Monday, 24 February 2020

பெரியபுராணமும் பெரியகோயிலும்


siragu periya kovil6
“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.”
என இவ்வாறாக வியப்புக்குறியுடன் துவங்கும் கட்டுரை “பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்” என்ற தலைப்பில் ‘எழுத்துச் சித்தர்’ என்று குறிப்பிடப்படும் பாலகுமாரன் அவர்களால் பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டக் காலத்தில் எழுதப்பட்டு, அது நாளேட்டிலும் வெளியானது [1] (மீண்டும் அண்மைய தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வின் பொழுது, மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இதே கட்டுரையை “ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்” என்ற தவறான ஒரு தலைப்பில் சிவகுமார் எழுதியதாகத் தினமணி வெளியிட்டது [2] என்பது இங்கு கட்டுரை சொல்ல விரும்பும் கருத்துக்கு அப்பாற்பட்டது).

இக்கட்டுரையில் பாலகுமாரன், “மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா? கலைஞர்கள் செய்திறனா? இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஜெயகாந்தனின் சாளரம் காட்டும் நாகரீகம்


siragu jeyakandhan1
ஜெயகாந்தனின் சிறுதைகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்” தொகுப்பில் சாளரம் என்ற கதையை தேர்ந்தெடுத்துள்ளேன். இச்சிறுகதையில் நடந்திருக்கும் செய்தியை மறைமுகமாக கூறியுள்ளார். அப்படியென்றால் இக்கதையை புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை படிக்க வேண்டும் ஏனென்றால் நடைமுறைக்கு மாறான விசயத்தை பார்க்கும் பொழுது நாமும் அதை அப்படியே கூறக்கூடாது என்று நாகரீகமாக இக்கதையை கையாண்டுள்ளார்.
சாளரத்தின் தலைப்பு பொருத்தம்

சாளரம் என்பது சன்னல் அவர் வீட்டில் உள்ள சாளரத்தை அவர் திறந்ததே கிடையாது. ஏனென்றால் அது வாடகை வீடு. அதனுடன் அந்த சாளரத்தை திறந்தால் கீழ்வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி தெரியும். ஒருநாள் புழுக்கமாக இருக்கிறது என்று சாளரத்தை திறந்த பொழுதுதான் ஒரு காட்சியை கண்டார். அக்காட்சியை வைத்து வேறு ஒரு கதை எழுத முடிவு செய்தார் ஆனால் அக்கதைக்கு ஏற்ற தலைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கும். பொழுது வேறு ஒரு சாளரத்தின் வழியே பார்க்கிறார். மீண்டும் ஒரு அவருவருப்பான விசயத்தை அவரால் காணமுடிந்தது. அதைக் கண்டவுடன் தன் கதைக்கு ஏற்ற தலைப்பு ‘‘மிருகம்” என்று வைத்தார். மிகுந்த சந்தோசம் அவருக்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று இறுமாப்பு அடைந்தார். எந்த சாளரத்தின் வழி கேள்வி எழும்பியதோ அந்த சாளரத்தின் வழியே பதிலும் கிடைத்தது என்று உற்சாகம் அடைந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 13 February 2020

புதிய வார்ப்புகளில் மனிதநேயச் சிந்தனைகள்


siragu puthiya vaarppugal1
இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி. இவை மனிதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனால் மனிதனுக்குப் படைக்கப்படுகிறது. மனிதன் தன்னலம், பொதுநலம் என இரண்டு நிலைகளில் வாழ்கிறான். தான் தனது எனும்போது அது தன்னலம். பிற மனிதனின் நலன் விரும்பும் தன்மையைப் பெறும்போது அது பொதுநலம் எனப்படுகிறது. அவ்வகையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்;’‘ சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் மனிதநேயச் சிந்தனைகள் பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மனிதநேயம்
இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம், பேச்சளவிலும், எழுத்தளவிலும் மட்டும் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கியப் பயணத்தில் தொன்று தொட்டு மனிதநேயச் சிந்தனைகள் தொடர்ந்து வருகின்றன.
‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றும் அறியேன் பராபரமே’‘
எனத் தாயுமானவரும்,
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’‘ என்று வள்ளலாரும்
‘‘ஏழை என்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்று இந்தியாவில் இல்லையே’‘
எனப் பாரதியாரும் பாடிய பாடல்கள் மனித நேய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

அன்பு, பாசம், பற்று, ஈவு, இரக்கம், கருணை, பண்பு, சகோதரத்துவம், தாய்மை போன்றவைகள் மூலம் மக்களிடம் மனிதநேயத்தை உணரமுடிகிறது. கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நேசிப்பதும், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனோடு மனிதன் இணைந்து அன்பு செலுத்தி மகிழ்வோடும் வாழ்வதுமே மனித நேயமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 11 February 2020

புகழ் நிலைத்திருக்கும்!


Siragu kobe bryant1
மரணம் வலி மிகுந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சில மரணங்கள் என்றென்றும் அச்ச அதிர்வலைகள் தரும் வல்லமை மிக்கது. ஒரு நொடி நம்மை அந்த நிலையில் சிந்தித்துபப் பார்க்கும்போது உயிர் வரை நடுக்கத்தை உணர முடியும். கண்ணிமைகளால் கூட துயரத்தின் வலியை அறிய முடியும், அப்படி ஒரு மரணம்தான் கூடைப்பந்து வீரர் Kobe Bryant மற்றும் அவரின் 13 வயது மகள் Gianna விற்கு நடந்தது. அவர்களோடு இன்னும் 7 பேர் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்கள். Kobe Bryant தன் சிறு வயது முதலே கூடைப்பந்தில் ஆர்வம் கொண்டு விளையாடி 5 முறை தான் விளையாடிய Lakers அணிக்காக வெற்றியை ஈட்டித் தந்து championship வென்றவர். அவருடைய மகள் 13 வயது Gianna தன் தந்தையைப் போலவே கூடைப்பந்தாட்டத்தில் முன்னனி வீராங்கனையாக திகழ்ந்தார்.

Kobe Bryant இன் இந்த மரணம் பல அதிர்வலைகளை அவர் ரசிகர்கள், நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு செய்தியை கவனிக்க நேரிட்டது. Gianna வோடு சேர்த்து Kobe – க்கு 4 மகள்கள். அவரின் கடைசி மகளுக்கு இப்போது தான் 7 மாதங்கள். ஒரு பேட்டியில் Kobe Bryant – யிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. உங்களுக்குப் பின் உங்கள் கூடைப்பந்தாட்ட முறைகளைக் கொண்டு செல்ல ஒரு மகன் வேண்டாமா? அப்போது அவர் மகள் Gianna அருகில் இருந்து “நான் இருக்கிறேன்”(I am there to carry the legacy of my father. Son is not needed for that) என்று பதில் கொடுத்தாராம். அந்த வீரங்கனையையும் நாம் இந்த விபத்தில் இழந்தோம் என்பதே வேதனை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 6 February 2020

“புதிய வார்ப்புகள்” சிறுகதையில் பாத்திரப்படைப்புத் திறன்


siragu puthiya vaarppugal1
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் ஜெயகாந்தன். அவரது படைப்புகள் மூலம் இச்சசமூகத்திற்கு ஆற்றிய பணிகள் பல. அவர் தனது படைப்புகள் மற்றும் பாத்திரங்கள் வாயிலாக பெண்ணடிமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கை போன்றவற்றை அவர் சாடியுள்ளார்.
ஜெயகாந்தனின் படைப்புகளில் இடம்பெறும் மாந்தர்கள் உண்மையில் நடமாடும் மக்களைப்போல காட்சியளிக்கின்றனர். உண்மை மக்களுக்காக வருந்தி கண்ணீர் விடுவது போல் அவர்களுக்காகப் படிப்பவர்கள் கண்ணீர் விடுகின்றனர். அவ்வாறே சினம் கொள்கின்றனர், வெறுக்கின்றனர், மகிழ்கின்றனர். கற்பனை மாந்தர் உயிரும் உணர்ச்சியும் மிக்க வாழ்வு பெறுமாறு ஜெயகாந்தன், தனது பாத்திரங்களை படைத்துக் காட்டியுள்ளார்.
புதிய வார்ப்புகள் எனும் சிறுகதைத் தொகுப்பு ஜெயகாந்தனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுள் ஒன்றாகும். இக்கதைத் தொகுப்பில் அமைந்துள்ள கதைகளில் உள்ள பாத்திரங்கள் நடப்பியல் சார்ந்த மனிதர்களாகவே விளங்குகின்றனர். குறிப்பாக புதிய வார்ப்புகள் என்ற கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்ந்து தருகின்றது.
இந்து

இந்து, இவள் புதியவார்ப்பு சிறுகதையின் தலைமைப்பாத்திரம் ஆவார். இவள் தன்னை புதிய வார்ப்பாய் வார்த்துக்கொள்வதால் தன் குடும்பம் மற்றும் சமூகத்தையும் புதிதாய் வார்க்கும் சிற்பியாகிறாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 5 February 2020

புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல் – (பகுதி -2)

நெருப்பு
siragu neruppu1
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நெருப்பு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அக்காலத்தில் நெருப்பை உண்டாக்க ஞெலிகோல் (தீக்கடைக்கோல்) பயன்படுத்தப்பட்டது. நிரந்தரமான வீடுகளில் வாழும் மருத நில மக்கள் இதை எந்நேரத்திலும் எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் தாழ்வாரத்தின் முன்கூரையில் செருகிவைத்து இருந்தார்கள் (பாடல் 315) குறிஞ்சி, முல்லை நில மக்களும் வேட்டைக்குச் செல்பவர்களும் எப்பொழுதும் கையிலேயே வைத்து இருந்தனர் (பாடல் 247,33,1501).
சடங்குகளும் பழக்க வழக்கங்களும்
பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சடங்குகள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத கூறுகளாக இருந்தாலும் புறநானூறில், பிறப்பின் போதும், திருமணத்தின் போதும் பின்பற்றப்படும் சடங்குகளைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை.
போருக்குப் புறப்படும் முன்னே அரசர்கள் வீரர்களுக்குக் கள் வழங்கும் பழக்கம் 258,262,286,290,292-வது பாடல்களில் காணப்படுகிறது.

மன்னர்கள் இறக்கும் பொழுது அவர்களுடைய உடல்களை எரிக்கும் வழக்கமும் (பாடல்கள் 231,239,240,245) முதுமக்கள் தாழியில் இட்டுக் கவிழ்த்துப் புதைக்கும் வழக்கமும் (பாடல்கள் 228,238,239) இருந்தன என்று தெரிகிறது. எரித்தாலும், புதைத்தாலும், அதன்பின் பிண்டம் இடுதலும் (பாடல் 234) நடுகல் நட்டலும் (பாடல்கள் 221,223,232) ஆகிய சடங்குகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2/

Monday, 3 February 2020

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?


siragu thiruvalluvar yaar2
திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை. சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.