Friday, 4 May 2018

தொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)



நாடோடியின் ஏக்கம்

                                    -இல.பிரகாசம்
siragu naadodi1
நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என்
கண்ணிலோ துன்பம் கசியுதடி!

உழைச்சு வாழுங் குடிநாம் இருப்பதற்கோ
ஒருவீடு இல்லை யடியே!
ஊரோடு வாழக் குடிசையு மின்றி
தெருவே வீடென வாழவோ

ஏழை என்ற பெயரொடு நாம்வாழ
தனிதே சமொன்று உண்டோ?
கூழ்குடிப் பதற்கும் பஞ்சம் பொழப்பு

கூடிபெற்ற பிள்ளையும் பாவமோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 3 May 2018

சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு


siragu-thennarasu3
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பங்களிப்பிற்குத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய வாணர்கள் குறிக்கத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களை முன்னவர்களாகக் கொண்டு தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பணிகளை இதழ்கள் வாயிலாகவும், படைப்புகள் வாயிலாகவும், ஆய்வுகள் வாயிலாகவும் திராவிட இலக்கிய வாணர்கள் திறம்பட செய்தனர். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க படைப்பாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த எஸ். எஸ். தென்னரசு ஆவார். இவரின் வாழ்வினை எடுத்துரைத்து இவர் படைத்த சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எஸ். எஸ். தென்னரசு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் அரவணைப்பினைப் பெற்றவர். கலைஞர் மு. கருணாநிதியுடன் இவர் இலக்கியத் தோழமை பெற்றிருந்தார். சிறுகதை மன்னன் என்று போற்றப்பெறும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளை அளித்தவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 2 May 2018

சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”


oct25முன்னுரை:
சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைதண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 1 May 2018

அணிபெறும் திரையிசை


siragu thirai isai1
தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு படைப்பாளன் படைக்கும்போது பாடுபொருள் ஒன்றை முதலில் தேர்ந்து கொள்கிறான். அதன்பின் அதற்காக வடிவத்தைத் தேர்ந்து கொள்கிறான். வடிவத்தைத் தேர்ந்தபின் அவ்வடிவத்திற்கான சொற்களை இணைக்கிறான். இவையெல்லாம் மனதில் உருவாகி எண்ணத்தில் கிளை பரப்பி, எழுத்துவண்ணமாக வருகின்றன. ஆனால் படைப்பாளன் எண்ணாமலே வருவது அணி. அது படைப்பிற்று அணி செய்கிறது. அணி இலக்கணத்தைப் படைப்பாளன் படைக்கவேண்டும் என்று எண்ணிப் படைப்பதில்லை. தானாகவே அது இடம்பெற்று விடுகிறது. படைப்பாளன் திட்டமிடாமலே படைப்பிற்குள் அணியிலக்கணம் அமர்ந்து கொண்டு, அணிசெய்கிறது.

குறிப்பாகத் திரையிசைப் பாடல்களைப் புனையும்போது படைப்பாளன் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறான். காலம், அடி வரையறை, இசைக்கான இசைவு, பாடல் இடம் பெறுவதற்கான சூழல், அதனைப் பாடுவோர்க்கானப் பாத்திர இயல்பு இவற்றையெல்லாம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டுப் படைப்பாளன் படைத்தாக வேண்டும். இந்நேரத்தில் அணியிலக்கணத்தைக் கொண்டு வந்துச் சேர்க்கவேண்டும் என்று கவிஞன் எண்ண இயலாது. தானாக வந்து அமர்ந்து கொள்கிறது அணியிலக்கணம். எனவே மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது அணியிலக்கணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 25 April 2018

சிற்றில்


siragu sitril2
ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே குடிலிருக்கும்
கையளவு கதவிருக்கும் காற்று வர வழியிருக்கும்
வழிமேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…..!
ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல். கண்ணதாசனின் வரிகள் இவை. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் சிற்றில் அதாவது சிறிய மணல் வீடு என சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட வரிகள் தான் நினைவிற்கு வரும். சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் இந்த மணல் வீடு பற்றியக் குறிப்புகள் உண்டு.

பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில் சிற்றில் பற்றியப் பாடல்கள் உண்டு. புலவர்கள் தாங்கள் விரும்பிய கடவுளையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். இதில் பதினேழாவது மாதத்தில் பாடப்படும் பாடல்கள் சிற்றில் இடம்பெறும். இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

கிளிக்கூண்டும் அரசியலும் (கவிதை)


siragu kilikkoondum1

கிளிக்கூண்டும் அரசியலும்
எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும்
இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ?
கூண்டில் அடைபட்ட சுகம்தான் -இன்னும்
கண்ணுக்கு ஒளியைத் தருவதோ?
வீதிவரை வந்ததடி துன்பம் -பின்னும்
வீடுவரை வாராது போகுமோ?

நின்சிறகு அசையாது போயின் -பின்னே
நீகாணும் உலகம்கை வருமோ?
சிறகிலும் உனக்குத் தெம்புண்டு -இன்னும்
சிறையில் வாசம் ஏனடியோ?

எதிரில் விரிந்த வானமுண்டு -பின்னும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/

Friday, 20 April 2018

கண்ணாடிக் கதவுக்கு அப்பால் (சிறுகதை)


siragu kannaadikku appaal1

நான் கோயம்பேடு ரயில் நிலைய நடைமேடையில் நுழையும் போது  ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது நேரம் காலை எட்டு மணி.  மெட்ரோ சேவை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை உண்டு. ரயில் நின்றதும் கதவு திறந்தது. நடைமேடையில் ஒரு இளைஞன் என் பக்கத்தில் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ரோஜா பூவை வைத்திருந்தான்.

சில வினாடிகள்தான் ரயில் நிற்கும்  என்பதால் நான் ரயிலில் உடனே  ஏறி விட்டேன். அவன் யாருக்காகவோ காத்திருந்தான். அப்போது ஒரு இளமங்கை ஓடி வந்தாள். அவள் ஒல்லியான உடற்கட்டுடன் கூர்மையான கண்களுடன் அழகு பதுமையாய் அதிக வசீகரத்துடன் இருந்தாள். அடர்த்தியான கூந்தல் இடுப்புக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.  அவன் சிரித்த முகத்துடன் தன்னிடமிருந்த ரோஜாப் பூவை அவளிடம் கொடுத்தான். அவள் ரோஜாவை தலையில் சூடிக் கொள்ள இருவரும் அவசரமாக ரயிலுக்குள் ஏறினார்கள். உடனே கதவு மூடியது. கதவிலே  பாதி கண்ணாடி. பிளாட்பாரத்தில் நிற்பவர்களை எல்லாம் உள்ளேயிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சாதாரண மின்சார வண்டி போல் கூட்டமாக  இல்லை.   தாராளமாக உட்கார்ந்து போக இடம் இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.