Sunday 24 July 2016

முக்கியத் தேவை


Siragu mukkiyath thevai1

விடுதலை பெற்ற இந்த 69 ஆண்டுகளில் இந்திய நாடு பெரும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றது என்று தான் நாம் இன்று வரையில் பாட நூல்களில் படிக்கின்றோம். இன்றைக்கு இந்த தொழில்நுட்ப யுகத்தில் இந்த நாட்டின் பல்வேறு துறைகள் மிக அதிகமான வளர்ச்சி பெற்றிருக்க நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியாக இந்தியாவில் இருக்கின்றதா  என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை. இன்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். இந்தியாவில் 259.5 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.19 வருமானம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்று 2011ல் நடந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 21.3% மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.  இது ஒரு புறம் இருக்க, சாதியின் பெயரால் இங்கே நடக்கும் கொடுமைகள் ஏராளம். 2020-இல் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்று ஒரு புறம் நாம் பெருமை கொண்டாலும்; இன்றும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை  சாதிய அடிப்படையில்  நடந்து கொண்டே இருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment