Friday, 2 March 2018

யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)


siragu yaarukkum1


வாசலில் இருந்து பாரிசாத பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பூசை அறைக்குள் நுழைந்து கடவுளை வணங்கினேன். அப்போது காலை 8.30. என் அலைபேசி சிணுங்கியது. நம்பரைப் பார்த்தால் புதிய நபரிடமிருந்து வந்திருக்கிறது. யாரிடமிருந்து என்று தெரியவில்லை? ஏதோ நல்ல விசயமாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது.
”ஹலோ, வணக்கம்., எழுத்தாளர் பாமா கிருஷ்ணன் தானே?” ஆண் குரல் கேட்டது.
”ஆமாம், நான் பாமாகிருஷ்ணன் நீங்க யார்?.”

என் பெயர் கேசவன். தி. நகரிலிருந்து பேசுகிறேன். வாசகர் வாசிப்பு என்னும் எங்கள் அமைப்பைப் ப|ற்றி சிறு அறிமுகம். சென்னையில் ஏராளமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எங்களுடையதும் ஒன்று. சிறிய அமைப்பு. வாசிப்பில் ஆர்வமுள்ள சிலர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பத்திரிகையில் வெளிவந்த ஒரு சிறுகதையை. விமர்சனம் செய்வோம். சமீபத்தில் ——- பத்திரிகையில் பிரசுரமான நீங்கள் எழுதிய “திருநெல்வேலி ஜங்ஷன்” சிறுகதையை விமர்சனம் செய்து சிறந்த கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லோரும் சிறந்த கதை எழுதிய உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்பியதால் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மையிலாப்பூரிலுள்ள கோகலே ஹாலில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 1 March 2018

தமிழர்கள் யார் ?


Siragu hinduism1
இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர்.

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழர்கள் யார்? என்ற கேள்வி வலுப்பெறுகிறது. இந்தக் கேள்வியை வரலாற்று ரீதியாக நாம் அணுக வேண்டிய தேவை உள்ளது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் வீர சைவர்கள், வீர வைணவர்கள் என்ற குரல், வரலாற்றில் பிழையான, ஆபத்தான குரல் மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு கொல்லைப்புறம் வழியாக வரவழைக்கும் குரலும் என்பதை நாம் மறந்து விட முடியாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 28 February 2018

மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.!


Siragu madurai1

சில வாரங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முடிவில் மின் கசிவு என்று சொல்லப்படுகிறது. இனி, விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். அதுவும், நேர்மையான விசாரணையாக இருக்கும் பட்சத்தில் தான். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில், தீப்பிடித்து எரிந்தது. அதே போல, தஞ்சை மாவட்டத்திலுள்ள, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவின் போது, கொடிமரத்தின் அருகே, பால் காய்ச்சிக்கொண்டிருந்த எரிவாயு உருளையிலுள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. பெரிய அசம்பாவிதம் ஏதும் நடவாமல், தீ அணைக்கப்பட்டது. இதனை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோவிலில், அம்மனுக்கு சாத்தப்பட்ட துணியில், பக்கத்திலிருந்த அகல்விளக்கின் மூலம் தீப்பிடித்து, உடனே அணைத்தனர். தொடர்ந்து, இது போன்ற செய்திகளை அதாவது தமிழ்நாட்டு கோவில்களில் தீப்பிடிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயாமல், பரிகாரங்கள் செய்யவேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. இன்னும் சில பேர், ஆட்சிக்கு ஆபத்து, நாட்டு மக்களுக்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர். இதையெல்லாம் விட, மிகப்பெரிய பாறாங்கல்லை நம் தலையில் தூக்கிபோடுவது போல், ஆரியம் ஒரே விசயத்தை, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.!


இதை வைத்து, இந்து அமைப்பினர், வலது சாரியினர், பாசக, என அனைத்து இந்துத்துவவாதிகளும் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறார்கள். அது என்னவென்றால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்க வேண்டும் என்பது தான். அதற்கான, அவர்களுடைய காரணம், ஊழல் மலிந்து விட்டது. லஞ்சம் லாவணியம் மிக சுலபமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 22 February 2018

யாருடைய டீயை நீ விற்கிறாய்? (கவிதை)


ப்ரஜ் ரஞ்சன் மணி-யின் “கிஸ்கீ சாய் பேச்தா ஹை தூ” என்ற இந்திக் கவிதையின் தமிழாக்கம். இந்தியிலிருந்து தமிழுக்கு: க. பூரணச்சந்திரன்

Siragu tea virkiraai1


நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

விரல் நுனியிலும் காயம் படாமல்
உன்னைத் தியாகி என்று சொல்லிக் கொள்கிறாய்
கூட்டுக் குழுமங்களில் கிறிஸ்துக்களைத் தேடுகிறாய்
அம்பானி அதானி பேரரசை விகாசம் என்கிறாய்
அட பத்மாஷ், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/

Wednesday, 21 February 2018

திருமலைராயனும் காளமேகப்புலவரும்


 Siragu kaalamega pulavar1
விஜயநகர அரசன் மல்லிகார்ச்சுனராயரின் (1449 – 1465)  அரசப் பிரதிநிதியான “சாளுவத் திருமலைராயன்” (1453/1455-1468) என்பவர் காலத்தவர் கவி காளமேகம் என்று அறியப்படுகிறது. சாளுவத் திருமலைராயன் என்னும் தெலுங்கு மொழி சிற்றரசனைக் குறித்துத் தனது பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார் காளமேகம்.

சகம் 1875ல் தோன்றிய சாளுவத் திருமலைராயனைக் குறிப்பிடும் கல்வெட்டொன்று திருவானைக்காவில் உள்ளது என்று ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவனது தலைநகரம் திருமலைராயன் பட்டினம் என்ற குறிப்பு அவனது கல்வெட்டிலும் காணப்படுகிறது என்றும், இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், ‘சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான திருமலை ராசபுரம்’ என்பது திருமலைராயன் பட்டினம் என்றும்  ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை கருதுகிறார்.  தான் பண்டைய சளுக்க மன்னர்களின் வழித்தோன்றல் என்பதாக  இவன் தன்னைச் “சாளுவத் திருமலை தேவமகாராசர்” (S.I.I.Vol.II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிறான். இவன் காலத்தவரான காளமேகப்புலவரும் “கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்” என்றே குறிப்பிடுகின்றார். தம் பாடலொன்றில்,  “…..  நிலைசெய் கல்யாணிச்சாளுவத் திருமலைராயன்”  என்ற வரியில் காளமேகம்  குறிப்பிடும் கல்யாணி என்பது மேலைச் சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 20 February 2018

பார்ப்பனர்களில் நல்லவர்கள்?!


Siragu paarppanargal1

“பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?” என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ஒதுக்குவதன் மூலம் அவர்களில் உள்ள நல்லவர்களின் சேவை கிடைக்காமல் போய்விடும் என்றும், அதனால் சமுதாயத்திற்குப் பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அதிகாரப்படுத்தும் பணியைச் செய்த ஒரு பார்ப்பனரையும் வரலாற்றின் எந்தக்கால கட்டத்திலும் எடுத்துக்காட்டியது இல்லை.

பார்ப்பனர்களை/ பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலாகப் போர்க்கொடி உயர்த்தி வரலாற்றில் முத்திரை பதித்தவர் புத்தரே. அப்படி அவர் போராடியபோது, அவர் பக்கம் நியாயம் இருக்கிறது என்றுகூறி, அவருடன் சேர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனரும் துணைநின்றது இல்லை. அவருடைய மறைவுக்குப்பின், புத்தமதத்தை ஆக்கிரமித்து, நாத்திகரான புத்தரை கடவுள் அவதாரம் ஆக்கி, அம்மதத்தின் புரட்சிகர அம்சங்களை எல்லாம் நீர்த்துப்போகச் செய்தனர். ஒரு பார்ப்பனர்கூட புத்தரின் மனிதகுலச் சமத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்பது மட்டும்அல்ல, அதை எதிர்த்துப் பார்ப்பன அதிகாரத்தை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 15 February 2018

அலைபேசியினால் வந்த ஆபத்து (சிறுகதை)


Siragu smart phone1

“அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல, சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் வந்த அர்ச்சனாவிடம் லட்சுமி,”போடி அந்தாண்டே, அம்மா வேலையாயிருக்கிறது தெரியலையா?” என்று எரிந்து விழுந்தாள்.
அர்ச்சனா அம்மாவை அச்சத்துடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தாள். லட்சுமி படித்தவள். பெயரில் மட்டுமல்ல, அழகிலும் மகாலட்சுமியைக் கொண்டிருந்தாள்.
அலைபேசி (Smart Phone) வந்தப் பிறகு ஆறு மாசமாய் அம்மா தன்னிடமிருந்து விலகிப் போவதை அந்தச் சிறுமி உணர்ந்தாள்.
லட்சுமி அர்ச்சனாவிடமிருந்து மட்டும் விலகிப் போகவில்லை. அவள் கணவன் ஹரியிடமிருந்தும்  விலகிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால் ஹரிக்கு அணி தலைவராக பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சுமிக்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதுதான் அவன் செய்த தவறு. லட்சுமி வாட்ஸ் செயலியைப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் காதல் மாதிரி அவள் மனம் அதில் ஈடுபட்டது. பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டாள். கல்லூரியில் படித்த ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் எல்லோருடன் நட்பு தொடர்ந்தது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் அவளுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் தொடர்பு மலர்ந்தது. வாட்ஸ் அப்பில் அவள் புகைப்படத்தை அடிக்கடி மாற்றினாள். செய்திகளை போட ஆரம்பித்தாள். வாட்ஸ் அப்பில் அரட்டை(chatting) செய்ய ஆரம்பித்தாள். ஆண் நண்பர்களிடமிருந்து அவள் அழகைப் புகழ்ந்து அவளுக்கு செய்தி வரும், அதுவும் எப்படி, ”டார்லிங், அன்பே, ஆருயிரே, தங்கச்சிலை, செல்லச் சிறுக்கி …” இதைவிட மோசமாய் வரும். அவள் மறுப்புச் சொல்லாமல் அரட்டை செய்வாள். இரவு நேரத்தில் மிகவும் மோசமாய் வரம்பு மீறி அரட்டை செய்யும் ஆண் நண்பர்களும் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.