Monday, 24 October 2016

குடும்பத்தினரால் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட மனநிலை பாதித்தவர்களின் அவலம்


நுனி நாக்கு ஆங்கிலம், புரியாத மொழி பேசி சுற்றித்திரியும் மனநிலை பாதித்தவர்கள்… குடும்பத்தினரால் வாகனங்கள் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட அவலம்
தஞ்சாவூர்:
siragu-mananalam1


இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள், கொடூர கொலையை செய்தவர்களை விட மோசமானவர்கள் நாட்டில் இருக்க முடியுமா? உண்டு… உண்டு… அப்படி இருக்கின்றனர்… ஈனப்பிறவிகள் என்றுதான் கூற வேண்டியுள்ளது.
தங்களைப் பெற்ற பெற்றோர்… தங்கள் கூடப் பிறந்தவர்களை அனாதையாக விட்டுச் செல்லும் கல் மனம் கொண்டவர்கள் பற்றி தெரிய வந்த விசயமே இந்த கட்டுரையின் வடிவம் ஆகும்.

சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், ஓசூர், கோயம்புத்தூர், மதுரை என மாவட்ட தலைநகரங்களை நீங்கள் பேருந்துகளிலோ, வாகனங்களிலோ கடக்கும்போது பார்த்திருக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

விளிம்புநிலை வாழ்விலும், எழுத்துலகில் தடம் பதிக்கும் கட்டுமான தொழிலாளி


siragu-kattida-thozhilaali

மாவீரன் வாளை விடவும், மைத்தூரிகை கூர்மையானது என்பார்கள். எழுத்து அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆயுதம். எழுத்துப் பணியையே இடைவிடாது செய்து கொண்டு சாதிப்பவர்கள் ஒருபுறம் இருக்க, தனது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் எழுதிக் குவிப்பவர்களும் உண்டு. அதிலும் விளிம்பு நிலையில் நகரும் வாழ்விலும் கூட எழுத்துக்கு நேரம் ஒதுக்கி சாதிப்பவர்களும் குமரி மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கவிதைச் சோலை(நீதிக்கு இங்கு நீதியில்லை!, நீயும் வெற்றியாளனே!)


நீதிக்கு இங்கு நீதியில்லை!


Siragu-eelam

இவர்கள் கண்களுக்கு
தொடர்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகள்
தெரிவதேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
கண்களே இல்லாதவர்களிடம்!
இவர்கள் காதுகளுக்கு
எங்கள் அவலக்குரல்கள்

கேட்பதேயில்லையா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21582

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் – இறுதிப் பகுதி


(III) சித்திரபுத்திரன் விவாதங்கள் – மதங்கள் பற்றிய விளக்கம்:
siragu-angadha-writer31. சிக்கலான பிரச்சினை: ஒரு ஆத்திகனுக்கும் பகுத்தறிவாதிக்கும் இடையே  சமயங்களையும் கடவுளரையும் குறித்த ஓர் உரையாடல் நடைபெறுகிறது.   மதங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இருப்பது ஒரே கடவுள் என்று சொன்னால் இத்தனை விதமான மதங்களையும், கடவுளரையும் ஒரு  கடவுளே படைக்க வேண்டிய காரணம் என்ன? என்ற பகுத்தறிவுவாதியின் கேள்வியினால் குழப்பமடைகிறார் ஆத்திகன். கடவுளின் மகன் என்று சொல்வதற்கு, கடவுளின் தூதன் என்று சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, வேத நூல்கள் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம்?, கடவுள் வேத நூல்களைப் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?, யாரோ சொன்னார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாமா?, அப்படியானால் நான் ஒரு கடவுள் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளர் இது போல இந்து, புத்த, கிறித்துவ, முகம்மதிய, பொதுவாக என ஒவ்வொரு மதக் கோட்பாட்டையும் குறித்து பற்பலக் கேள்விகள் கேட்கும்பொழுது; பதில் சொல்லத் தெரியாதபொழுதெல்லாம், “இது ஒரு சிக்கலான பிரச்சினை, பெரியவர்களை கலந்தாலோசித்து பதில் சொல்கிறேன்” என்று பதில் சொல்லாமல் ஆத்திகன் நழுவுவது படிப்பவருக்கு புன்முறுவலை வரவழைக்கும் விதம் அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 28 September 2016

இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு


siragu-french-food2
உணவு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. நெருப்பு கண்டறியப்படும் முன் மாமிசம், காய், கனி, கிழங்கு வகைகள் பச்சையாக உண்ணப்பட்டன. பின் சமைத்து சாப்பிடும் வழக்கம் உண்டானது.
காலப்போக்கில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாமல், வியாபார நோக்கத்துடன் உணவு விற்பனை துவங்கியது. சுவைப்பவரின் விருப்பமறிந்து உணவு தயாரிக்கும்போது அதற்கு வரவேற்பு கிடைக்கும். உணவகங்களின் வளர்ச்சி இதை அடிப்படையாகக் கொண்டது.
siragu-french-food3

உணவகங்களில் சாப்பிடும்போது நம்மை மிகவும் கவர்ந்த உணவு வகைகளை வீட்டில் செய்து பார்ப்பதுண்டு. அதன் சுவையை உணவகங்களில் வழங்கப்படும் சுவையோடு ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்கிறோம். பின் நாம் சமைத்த உணவே ஆரோக்கியமானது போன்ற ஏதோவொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 September 2016

இலக்கியம் படியுங்கள் !!


siragu-ilakkiyam2

இப்போது இருக்கும் காலங்களில், பள்ளிகளில் தொழில் நுட்பத்திற்கு மற்றும் மருத்துவத் துறைக்குத் தேவையான பாடங்களை மட்டுமே விரும்பிக் கற்பிக்கும் – கற்கும் சூழல் இருக்கின்றது. ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிப்பாடங்களை மாணவர்கள் மதிப்பெண்களுக்காக கற்கின்றனரே தவிர்த்து விருப்பத்தோடு மாணவர்கள் கற்பதில்லை. அதிலும் தமிழ் மொழிப்  பாடத்தினை எட்டாவது படிக்கின்ற போதே நிறுத்திவிட்டு, நிறைய மாணவர்கள் பிரெஞ்சு அல்லது இந்தி மொழிப்பாடங்களை மதிப்பெண்களுக்காக எடுத்துப் படிப்பதை நாம் பார்க்கின்றோம். மொழிப் பாடங்கள் கற்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றே இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நம்புகின்றனர். உண்மையில் ஒரு மொழியைப் படிக்கிறபோது அந்த மொழியில் இருக்கும் இலக்கிய, இலக்கணங்களை கற்கின்றபோது படிப்போரை அது வேறு ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 26 September 2016

அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு எப்போது வைப்போம் முற்றுப்புள்ளி?


நெய்யாறு பிரச்சினைக்கு மாற்றுவழி காட்டும் முல்லையாறு அணைத் திட்டம்.
siragu-neyyaaru4

தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பதை பதைத்துக் கிடக்கின்றது. நீதிமன்ற வழிகாட்டுதலையும் தாண்டி, போராடித்தான் காவிரித் தாய், தமிழகம் வந்து பாய்கின்றாள். இருந்தும் கர்நாடகம் முழுவதும் எத்தனை பதற்றம்? கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் பலவும் தீக்கிரையாக்கப்படுவது தொடங்கி, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த விக்னேஷ் என்னும் வாலிபன் தன்னுயிரையே மாய்த்துக் கொண்டது வரை பட்டியல் போட இங்கே சங்கதிகள் அதிகம்.


காவிரியில் தமிழகத்தின் உரிமையை கன்னடர்கள் மறுப்பதற்கு கண்டனக்குரல்கள் நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் தமிழக அரசும் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அவைகளில் முக்கியமான ஒன்றாக மாறி நிற்கின்றது குமரி மாவட்டத்தின் நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.