Friday, 5 July 2019

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?


siragu-ambedkar1
“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது. அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.
இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்திகளைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலுவாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப்பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக்கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி சாதியக் கொடுமைகளை நிரந்தரப்படுத்த அவாள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 July 2019

ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை

siragu aasaarakkovai1
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “ஆசாரக்கோவை” (இதற்கு ‘ஒழுக்கங்களின் தொகுதி’ என்பது பொருள்) என்னும் நூல் ‘பெருவாயின் முள்ளியார்’ என்ற புலவரால் பாடப்பட்டது. கடைச்சங்க மருவிய காலத்து நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால், அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இவர் சைவசமயத்தைச் சார்ந்தவர் என்பது பெறப்படுகிறது. மேலும், பாயிரம் மூலம் இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனவும் தெரிகிறது. இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுகின்றனர் என்பதாக தி. செல்வக்கேசவராய முதலியார் கூறுகிறார். ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன எனக்குறிப்பிடுவார்.
சிறப்புப் பாயிரம்:
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.

வெண்பா பாடல்களாக அமைந்த ஆசாரக்கோவை நூலின் 100 பாடல்களில் மக்கள் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறப்படுகின்றன. உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்யவேண்டும் போன்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டுக்கும் வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும், எவற்றைச் செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம். இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே என்பதை  இந்நூலாசிரியரின் கீழ்க்காணும் ‘யாவரும் கண்ட நெறி’ (16) ‘மிக்கவர்கண்ட நெறி’ (27), ‘நல் அறிவாளர் துணிவு’ (17), ‘பேர் அறிவாளர்துணிவு (19), ‘நூல் முறையாளர் துணிவு’ (61) என்ற வரிகளின் மூலம் கூறுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 26 June 2019

நறுமண பயிர்களின் மருத்துவ குணங்கள்


siragu-narumana-porutkal1
வாசனைச் செடிகள் மட்டுமே உங்கள் சுவை மொட்டுக்களை தூண்டும் ஆனால், அதிலிருந்து தாவர ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய தாவர எண்ணெய்கள், ஆண்டிஆக்சிடண்டுகள், கனிமங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அத்தியாவசியமாக தேவைப்படும் வைட்டமின்கள் ஒரு ஈர்க்கக்கூடிய பட்டியலில் இயற்றப்படுகின்றன. வாசனைச் செடிகளுக்கு மருத்துவத்தில் கூடுதல் தொடர்பு உள்ளது.
மிளகு மருத்துவ குணங்கள்:
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”
மிளகு “கிங் ஆப் ஸ்பைசஸ்” என்று குறிப்பிடப்படுகிறது.

  1. மிளகு தூள் (ஒரு தேக்கரண்டி), சர்க்கரை (ஒரு தேக்கரண்டி), தேன் (ஒரு தேக்கரண்டி) குழைத்து சாப்பிட்டால் நீண்ட நாள் இருமல் சரியாகிவிடும்.
  2. மிளகுதூள் (ஒரு தேக்கரண்டி), வெல்லம் (ஒரு தேக்கரண்டி), தயிர் (ஒரு தேக்கரண்டி) – காலையில் குழைத்து தொடர்ந்து சாப்பிட்டால் தலை பாரம், மூக்கு அடைப்பு ஆகியவை குணமாகும்.

மொழிப்போர் !!


siragu mozhippor1
அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க! பெரியார் வாழ்க! திராவிடம் வெல்க! உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! மார்க்சியம் வாழ்க! போன்ற முழக்கங்கள் இந்திய துணைக்கண்டத்தையே தமிழ் நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக தாய் மொழியான தமிழில் உறுப்பினர்கள் பதவி ஏற்றது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. சனாதனம் முழு பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற நிலையிலும் எந்த தத்துவம் தமிழர்களுக்கு இந்த துணிவை தந்திருக்கின்றது என்று வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 100 ஆண்டுகள் இந்த மண்ணில் பெரியார் என்ற தத்துவப் பேரரசன் போட்டுத்தந்த கருத்தியல் பலம் நமக்கு துணிவை தந்து கொண்டே இருக்கும் என்று வரலாறு மீண்டும் பொறித்துள்ளது. இதில் சில சில்வண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 2009 க்குப் பின் தொடங்கிய முழக்கமது என்று சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கின்றனர். திராவிடர் இயக்கத்தின் மறுக்க முடியாத வெற்றியை தங்கள் பெயரின் கீழ் போட்டுக்கொள்ளும் கீழ்த்தரமான செப்படி வித்தைகளை நொறுக்க மொழிப்போர் குறித்த வரலாற்று நிகழ்வுகளை போராட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1938 ஏப்ரல் 21 அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்கள் இந்தியைக் கட்டயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சோமசுந்தர பாரதி ஆகியோர் இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர் பரப்புரை செய்தனர். “புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கி இருக்க மாட்டேன்! என்று சட்டமன்றத்தில் கூறிய ராஜகோபாலச்சாரி இறுதியில் 1940 பிப்ரவரி 21 இந்தித் திணிப்பு திட்டத்தை நீக்கி ஆணை பிறப்பித்தார்.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர் வெற்றி நமக்கே. ஆனாலும் இந்தியம் மீண்டும் 1948 ஜூன் 20 இந்தியைத் திணித்தது. 1948 ஜூலை 17 ஆம் நாள், சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியார், அண்ணா, திருவிக ஆகியோர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களை திரட்டினர். 1948 செப்டம்பர் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாடெங்கும் மறியல் நடைபெற்றது. அன்றைய தினத்தில் தான் கலைஞர் அவர்களுக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணப்பந்தலில் இருந்த கலைஞர், இந்தித் திணிப்பு மறியல் முழக்கம் கேட்டதும், அதில் கலந்து கொள்ள சென்று விட்டார். பின் ஒருவாறு திருமண வீட்டார், மறியல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று கலைஞரை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை விட இந்தித் திணிப்பை எதிர்ப்பது தான் முதல் கடமை என்ற எண்ணம் கொண்ட தலைவர்களை வளர்த்தெடுத்தது திராவிடர் இயக்கம். 1950 ஜூலை 18 கட்டாய இந்தியை ஒழித்து அரசு ஆணை பிறப்பித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 25 June 2019

கூடங்குளம் அணு உலையில் சேகரிக்கப்படும், அணுக்கழிவின் பேராபத்தை உணர்வோம்!


siragu koodankulam1
தற்போது, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல வழிகளிலும் பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. மீத்தேன், ஹைட்ரோகார்பன், 8 வழி சாலை, நியூட்ரினோ, கெயில் குழாய் பாதிப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடிநீர் பிரச்சனை, தகுந்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள கூடங்குளம் அணு உலை என ஏராளம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது நம் மீது தாக்கப்படும் பேராபத்து என்னவெனில், அணுக்கழிவை கொட்டுவதற்கான மையத்தை கூடங்குளம் அணு மின் நிலையத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகவும் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு முன்பாக, சற்று சுருக்கமாக கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய ஒரு திட்டத்தின் விளைவு தான் கூடங்குளம் அணு மின் நிலையம். இது 1988-ல், அன்றைய பிரதமர் திரு. ராஜிவ் காந்தியும், அப்போதைய ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கார்பசேவ்வும் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஆனால், அதன் பிறகு, ரஷ்யா பல நாடுகளாக பிரிந்த நிலையில், இந்தியா, அணுக்கரு வழங்கும் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தை கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆதலால் இத்திட்டம் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. ஒன்றுபட்ட ரஷ்யாவின், உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை வெடித்து சிதறி, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கி விட்டது. பல லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். இன்றளவும் கூட அதன் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அது ஆகிவிட்டபடியால், மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறிவிட்டார்கள் என்ற வரலாறு நம் கண் முன்னே பதிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள்


siragu enkunaththaan2
முன்னுரை:
‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன?
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.(குறள்: 9)
எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் குறித்த குறள் இது. அவ்வாறு வணங்காத தலையானது சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி, உணர்வற்ற உடல் போன்ற புலனில்லாத பொறிகளுக்கு ஒப்பாகும் என குறள் குறிப்பிடுகிறது. அதாவது மூளை செயல்படாத ஒரு மனித நிலை/தலை. அவ்வாறு வணங்காதாரை அறிவற்ற மனிதர் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வணங்கப்பட வேண்டியவர் யாரென வள்ளுவர் குறிப்பிட்டார் என்ற கருத்து பேதங்களும் உண்டு. ஆனால், இக்கட்டுரையின் மையக்கருத்து அதுவன்று. எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழ் அகரமுதலி எண்குணத்தான் என்பதை எட்டுக் குணங்களையுடைய கடவுள், அருகன், சிவன் எனப் பொருள் விளக்கம் தரும். ஆனால் குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எண்குணங்கள் என்பதற்கு பற்பல வகையில் விளக்கம் தர முற்பட்டது தெரிகிறது.

ஆங்கிலத்தில் இக்குறளின் எண்குணத்தான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுதும் “who is possessed of ‘the Eight-fold Excellence,” என்றும் “eight attributes” என்று கொடுப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 19 June 2019

இந்தியின் தோற்றம்


Sanskrit verse from Bhagavad Gita
அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது. உருது சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா எழுத்துரு கொண்டது உருது. மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம். இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான், மெசபடோமியா எனப்படும் ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.
இந்தி இந்தியாவின் அடையாளமா?

முகலாயர் ஆட்சியில் பிறந்த ஒரு மொழி எப்படி இந்தியாவின் அடையாளமாகும்? சுமார் 500 ஆண்டுகள் வரலாறு மட்டுமே கொண்ட இளம் மொழி எப்படி தேசிய மொழியாக முடியும்? முகலாயரின் ஆட்சி மொழியான உருது ஆங்கிலேயர் ஆட்சியில் நவீன இந்தியாக வடிவெடுத்தது. இந்தி எந்த விதத்திலும் மற்ற மொழிகளைவிட உயர்ந்தது அல்ல, அதை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டிய அவசியமும் அல்ல.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.