Sunday, 31 July 2016

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி: தரம் எங்கே உள்ளது?


Siragu-engineering9

தமிழகத்தில் தற்போது வரை ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த வருடம் நடந்து முடிந்துள்ள பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஒரு இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இவர்களில் வேலைக்கு தகுதி உள்ளவர்கள் என்று பார்த்தால், மிக சொற்பமாக உள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் முதலிடத்தில் உள்ளவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பெரிய நிறுவனங்கள் இதற்கு முன்னர், கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து வளாகத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து, தத்தமது நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை அளித்து வந்தனர்.

Siragu engineering3

இம்மாதிரி வளாகத் தேர்வில் தேர்ச்சி அடைந்து, பணிக்குச் செல்பவர்களுக்கு, நிறுவனமே தங்களது வேலைக்குத் தேவையான பயிற்சியை அளித்து, பணி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.


வளாகத் தேர்வில் தேர்ச்சி அடையாமல், பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மோசம். அதுவும் கிராமங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில், பொறியியல் கல்வியை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 28 July 2016

கண்ணாடி வீடு!(கவிதை)


Siragu-kannaadi-veedu2

கண்ணாடி வீடுள்ளிருந்து
கல்லெறிந்தால்
யாருக்கு பங்கம்……?
நாம் அனுபவிக்கும் துன்பங்கள்
நாம் செயும் காரியங்களின் விம்பங்கள்
நம் நிம்மதியிலா வாழ்வு
நம் அளவிலா,அடங்காத ஆசைகள்,மோகங்கள்!
இதுவே நம் வாழ்வின்
இரகசியம்
சித்தாந்தம்

நிஜமும் கூட!
இது நமக்கு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21090

Wednesday, 27 July 2016

மனிதம்


Siragu-manitham1

நாம் வாழக்கூடிய நமது வாழ்க்கையானது, ஒருமுறைதான். நம் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாகவும், பிறருக்கு முன் உதாரணமாகவும் விளங்கக்கூடிய மகத்தான மனிதர்களின் வாழ்வியலை, சமூக அக்கறையுள்ள அம்மனிதர்களின் பதிவு தான் இம் மனிதம்,
கள்ளக்குறிச்சி ராஜா, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிபுணர்.

Siragu-manitham4

சிறைக் கைதிகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையினையும் அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களையும் அருகில் இருந்து கவனித்து, அவர்களும் இச்சமூகத்தில் தங்களது வாழ்க்கையினை வாழ்வதற்கு வழிகாட்டும் மகத்தான மனிதர்கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மனதில் தோன்ற விடாமல், நல்வழிப்படுத்தும் சமூக அக்கறையுள்ள மனிதர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 July 2016

மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள்



கிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப் போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக நாடுகளின் அரசாங்கங்களின் கவனத்திற்கும் ….

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை திட்டத்தின் குறிக்கோளின் படி, வளரும் மக்கட்தொகையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உலகளாவிய முறையில் உணவு, தீனி, தீவனங்கள் உற்பத்தியின் அளவு வரும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Siragu marabanu maatram article1


கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள் தலைமையின்கீழ் நவீன வேளாண்முறைகளை எதிர்க்கும் அமைப்புகள், தொடர்ந்து இந்த உண்மைகளை மறுத்து வருவதுடன், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் புதுமைகளைப் புகுத்தும் செம்மை வேளாண் முறைகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் நவீன உயிரியல் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படும் செம்மை வேளாண் முறைகளின் பயன்,ஆபத்து, தாக்கம் ஆகியன பற்றிய தவறானக் கருத்துக்களைப் பரப்புவதுடன், அனுமதிக்கப்பட்ட கள சோதனை முறைகள், வேளாண் ஆய்வுத் திட்டங்களைத் தடைசெய்து குலைக்கும் குற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 25 July 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம்


Siragu indhiya porulaadhaaram2

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார்கள். இந்த ஆண்டு 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) எட்டுவோம், அடுத்த ஆண்டு 10% வளர்ச்சியை எய்துவோம், 2025-இல் உலக வல்லரசாகி விடுவோம் என்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சியா, பிஜேபி ஆட்சியா என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் ஒருசில பணக்காரர்களின் தொகை அதிகரித்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இலவசப் பொருள்களை நம்புகிறார்கள். அதையே நம்பி வாக்களிக்கவும் செய்கிறார்கள். விவசாயிகள் பிழைப்புக்கு வழியின்றித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நடுத்தர மக்கள் தினசரி உயரும் விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது 1 டாலருக்கு 1 ரூபாய் என்று இருந்த மதிப்பு, இன்று 1டாலருக்கு 68 ரூபாய் அளவுக்கு வீழ்ந்துள்ளது (“வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஒருவேளை பிரதமர் மோதி, மன்மோகன் சிங் போன்ற அரசியல், பொருளாதார நிபுணர்கள் சொல்லலாம்!)

அதனால்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்று தலைப்பிடாமல் பொருளாதார மாற்றம் என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளேன்.


சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 24 July 2016

முக்கியத் தேவை


Siragu mukkiyath thevai1

விடுதலை பெற்ற இந்த 69 ஆண்டுகளில் இந்திய நாடு பெரும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றது என்று தான் நாம் இன்று வரையில் பாட நூல்களில் படிக்கின்றோம். இன்றைக்கு இந்த தொழில்நுட்ப யுகத்தில் இந்த நாட்டின் பல்வேறு துறைகள் மிக அதிகமான வளர்ச்சி பெற்றிருக்க நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியாக இந்தியாவில் இருக்கின்றதா  என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை. இன்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். இந்தியாவில் 259.5 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.19 வருமானம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்று 2011ல் நடந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 21.3% மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.  இது ஒரு புறம் இருக்க, சாதியின் பெயரால் இங்கே நடக்கும் கொடுமைகள் ஏராளம். 2020-இல் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்று ஒரு புறம் நாம் பெருமை கொண்டாலும்; இன்றும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை  சாதிய அடிப்படையில்  நடந்து கொண்டே இருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 July 2016

கவிதைச் சோலை(ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!, அஸ்தமிக்கும் மனித உறவுகள்!)



puratchi kavignar13



என் பிள்ளைகள் மூவர்
மூவரும் ஒன்றாய் இருப்பதைக்
கண்டு மாற்றான் ஒருவன் செய்யும்
சதியினை ஊனும் சதையும் எலும்புமாய்
இணைந்து வலிமையுடைய ஒற்றுமையால்
முறியடித்து வெற்றி பெறுவதில் வல்லவர்கள்!

என் பிள்ளைகள் மூவரும்
மாற்றுக் கருத்துடையராய் இருப்பினும்
உடம்பில் ஓடும் இரத்தத்திசு போல
என்றும் இணைந்தே இருப்பர்!

அவ்வரிய முத்துக்களை பெற்றெடுக்க

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21060