Sunday, 31 May 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-3

கேள்வி: தற்காலச் சூழலில் காட்டுயிர்களைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
mukilan nerkaanal16பதில்: இது ஒரு தனித்துவமான பிரச்சனை அல்ல. இயற்கையை அழித்ததினுடைய ஒரு பகுதியாகத்தான் இன்று காட்டுயிர்ச் சூழலும் பாதுகாக்க முடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக நாம் பார்த்தோம் என்றால் இன்று நம்முடைய நாடாகச் சொல்லப்படக்கூடிய இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் சொல்லப்படுகிறது. மயில் தமிழ்தேசியக் கடவுள் என்று சொல்லக்கூடிய முருகனுடைய வாகனமாகவும் சொல்லப்படுகிறது. மயிலை நாம் சிறிய வயதில் இருக்கும் பொழுது மயில் தோகைகளை எடுத்து அது குட்டிபோடும் என்று கருதி புத்தகங்களுக்குள் வைத்துக் கொண்டு சென்ற அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது, உங்களுக்கு இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. பலருக்கும் அது இருந்திருக்கும். மயில் எல்லோராலும் மிகவும் பார்த்து பரவசமடையக்கூடிய பறவை. ஆனால் இன்று அந்த மயில் என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக பார்க்கப்படுகிறது. காரணம் மயிலினுடைய பெருக்கம் இன்று அளவு கடந்து போய்விட்டது.

ஏன் இந்த மயில் பெருகிவிட்டது என்று யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி. விவசாயி போடக்கூடிய அனைத்து பயிர்களையும் இந்த மயில் சென்று அழித்து விடுகிறது. எப்படி திடீரென்று இவ்வளவு மயில்கள் பெருகிவிட்டது என்று பார்த்தால், இதில்தான் காட்டுயிர்ச் சூழலுக்கான சூட்சுமம் இருக்கின்றது. இங்கே இயற்கை உயிர்ச்சூழல் பண்பை வைத்திருக்கிறது, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற ஒரு சார்பு தத்துவத்தை வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கே காட்டுப் பகுதிகளில் பார்த்தோம் என்றால் குட்டை மரக்காடுகளில் குறிப்பாக காட்டுப்பூனை, கீரி, வங்காநரி போன்ற பல்வேறு உயிரினங்கள் இருக்கும். இந்த உயிரினங்களின் மிக முக்கியமான உணவு மயில் முட்டை. இந்த மயில் முட்டையை இவ்வுயிரினங்கள் தேடிச்சென்று சாப்பிடும். அப்பொழுது இயல்பாக இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது இங்கே மயிலால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 29 May 2015

போதை

bothai2
போதை, உண்மையான துறவிகளைத் தவிர, பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தது. சுயத்தை இழந்து கிளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதே போதை. செய்யும் செயலில் போதை, எண்ணும் எண்ணங்களில் போதை, எழுதும் எழுத்துகளில் போதை, படிக்கும் வார்த்தைகளில் போதை, அனுபவிக்கும் கலைகளில் போதை, இவை ஒன்றும் இல்லாவிட்டால், அருந்தும் மதுவின் போதை! மதுவின் போதை அளிக்கும் செயலற்ற தன்மை, செயலூக்கம் இல்லாதவர்களுக்கு, உழைப்பை வேண்டும் மற்ற  போதைகளுக்கு மாற்றாக கிடைத்த வரப்பிரசாதம்! இன்று ஒரு மாநிலமே செயலூக்கம் இல்லாத இந்த மனிதர்கள் அருந்தும் மதுவின் மூலம் அடையும் வருமானத்தில் ஆட்சியை நிகழ்த்துகிறது.
bothai1
தமழ்நாட்டில் வாழும் நல்லூழ் பெற்றவர்களுக்கு, கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, போதை என்றாலும் TASMAC என செல்லமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (Taminadu State MArketing Corporation) என்னும் தமிழக அரசு நிறுவனம் என்றாலும் ஒன்றுதான். நாகரீகத்தில் செழித்திருந்த தமிழினத்தை மதுப்போதையில் ஆழ்த்தி, அவர்கள் சம்பாத்தியத்தையும் ஆரோக்கியத்தையும் பறித்தெடுத்து, வரும் வருமானத்தில் அவர்களை இலவசம் என்னும் போதையில் அமிழ்த்தி நாட்டையும் பரிபாலனம் செய்யும் அரசுகளின் செயல்பாடுகள் அளிக்கும் போதையில் வாழுமாறும் செய்யும் பெருந்தொண்டாற்றி வரும் நிறுவனம் இந்த TASMAC. ஒருவேளை தமிழர்களாகிய நாம், ஒரு சமூகமாக, இதை உள்ளூர விரும்புகிறோமாக இருக்கும். இல்லையெனில், அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து மதுவுக்கான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்போம். அல்லது நம் அறிவுஜீவிகள் இதனை அறிவுத்தளத்தில் எடுத்துச்சென்று, போதுமான களப்பணியாளர்களை உருவாக்கி இருக்க மாட்டார்கள் – அந்த செயலின்மைக்குக் காரணம் எதுவாக இருக்கும்? அரசாங்கங்களை அண்டிப்பிழைக்கும் அறிவுஜீவிகள் அல்லது தம் அறிவை அடகு வைத்தவர்கள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 28 May 2015

தமிழ் தொழில்நுட்பத்தில் சில இணையதளங்கள்

tamil website
கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அதிகமாக ஆங்கில இணைய தளங்களில் மட்டுமே முன்பு காணமுடிந்தது. ஆனால் தற்பொழுது தமிழில் தொழில்நுட்ப இணையதளங்கள் நிறைய நடத்தப்பட்டு வருகிறன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
கணினி தமிழன்:

இந்த இணையதளத்தில் கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மற்றும் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகிய மென் பொருள்களைப் பற்றிய சந்தேகங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள் ஆகியவை பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் கணினி பற்றிய காணொளிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் காண http://kaninitamilan.in/ என்ற சுட்டியை சொடுக்கவும்.
தொழில்நுட்பம்:
இந்த இணையதளத்தில் இலவச மென்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் கணினி தொடர்பான பல தகவல்கள் மற்றும் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 May 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – பகுதி-2

mukilan nerkaanal5
கேள்வி: இயற்கையை அழிக்கும் மக்களிடமிருந்து இயற்கையைக் காப்பாற்ற அரசும் மக்களும் பின்பற்றவேண்டியவை எவை?
பதில்: மக்கள் இயற்கையை அழிக்கிறார்கள் என்று சொல்வது ஒரு தவறான வாதம். மக்கள் இயற்கையோடு இயைந்து வாழக்கூடியவர்கள்தான். இன்றைக்கு மிகப்பெரிய மக்களாட்சி நிலவுகின்ற நாடு எனப் பேசிக்கொள்கிறோம். ஆனால் ஏற்கனவே நிலவுடைமை சமுதாயமாக இருந்த மன்னராட்சி நிலவிய காலத்தில் கூட இயற்கையைப் பாதுகாப்பதற்காக இயற்கையோடு இயைந்து வாழக்கூடிய வேலையைத்தான் அனைவரும் செய்தார்கள். நம்முடைய தமிழகத்தில்தான் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தது. இது எல்லாம் இன்று மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதல்ல. இதை மக்களாட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதும் அல்ல. இதெல்லாம் ஏற்கனவே இங்கே மன்னர்களாக நிலவுடைமை சமூகம் இருந்த காலத்திலே கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சமூகம்.

mukilan nerkaanal8ஒரு தமிழ்ச் சமூகம் என்பது ஒரு ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது என்று சொல்லும் பொழுது, நாம் இதை பழம்பெருமைக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசி வருகிறார்கள். நாம் அந்தப் பெருமையில் இருந்து பேசுவதில்லை. ஐந்தாயிரம் ஆண்டு காலம் என்று சொல்லும் பொழுது இந்த சமூகத்திற்கு ஐந்தாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட அறிவு இருக்கிறது. அப்படி ஒவ்வொன்றையும் காரண காரியத்தோடு அறிந்து அதை உருவாக்கிய சமூகம் இது. அப்படி இயற்கையோடு இந்த சமூகம் தொடர்ந்து இசைந்து பேணிக்கொண்டிருந்தது. ஆனால் முதலாளித்துவ சமூகம் உருவான பின்பு விவசாயம் என்பது தொழிலுக்காகவும், தொழில் என்பது விவசாயத்திற்காகவும் என்ற நிலையில்தான் முதலாளிய சமுதாயம் உருவாகியிருந்தது. அப்படி இருந்தபொழுது இந்த விவசாயத்தையும் இயற்கையையும் தொழிலுக்கு பயன்படுத்துவது என்ற பெயரில் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய கச்சாப்பொருட்களை வைத்து தொழிலை செய்வது, தொழில் மூலம் உற்பத்தியாகக்கூடிய பண்டங்களை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விநியோகிப்பது என்ற சமூகப் பிரிவினையை இயற்கை வளங்களை கொள்ளையடித்து தனது பணப்பையை பெருக்குவது, இயற்கை வளங்கள் எவ்வளவு சேதமுற்றாலும் அதைப்பற்றி கவலை இல்லை, தன்னுடைய பணப்பையை பெருக்குவது என்ற அடிப்படையிலே முதலாளிய சமூகம் மிகக்கொடூரமான வகையிலே ஏகாதிபத்தியமாக, தன்னுடைய நாட்டை சுரண்டுவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளையும் சுரண்டுவது என்ற நிலை வந்த பொழுதுதான் இயற்கையை அழிக்கின்ற மிகப்பெரிய கொடூரங்கள் வந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 19 May 2015

இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்

puvi thidamaana utpagudhi5

கூகுள் டூடுல் மே 13 ஆம் தேதி (2015) அன்று “இன்ஜ் லேமேன்” (Inge Lehmann, 1888-1993) அவர்களைச் சிறப்பிக்கும் ஓவியம் ஒன்றினை வெளியிடும் வரை இன்ஜ் லேமேன் என்பவர் யார், அவர் ஆணா பெண்ணா, எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய எந்தப் பங்களிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. கூகுளின் ஓவியத்தைப் பார்த்த பிறகு அவரைப் பற்றித் தகவல் தேடி அறிந்து கொண்டோரே பலர். அவர் டென்மார்க்கில் பிறந்த டேனிஷ் பெண்மணி என்றும், அத்துடன் அவர் ஒரு ‘புவியதிர்ச்சியியல்’(seismologist) ஆய்வாளர் என்பதும் தெரிய வந்தது. மேலும், புவியின் உட்பகுதி பாறைக்குழம்பால் ஆனதல்ல, புவி திடமான நடுப்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்தான் இந்த இன்ஜ் லேமேன் என்பதும் தெரிய வந்தது. அவர் நிலநடுக்க அதிர்வலைகளை ஆராய்ந்து புவியின் நடுப்பகுதியைப் பற்றிக் கண்டறிந்தார் என்று தெரிந்து கொண்ட அதே நேரம், நேபாளத்தில் மற்றொரு 7.3 ரெக்டார் நிலநடுக்கம் மேலும் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிட, இன்ஜ் லேமேனின் ஆராய்ச்சி முடிவுகளின் முக்கியத்துவம் மேலும் தெளிவாயிற்று.
புவியானது 1. திடமான நடுப்பகுதியையும், 2. அதன் வெளியே திரவநிலையில் பாறைக்குழம்பாலான பகுதியையும், தொடர்ந்து 3. படிம அடுக்குப் பகுதியையும், மேலே 4. புவியோடு (solid inner core, liquid outer core, mantle, and crust) என நான்கு அடுக்குகளைக் கொண்டதென்று இன்ஜ் லேமேன் 1936 ஆம் ஆண்டு தனது “P” என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிடும் வரை, புவியின் நடுப்பகுதி பாறைக்குழம்பாலானது என்றே நம்பப்பட்டு வந்தது. இந்த ஆய்வறிக்கையில், 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 18 May 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல்

mukilan nerkaanal4
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்?
பதில்: எனது பெயர் முகிலன், எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை. எனது மனைவி பெயர் பூங்கொடி, எனக்கு ஒரு மகன் இருக்கிறார் அவருடைய பெயர் கார்முகில். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். எனது மனைவி சென்னிமலையில் சொந்தமாக ஒரு கணிணியகம் வைத்து செயல்பட்டு வருகிறார். நான் பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தேன், முடித்துவிட்டு நான்காண்டு காலம் பொதுப்பணித் துறையிலே பணியாற்றினேன். பின்பு அந்த வேலையில் விருப்பம் இல்லாததால் வெளியில் வந்துவிட்டேன். எனது குடும்பம் என்பது ஒரு சிறிய குடும்பம்தான்.
கேள்வி: தங்களுக்கு சுற்றுச்சூழலியல் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?

பதில்: சுற்றுச்சூழலில் தனியான ஆர்வம் என்று ஒன்று இல்லை. சமூகத்தினுடைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது. இதற்குக் காரணம் கிட்டத்தட்ட எனக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து நான் செய்தித்தாள் படிக்க வைக்கப்பட்டேன். எப்படி என்று சொன்னால் அது ஒரு சுவாரசியமான செய்திதான். எனது வீட்டிற்கு அருகில் சுப்பிரமணியம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒரு முடித்திருத்தகம் வைத்திருந்தார். அவர் சிங்கப்பூரில் சென்று பணியாற்றியவர், அதனால் அந்தக் கடையின் பெயரே சிங்கப்பூர் சலூன் என்று இருந்தது. நான் சிறிய வயதில் முதலாம் வகுப்புப் படிக்கும் பொழுது எங்கள் ஊரில் அந்தக் கடையில் மட்டும்தான் சுழலும் நாற்காலி இருக்கும். எனது வீட்டிற்கு அடுத்ததாக இரண்டு கடைகளுக்கு அப்பால் அந்தக் கடை இருக்கும். அவருக்கு படிக்கத் தெரியாது ஆனால்....

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

Sunday, 17 May 2015

தலையங்கம் – ஐந்தாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு

thalayangam1
சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது இதழ் பல்வேறு சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தமிழருக்கு செம்மையான பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் பின்புலம் எதுவும் இன்றி நிறுவனர்களின் நன்கொடையை மட்டுமே நம்பி சிறகு நடந்து வருகிறது. இருப்பினும் கொண்ட கொள்கை எதுவும் மாறாமல் வாசகர்களுக்கு அறிவார்ந்த அடிப்படையில் வெளியீடுகள் செய்துவருகிறது. தமிழறிஞர்களின் படைப்புகளையும், நேர்மையான களச்செயற்பாட்டாளர்களின் நேர்காணல்களையும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வழங்கி வருவதில்....

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://siragu.com/?p=17293