Monday, 16 December 2019

எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி (Thomas Wakely) என்ற ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் (WHO), பல்கலைக் கழகக் கல்லூரி, இலண்டன், (University College, London), திசுங்குவா பல்கலைக் கழகம், பெய்ஜிங் (Tsinghua University, Beijing) உட்பட உலகின் மிக உயர்ந்த 33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
siragu edharkaaga1

இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு தானிய உற்பத்தி 2% குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புவி வெப்ப உயர்வு, ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணக்கார நாடுகளின் குழந்தைகளின் உடல் நலத்தையும் ஏற்கனவே பாதித்து உள்ளது என்றும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மருத்துவ அறிவியல் – பகுதி – 2


siragu iyarkai maruththuvam
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து(950)
அதாவது மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை கண்டறியவேண்டும். நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் மருந்து கொடுக்கவேண்டும். மருத்துவன் நோயைப்பற்றிய நுண்ணறிவும், அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். கொடுக்கும் மருந்து நோயைக் குணமாக்காவிட்டாலும் சரி, பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நோயாளியின் பிணிஅறிந்து  கவனித்துகொள்ளும் உதவியாளர் இருக்கவேண்டும் என்பன போன்றனவற்றை மருத்துவச் செயல்முறைகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வாயுறை வாழ்த்து என்னும் அறிவுரை பற்றி  எடுத்தியம்பும், தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர். இதனை வேம்பும் கடுவும் போல (தொல்காப்பியம், பொருள்-417) என்ற நூற்பாவின் மூலமாகத் தொல்காப்பியர் காலத்தில் வேம்பும் கடுகும் மருந்தாகப் பயன்பட்டிருந்தன என்பதையும் நோயும் அதற்கான மருந்தும் வகுக்கப்பட்டிருந்தன என்பதையும் அறிய முடிகிறது. இச்செய்தி தொல்காப்பியரின் மருத்துவ அறிவை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காலம் இப்படியே போகாது… (சிறுகதை)


siragu kuruttaattam1
“என்ன தாயி ஒரு மாதிரி இருக்க? ஒடம்பு ஏதும் சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லம்மா, நான் இஸ்கூலுக்கு போயிட்டு வரேன்”
“சரிம்மா”
மருதாயி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் தாய் அஞ்சுகம் வீட்டு வேலை செய்து தான் அவர்கள் பொழப்பு ஓடுகின்றது. அஞ்சுகத்தின் கணவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். ஏதோ கொஞ்சம் பணம் வரும். மருதாயி அவர்களுக்கு ஒரே மகள். எப்படியும் அவளை உசந்த படிப்பு படிக்க வச்சிரணும்னு இருவருமே வாயை கட்டி வயித்தை கட்டி உழைத்தார்கள்.
அஞ்சுகத்திற்கு ரெண்டு நாளாக காய்ச்சல், வீட்டில் ஒரு சமையலும் செய்ய முடியவில்லை. எப்படியும் இன்னைக்கு புள்ளைக்கு எதாவது செஞ்சு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டே கடை வீதிக்கு தளர்வாக நடந்து வந்தாள். .

“இந்தா அஞ்சுகம், உம் பொண்ணு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு போகச் சொல்லு”, என்று மீனாட்சி மாமி கூறினாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 13 December 2019

மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம்

தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.
siragu 13aam-ulagil-oru-kadhal-book-cover

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 December 2019

தொழில் நுட்பவியல்

பண்டைத் தமிழர் புவியியல், பயிரியல், உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக விளங்கியுள்ளனர். அவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன. அவற்றுள் தொழில் நுட்பவியல் குறித்த செய்திகள் மட்டும் ஈண்டு ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்ககாலத் தொழில் நுட்பவியலுக்கு அக்காலத்து எழுந்த கட்டிடங்கள், அரண்கள், நகரமைப்பு, கப்பல்கள், போர்கருவிகள் ஆகியன சான்றாக உள்ளன. அவைகள் குறித்த செய்திகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டிடக்கலை:
siragu tholil nutpaviyal1

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனை திட்டமிடப்பட்டுச் சிற்பநூல் வல்லாரால் கட்டடப்பெற்றது. மன்றங்கள், நாளோலக்க மண்டபம், படைவீடு, கருவூலம், வழிபடு தெய்வங்களுக்குரிய கோட்டங்கள், அட்டிற்சாலை, இளவேனில் மண்டபம், பள்ளியறை, அரசியின் கோயில்மாடம், மாளிகைக் கூடம், கோபுரம், யானைத்தறி, குதிரைக் கொட்டில், பயிற்சிக்கூடம் முதலான அமைப்புகளுடன் அரண்மனை அமைக்கப்பட்டிருந்தது. கட்டடக்கலை வல்ல பொறியாளர் நுண்ணிய நூலைப் பிடித்து மன்னர்கேற்ப அரண்மனை அமைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றி மாடங்களும், அவற்றை வளைத்து மதிலும் கட்டப்பட்டன. வாயிலருகில் கொற்றவை கோயில் கட்டப்பட்டது. வாயிற்கதவுகளிரண்டிலும் உத்திரம் என்னும் மீனின் பெயர் கொண்ட உத்திரக் கற்கவியில் இரண்டு குவளை மலர்களைப் போலச் செய்யப்பட்ட கைப்பிடிகள் செருகப்பட்டன. அவை தாழ்ப்பாளுடன் அமைத்தவை. கைவன்மை மிகுந்த கருமான் பரித்த இரும்புசிட்டியால் பிணித்துச் செவ்வரக்கிட்டு முடுக்கிச் செய்யப்பட்டதால் கதவுகள் குற்ற மற்றவையாக இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 3 December 2019

மண்ணியல்


siragu manniyal2
மண்ணியல் என்பது மண்ணின் வகைபற்றிப் பழக்கும் அறிவியல் மட்டும் அன்று. மண்ணியல் என்பதை ஆங்கிலத்தில் என்பர். புவி பற்றிய அறிவியல். அறிவியல் என்னும் மரத்தின் கிளை மண்ணியல். எல்லா அறிவியல் துறையும் நிரூபித்தல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கும். ஆனால் மண்ணியல் மட்டும்தான் ‘இப்படி இருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும். மண், கல், பாறை, அதன் வகைகள், நீரியல் வானம், விண்மீன், சூரியக்குடும்பம், கோள்கள், கற்படி உருவங்கள், படிகங்கள் பற்றிப்படிப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், கடல்கோள் பற்றிப்டிப்பதும் மண்ணியல் ஆகும். இயற்பியல், வேதியியல் துறைகள் அறிவு, புவி அமைப்பியல் பற்றிய கருத்துகளும் இடம்பெறும் இது குறித்து ‘செம்மொழி இலக்கியங்களில்’ சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வு நோக்கில் சுருங்கக் காணலாம்.
தொல்காப்பியர் விண்வெளி விஞ்ஞானி

தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் கி.மு 711 இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 December 2019

மருத்துவ அறிவியல்

siragu medical2
ஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக் கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன என அறிகிறோம். மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.
ஐரோப்பியர்கள் வந்த பிறகு அலோபதி மருத்துவமுறைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துள்ளது என்றாலும், தமிழர்கள் காலங்காலமாகத் தனித்துவமான மருத்துவ முறைகளைக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றில் காணமுடிகிறது. இத்தகைய மருத்துவத்தை தமிழர் மருத்துவம் அல்லது தமிழ்மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புற மக்கள் குறித்த வாழ்வியல் வழக்காறுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தை நாட்டுப்புற மக்களே பெரும்பான்மையாக கையாளுவதால் இதனை நாட்டுப்புற மருத்துவம் என்பர். தமிழகக் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம், கைமருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம் என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.