Wednesday, 29 March 2017

மகாகவி ந.பிச்சமூர்த்தி


Siragu na_pichamoorthy1

பொதுவாக நம் இந்திய இலக்கியத் துறையில் மகாகவி என்று பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டில் வங்கத்தில் பிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பேசுவோம். பின் விடுதலை கவிகளைப் பாடிய பக்கிம் சந்திரசட்டர்ஜி பற்றிப் பேசுவோம். இது பொதுவான நம் இந்திய இலக்கியம் மீதான பார்வை.


தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மகாகவி என்று நாம் பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாணடின்; முற்பகுதியில் வாழ்ந்த சுதந்திர காலத்தில் சுதந்திர வேட்கைக்கான கவிதை பாடியசுப்ரமணிய பாரதியைப் பற்றிப் பேசுவோம். அவருக்குப் பின் பல கவிஞர்களை நம் இலக்கியம் கண்டாலும் நாம் அவர்களை பாரதியை போற்றுவது போல் போற்றுவது இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 28 March 2017

பெண்ணிய நோக்கில் குறுந்தொகை


Siragu kurundhogai-1

எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது” என்று குறுந்தொகையின் சிறப்பினை எடுத்துரைக்கிறார் உ.வே. சாமிநாதர். அகமனப் புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்டது குறுந்தொகையாகும். இக்குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எழுதிய குறுந்தொகைப்பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து என்ற அளவினை எட்டுகிறது. இப்பாடல்களைப் பெண்ணிய நோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகிறது.


குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களின் தொகுப்பாகும். இவ்வகப்பாடல்களில் செவ்விய நிலையில் காதல் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. செவ்விய நிலைக் காதல் என்பது ஒருவகையில் பெண்களுக்கு தடைப்படுத்தும் நிலையையும் தருகின்றது. மற்றொரு வகையில் அதுவே விடுதலையையும் தருவதாக உள்ளது. பெண்கள் தாங்களாகவே காதல் இன்பத்தில் ஈடுபடுதல், அல்லது ஆடவரால் வீழ்த்தப்படுதல் என்ற நிலைகளில் திருமணம் என்ற எல்லைக்குச் சென்று குடும்பம், பிள்ளை, இல்லறம் என்ற பிணைப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் காதலித்ததன் காரணமாக சிலவகை உரிமைகளையும் பெண்கள் பெறத் தகுதி உடையவர்களாக உள்ளனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26500

Monday, 27 March 2017

நைஜீரியா பொம்மைகள்


Siragu barbie-doll1

பெண் என்றாலே அழகு, மென்மை, தாய்மை என்று இந்தச் சமுதாயம் கட்டியமைத்ததின் எச்சம் தான் ஒரு பெண் குழந்தை விளையாட பொம்மைகள் வாங்கிப் பழக்குவது. அந்த பொம்மை கூட அழகாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே இங்கு எழுதப்படாத விதி. இந்தச் சமூகத்தில் குறைபாட்டை எல்லாம் கொண்டாடும் வழக்கம் உண்டு. வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சிகப்பழகு பூச்சினை முகத்தில் பூசிக் கொள்ளும் பெண்களை நம்மால் காண முடியும்.


வெள்ளை தோல் மற்றும் சாம்பல் நிற முடி, இது அழகு அல்ல, அது ஒரு நிறமி குறைபாடு. ஒரு சில மாதங்கள் மட்டுமே கதிரவன் வெளிவரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த நிறமி குறைபாடு இருப்பதால் தான் அவர்கள் வெண்மை தோல் கொண்டு இருக்கின்றார்கள். அந்த மனிதர்களின் உருவ அடிப்படையில் உருவானவை தான் பார்பி பொம்மைகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 26 March 2017

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்


440286-suicide-representational-2

உயர் கல்வி மத்திய நிறுவனங்களில் தற்போது அதிகரித்திருக்கும் மாண்வர்களின் மரணங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை. அங்கு நிலவும் சாதீய பாகுபாடுகள் நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று. ரோகித் வெமுலாவின் மரணத்தைப் பற்றிய நீதியே இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், மேலும் மேலும் பல மரணங்கள். திருப்பூர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் மற்றும் JNU நஜிப் அஹமது காணாமல் போயிருப்பது, கன்னஹையா மீது பல பொய் வழக்குகள் என பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.!


நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கும் நாம் இம்மாதிரி படுகொலைகள் நடப்பது, அதுவும் அரசு கல்வி நிறுவனங்களிலேயே நடப்பது மிகவும் அநீதி, நாட்டிற்கு பெருத்த அவமானம். வெட்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளை படுகொலைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சாதியும், மதமும் ஒரு மனிதனின் உணர்வுகளைத் தூண்டி தற்கொலை செய்ய வைக்கிறது என்றால் அவைகள் நிச்சயம் பல்கலைக் கொலைகளாகத்தான் இருக்க முடியும்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 21 March 2017

அபத்தங்கள்


Siragu abaththangal5

சுற்றிலும் தினம் தோறும் நிகழும் நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள், நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில் இருக்கும்போது உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில் அபத்தங்களாகத் தோன்றுகிறது. இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன? உண்மையை அறிய முடியுமா?


சமூகத்தின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, அவர்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகிறார்கள். சிந்தனையின் அடிப்படையின்றி உணர்ச்சிவசப்பட வைக்கப்பட்ட சமூக மக்கள், அவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆனால் அடிப்படையில் அவர்கள் யாரை எதிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமான வழிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்பட வைத்த சமூக விரோதிகள், லாபத்தை அள்ளிச் செல்கிறார்கள். சமூகம் அடுத்த உணர்சிவசப்படுதலுக்கு தயாராக நின்று கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 20 March 2017

செவ்விலக்கியங்களில் விளையாட்டு


Siragu sevvilakkiyam4

மனிதனின் உடலை வளப்படுத்துவது விளையாட்டு. மனித மனதை மகிழ்ச்சி அடையச் செய்வதும் அதுவே. மனித வாழ்வில் ஏற்படும் வெற்றித் தோல்விகளைச் சரிசமமாக ஏற்க வைப்பதும் விளையாட்டு அனுபவமே ஆகும். ‘‘செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்று விளையாட்டால் உவகை தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்.


சங்க இலக்கியங்களிலும், தொடர்ந்து எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், காப்பியங்களிலும் பல்வகை விளையாட்டுகள் குறித்த பதிவுகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. தமிழர்தம் மரபு சார்ந்த அடையாளங்களுள், பழக்கவழக்கங்களுள் ஒன்றாக நீடித்து இருப்பது விளையாட்டுத் துறை ஆகும். செவ்விலக்கிய கால விளையாட்டுகள் இன்றைக்கு வரை தமிழர்களின் புழங்குமுறையில் இருப்பது என்பது விளையாட்டு உணர்ச்சியின் தொடர்வையும், செவ்விலக்கிய கால நீட்சியையும் அறிவிப்பதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 19 March 2017

பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்


poornachandran4

சிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது?

2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளிப்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.

தங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன?


பின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால் அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக் கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே கண்ணாயினார்’. அவ்வளவுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.