்பும் நாம் விளம்பரங்களைப் பார்த்து நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டுள்ளோம். மண்பானைகளாலும், கண்ணாடி பாட்டில்களாலும், உலோக உபகரணங்களாலும் நிறைந்த நம் சமையலறையை இன்று ஆடம்பர அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களாகவும், Nonstick, Airtight container பாத்திரங்களாகவும் மாற்றியுள்ளோம். உப்பு, புளி, ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து உபயோகப்படுத்துவது நமக்கு நாமே விசம் உண்பதற்கு சமம் என்று தெரிந்தும் பிளாஸ்டிக் ஜார்களில் விளம்பரப்படுத்திய ஊறுகாயைத்தானே வாங்கி பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடான பொருட்களை ஊற்றுவது அதன் விசத்தன்மையைத் தரும் என்று தெரிந்திருந்தும் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பாட்டில்களை வாங்கி அதில் சுடச்சுட நீரை ஊற்றிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 8 February 2018

வைரமுத்துகளுக்கு எச்சரிக்கை


Siragu vairamuththu2

தருண்விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின்மேல் ஆர்வம் கொண்டு அதன் அருமை, பெருமைகளைப் பரப்புரை செய்துவருகிறார். அப்படிச் செய்வதன்மூலம் தமிழக மக்களைக் காவி வட்டத்திற்குள் இழுத்துப்போகவும் கடுமையாக முயல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாது செய்தொழில் வேற்றுமையான் என்ற திருக்குறளின் உயிருக்கு நிகரான கருத்தைப் புறந்தள்ளிவிட்டு,அதற்கு நேர் எதிரான வர்ணாசிரம அதர்மத்தை வலுப்படுத்த முனையும் அவரது நோக்கத்தை தமிழகமக்கள் பலர் புரிந்துகொண்டு உள்ளனர். ஆனால் ஆளும் வர்க்கத்தை அனுசரித்துப் போனால் ஆதாயம் கிடைக்கும் என்று நம்பும் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கவும் செய்தனர். அப்படிப்பட்டவர்களுள் வைரமுத்துவும் ஒருவர்.


வைரமுத்து அத்துடன் நிற்கவில்லை. காவிகளை மேலும்மேலும் புகழ்வதன் மூலம் தனக்குப் பேரும்புகழும் கூடும் என நினைத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை “நட்டுவைத்த வேலுக்குப் பொட்டு வைத்ததுபோல் நிமிர்ந்து நிற்கிறார்” புகழ்ந்து தள்ளினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 7 February 2018

பேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.!


Siragu perundhu4

தமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை, இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த அளவிற்கு மக்களை மிகவும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் துயரம் இந்த பேருந்து கட்டண உயர்வு. இது சரியான நிர்வாக அமைப்பு இல்லாததையே காட்டுகிறது. நிதி பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் என்ற ஒரு நொண்டி சாக்கை கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாக திறமையற்ற அதிமுக அரசு.!


எல்லாவற்றிக்கும் முதன்மை காரணம் என்னவென்றால், போக்குவரத்து ஊழியர்களின் பிடிக்கப்பட்ட தொகையை வைப்பு கணக்கில் வைக்காமல், வேறு செலவினத்திற்காக திருப்பிவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட ஒரு மோசமான விளைவு தான், இந்த நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. இதனால் போராட்டம், வேலை நிறுத்தம். அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு என அனைத்தும் நடக்க காரணமாக இருந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 1 February 2018

உதிர்ந்த மலர் (சிறுகதை)


siragu udhirndha malar

நான்  கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க எழுந்தேன். அடடே, நேரம் ஆகிவிட்டதே என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். நான் தி.நகரிலிருந்து  திருவான்மியூர் போக வேண்டும். பேருந்து நிலையத்தில் ராதிகாவைப் பார்த்தேன். அவளை  தினந்தோறும் அங்கு பார்க்கிறேன். அவள் தோழி சந்தியாவுடன் மைலாப்பூர் பேருந்தைப் பிடிக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ”ஹலோ” என்றால் அவளும் ”ஹலோ” என்பாள். ராதிகா கொடிபோல் வசீகரமாய் இருப்பாள். சந்தியாவை விட ராதிகா அழகானவள். என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூப்பாள்.மிகவும் மென்மையானவள்,சுவையாகப் பேசுவாள். புத்திசாலியும்கூட  எதையும் சட்டென்று புரிந்து கொள்வாள். குறும்பு அவள் கூட பிறந்த குணம். ஒரு முறை வெளுத்து கட்டறே! என்று வாட்ஸ்அப்பில் மெசெஜ் போட்டிருந்தேன். ”நான் துணியெல்லாம் நல்லா வெளுக்கிறதில்லேன்னு வீட்டிலே சொல்றாங்க“! என்று குறுநகை பதில் வந்தது.

அன்று ஏனோ தெரியவில்லை. சந்தியாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ராதிகா தென்படவில்லை. அவள் இல்லாமல் ஒரு வாரம் போனது. பொறுக்க முடியாமல் “எங்கே உங்க தோழியைக் காணோம். விடுமுறையில் வெளியூருக்குப் போயிருக்காங்களா? நான் சந்தியாவிடம் கேட்டு விட்டேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.